
இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஓஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட் யூம் டிசைனருக்கான ஓஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.கடந்த 1992ல் இந்தி

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹே' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.
இதன்மூலம் ஓஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த படம், இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 6 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத் தில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.அதிலும் சிறந்த பாடலுக்கான விருதையும் சிறந்த இசையமைப்புக“கான விருதினையும் தனது வசப்படுத் திக்கொண்டார். ரஹ்மான்.கமல் ஒவ்வொரு முறையும் சோதனைகள் செய்து திரைப்படங்களில் நடிக்கும் போதும்.. சொல்வார் தமிழ் சினிமாவுக்கு ஓஸ்கார் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்தால் கிடைத்து விடும்.அது யதார்த்தம் என்பது இன்று அனைவருக்கும் புலனாகின்றது.
No comments:
Post a Comment