Saturday, February 28, 2009

முல்லைத்தீவு கனவும் முறியடிக்கப்படும் சமரும்


கிளிநொச்சியை இராணுவத்தினர் பிடித்தவுடன் இராணுவத்தினருக்கு ஒரு தென்பை ஏற்படுத்திவிட்டது. அதனைத் தொடர்ந்து ஆனையிறவு முகமாலை விசுவமடு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு என்று இராணுவத்தினர் தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்று இராணுவத்தினரும் அரச ஊடகங்களும் ஆதாரத்துடன் வெளியிட்டுவருகின்றனர்.

ஓகே.... சரி அவர்கள் பிடித்தது உண்மைதான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் சில நாட்களாக விசுவமடு.. திருமுருகண்டி பகுதிகளில் நடைபெறும் சமர் நான் சொல்ல வில்லை அரசாங்கத்தின் பிரசாரப் பீரங்கி ரூபவாஹினிதான் இந்தச் செய்தியையும் வெளியிட்டது அப்படியால் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளில் எப்படி விடுதலைப் புலிகள் ஊடுருவ முடிந்தது.
இவ்வாறு 1995 ஆம் ஆண்டு சந்திராக அரசாங்கம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக பிடித்துவிட்டது என்று அறிவித்தது. ஆனால் நடந்தது என்ன சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, அளவெட்டி, கந்தரோடை போன்ற இடங்களில் விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்தனர்.
இன்றும் அதே நிலைதான் வன்னியில் ஏற்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவை நோக்கி 50 ஆயிரம் இராணுவத்தினர் முன்னேறினாலும் இடையில் இருக்கும் இடங்களில் இராணுவத்தை நிறுத்துவதற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகின்றது.
சரி.. சரி.. நம்மலுக்கு என்னத்துக்கு இந்த வம்பு மலிந்தால் சந்தைக்கு வந்துதானே தீரவேண்டும்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...