Tuesday, September 29, 2009

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல்

தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரம் ஏன் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். கமல் என்னும் கமல்ஹாசனை.

கமல் சினிமாவில் பிரவேசித்து 50 ஆண்டுகள் நிøறைவு பெறுகின்றது.... ஒரு தனிமனிதனாக தமிழ் சினிமாவை தனது தோளில் வேதனைகளையும் கஷ்டங்களையும் சுகங்களையும் சேர்த்து சுமந்து வருகின்ற ஒரு அற்புதக்கலைஞன்.

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல் என்ற நிலை. சுவாசிக்கும் மூச்சுத்தொடங்கி உடலில் ஓடுகின்ற இரத்தம் வரைக்கும் கமலிடம் சினிமாதான்.

இந்த 50 நெடிய வருடங்களில் தனது நடிப்பு வாழ்க்கையில் கமல் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். அவரது குறிப்பிடத்தக்க சில படங்கள் வெற்றியை ஈட்ட முடியாமல் போனாலும் உலக சினிமா ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பண ரீதியான வசூலுக்கும் மேலாக மதித்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர் கமல்.

குறிப்பாக ஹேராம் படத்தின் தோல்வி அவரைப் பெரிதும் பாதித்தது. சிம்பனி இசை, சிறந்த நடிப்பு, சர்வதேச தரத்திலான இய க்கம் எல்லாமிருந்தும் இந்தப் படத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

('இந்தப் படம் தோற்றதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் இந்த வருத்தத்தைத் தந்ததற்காக நமது ரசிகர்கள் நிச்சயம் ஒருநாள் வருந்துவார்கள்!' கமல்).

முதல்வர் கலைஞர் வாயால் கலைஞானி எனப் பாராட்டப்பட்டவர் கமல்.
புதுமைகளை விரும்பி ஏற்பவர். திரைத் தொழில் நுட்பத்தின் அத்தனை முதல் முயற்சிகளையும் ஆராய்ந்து அதை அறிமுகப்படுத்தவும் தயங்காதவர்.
சினிமா சார்நத கமலை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சினிமா தவிர்ந்த தனிப்பட்ட வாழ்க்கை கமலை எத்தனை பேருக்குப்பிடிக்கும் என்பது குறைவுதான்.
அதற்கு கமல் எனும் மனிதன் தன்னையும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய ஏன் பேசுகின்ற மனிதன் அதனால் தான் கமலை சுற்றி சர்ச்சைகளும் வந்துகொண்டிருக்கின்றது.

தெளிந்த நீரோடையான கமலிடம் தெளிவான வாதங்களை நாம் அவரது உரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
(திருமணம் என்பது மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த தான் செய்துகொண்ட ஒரு முட்டாள்தனமான காரியம் என்றும் தனக்கு விரும்பிய பெண்ணுடன் வாழ்வதற்கு திருமணத்தை தான் பயன்படுத்தியதாகவும் கமல் அண்மையில் தெரிவித்திருந்தார்.)
அதற்கு சர்சைகள் கிளம்பின... அதற்கு கமல் சொன்ன பதில் இது எனது தனிப்பட்ட கருத்த கமல் எனும் மனிதனின் கருத்து என்று தெரிவித்தார்.

அந்த கருத்தை நாம் பார்த்தால் இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் பதவிகளில் உள்ளவர்கள் எத்தனை பெண்களுடன் இருக்கின்றார்கள் அதுவும் கள்ளத் தொடர்புகள் மூலம்.

சமூகத்தினால் இதை எல்லாம் அங்கீகரிக்க முடிகின்றது.
ஏன் கமல் கூட சொல்லியிருந்தார் விவாகரத்துசட்டங்களும் விவாகரத்தும் ஏன்வருகின்றது. நமது முன்னோடிகளாலேயே இது ஏற்பட்டிருக்கின்றது. அப்போ பிழைகள் செய்தது சட்டமா? இல்லை சமுதாயமா? ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் வாழ்கின்றான் என்பதை இந்த சமுதாயம் ஏன் அங்கீகரிக்கின்றது.
என்னட கமலை பற்றி பதியப்போய் வேற பாதைய மறுகின்றது என்று நினைக்க வேண்டாம் எல்லாம் இந்த சமூதாயத்தின் மீது வருகின்ற கோபங்கள்தான்.

கமல் எத்தனை படங்களில் நடித்தான் என்பதை பார்க்காது எத்தனை பெண்களுடன் இருந்தான் என்பதைத்தான் பார்க்கும் இந்த சமூகம்.
கமல் சிறப்பாக நடித்துவிட்டார் என்று தலைப்புச் செய்திகள் போடாத நாளிதழ்கள் கூட தங்களது வியாபாரத்திற்காக கமல் விவாகரத்தை மட்டும் பெரிது படுத்திப்போடுகின்றன. இதை இந்த சமூகம் ஏன் அங்கீரிக்கின்றது?

விவாகரத்துக்களும் நடிகர்களின் அந்தரங்கள வாழ்க்கையையும் சுவைபட எழுதும் எழுத்துகள் ஏன் அவனது திறமைகளை அங்கீகரிப்பதில்லை?
உன்னைப் போல் ஒருவனும் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் கோபங்கள் ஏன் அவர்கள் கோபங்களை அடக்குகின்றார்கள் என்பது புரியவில்லை.

கமலை அரசியலுக்கு அழைக்கின்றார்கள் ஏன்? கமலது புகழை பயன்படுத்திக்கொள்ளத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஒரு நல்ல மனிதனால் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

யாருக்கும் அடிபணியாத குணம்
தனது திறமையில் நம்பிக்கை உள்ள தன்மை
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு உணர்ந்தவர் என்பதினால்தான் கமல் அரசியலை வெறுகின்றார்.
அரசியலில் கமல் நுழைந்தால் கோபங்களும் சர்ச்சைகளும் புதிய அரசியல் நோக்கங்களையும் இந்த தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

அரைத்தமாவை அரைப்பதுதானே தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவிடயம்.
தி.மு.கா.வும் அ.தி.மு.காவும் தான் தொடர்ந்து ஆட்சியில் வரலாம் அவர்கள்தான் அரைத்தமாவை அரைத்துக் கொடுக்கக்கூடியவர்கள்.

Friday, September 4, 2009

விஜய்க்கு அரசியல் சரிவருமா?

விஜய்க்கு அரசியல் சரிவருமா? சரிவராதா என்பதுதான் இன்றைய கேள்வி எல்லோர் மனதிலும்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கி அதில் வெற்றி தோல்வி காண்பது என்பதும் சர்வசாதாரமாகி விட்ட நிலையில்.... மூன்றாவது தலைமுறை நட்சத்திரமான விஜய் அரசியலில் ஈடுபட இருக்கின்றார் . அதன் முதற்கட்டமாக ராகுல் காந்தியுடனான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் தனித்து போட்டியிட்டால் எத்தனை வீதமானவர்கள் அவருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்?
இதற்கு பழைய உதாரணங்கள் எதற்கு நமக்கு அண்மைய உதாரணமான சிரஞ்சிவியையே எடுத்துக் கொள்ளலாம்.
விஜயகாந்த் அரசியலில் இறங்க முன்பு அவரின் சினிமா எவ்வாறன ஒரு உயரமான இடத்தில் இருந்தார் என்பதும் அவர் அரசியலில் இறங்கிய பின்பு அவரின் படங்கள் தோற்பதற்கும் என்ன காரணங்கள்?
ஏன் தோற்கின்றன என்பதை அந்தப் படங்களை எடுக்க விடாமல் எவ்வளவு சதிவேலைகள் நடந்தன. நடக்கின்றன. விஜயகாந்த் கட்டிய திருமண மண்டபத்தைக்கூட இடித்தார்கள். இன்னும் எவ்வளவோ சோத்துக்களுக்குப் பிரச்சினை அத்தனையையும் சந்திப்பதற்கு விஜய் ரெடியா.
அரசியலில் இறங்கப்போகின்றார் என்றவுடன் எத்தனை தயாரிப்பாளர்கள் பின்வாங்குகின்றார்கள். இவர்களை வைத்து படம் எடுப்பதை விட சும்மாவே இருந்தால் நன்மை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள்.
சினிமாவே வேண்டாம் அரசியலில் மட்டும் முழு மூச்சாகவே இறங்கவேண்டும் அதை செய்வாரா விஜய்?
ஒரு கையில் அரசியல் மறுகையில் சீனிமா என்பது சாத்தியப்பட்டுவராது?
ரஜனி ஏன் அரசியலில் இறங்கவில்லை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல மதிப்பும் நல்ல நட்பும்கொண்டவர்.
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.
அந்தச் சாக்கடையில் முழ்குவது என்பது ரஜனிக்கு சரிப்பட்டுவராத ஒன்று மக்களுக்கு தேவையானதை ஒரு அரசியல் வாதியாக இல்லாமல் ஒரு சமூக சேவகனாககொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ரஜனி வழியைப் பின்பற்றும் விஜய் அரசியல் மட்டும் ஏன் அவர் வழியைப் பின்பற்ற வில்லை. தனிக்கட்சி தொடங்கினால் அனைத்துக்கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு வரும் என்பதால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என்றால் தி.மு.காவை எதிர்க்காமல் செயற்பாடமல் இருக்கலாம். ஒரு கட்சியுடன் இணைந்து செயற்பட்டால் வரும் பிரச்சினைகளை சமாளிக்கலாம் என்று எல்லாம் எண்ணித்தான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகி“ன்றாரா தெரியவில்லை.
அப்படி விஜய் அரசியலில் நுழைந்தால். முதலமைச்சராகவே வரமுடியாது. தி.மு.காவில் இப்பொழுது ஸ்டாலினின் கை ஓங்கியிருக்கின்றது. அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.
விஜய்க்கும் தி.மு.காவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்கின்றது அதை விஜய் பகைத்துக்கொள்ளமாட்டார்.
சிவாஜினால் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை அத்தனை ரசிகர் வட்டம் இருந்தும்.
ராமராஜன் அரசியலில் இறங்கி இன்று அவரின் நிலை என்ன?
சரத்குமார்?
கார்த்திக்?
ராதரவி?
எஸ்.வி.சேகர்?
என்று தொடர்கின்றது அந்த அரசியல் பட்டியல் .
விஜய் அரசியலில் குதிக்கப்போகின்றார் என்றவுடன் உலகத்தில் உள்ள தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். ஈழப்பிரச்சினைக்கு துணைபோன கட்சியுடன் கூடா என்று.
ஈழத்தமிழர்களின் உயிர்கள் பறிபோனதுக்கு கருணாநிதியும் உடந்தையாக இருந்திருக்கின்றார். அப்படி இருந்தும் தி.மு.கா. தேர்தலில் வெற்றி பெற்றதுதானே.
ஈழத்தமிழர் ஆதரவு தனி ஈழம்தான் என்று தெரிவித்த ஜெயலலிதாவின் நிலை என்ன?
தேர்தலில் தோல்வியே.
விஜயின் அரசியல் ஈழத்தைவைத்து தீர்மானிக்கக்கூடாது..
சாக்கடையில் முழ்குவது என்று தீர்மானித்த விஜயை ஆண்டவனால் கூட தடக்க முடியாதுஎன்பதே நிதர்சனம்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...