Monday, February 23, 2009

இசை தமிழனுக்கு விருது..


ஒஸ்கார் திரைக்கலைஞர்களின் இமயக் கனவு... வெள்ளைக்காரனுக்கே மட்டும் சொந்தமான இந்த விருது... இன்று ஒரு நம் இசைப்புயல் ஏ.ஆர்.ஆர். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹுமானுக்கு கிடைத்துள்ளது.
இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஓஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட் யூம் டிசைனருக்கான ஓஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.கடந்த 1992ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரேவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஓஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்து வமனைக்கே ஓஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங் கினர். இப்படி இருந்த நிலையில் இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லி யனர் படத்துக்கு 8 விருதுகள் கிடைத்துள்ள.லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுககு ஓஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹே பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.இரு ஓஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஒரு விருதும், 'ஜெய் ஹே' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹே பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.
ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹே' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.
இதன்மூலம் ஓஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த படம், இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 6 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத் தில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.அதிலும் சிறந்த பாடலுக்கான விருதையும் சிறந்த இசையமைப்புக“கான விருதினையும் தனது வசப்படுத் திக்கொண்டார். ரஹ்மான்.கமல் ஒவ்வொரு முறையும் சோதனைகள் செய்து திரைப்படங்களில் நடிக்கும் போதும்.. சொல்வார் தமிழ் சினிமாவுக்கு ஓஸ்கார் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்தால் கிடைத்து விடும்.அது யதார்த்தம் என்பது இன்று அனைவருக்கும் புலனாகின்றது.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...