Wednesday, February 18, 2009

அவலக் குரலை கேட்டகாத உலகம்

முல்லைத்தீவு மரண ஓலங்கள் கேட்டவண்ணம்மாகவே இருக்கின்றது. ஏன் சுடுகாடாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் இறந்த எம் மக்கள் இன்று நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.அத்தனையும் இன்று உலகம் அறியாதது அல்ல... உலகமே ஏன் நீ மௌனீயாக இருக்கின்றாய்.. சிங்களப் பேரினவாதத்துக்கு உனது ஆதரவை நீ மறைமுகமாகச் செய்துகொண்டிருக்கின்றாயே..
சர்வதேசத்தில் இன்று முத்துக்குமார் மூட்டிய தீ... எவ்வளவு எழுச்சிப் பெற்று எத்தனை தீக்குளிப்புகள் எத்தனை கண்டனப் பேரணிகளை எமது தொப்புல்கொடி உறவுகள் நடத்தியும் உனக்கு தெரியாதா? இல்லையேல் தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றாயா? பச்சிளம் குழந்தைகள் ஒன்றும் அறியாப் பாலகர்கள் உலகமே அறியாத குழந்தைகள் அத்தனையும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அழிக்கப்படுகின்றது.
தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் இராணுவத்தினால். அதையும் சர்வதேசம் கண்டு கொள்ளாமல் இருப்பது. அவர்கள் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இந்தியா அரசியல் வாதிகள் என்ன சோறா திண்ணுகின்றார்கள் என்று தெரியவில்லை.சீமானை பிடிக்க பொலிஸ் தேடி தேடி திரியுது... முதலில் எமக்காக குரல் கொடுப்பவர்களின் குரவல் வளையை நசிக்க நினைக்கின்றது இந்திய மத்திய அரசு.ஒரு சீமானை நீ துரத்த்தி பிடிக்க முயற்சித்தால் ஆயிரம் ஆயிரம் சீமான்கள் தோற்றுவிக்கப்படுவார்கள்.அது கூட தெரியாதா?ஒருத்தன் எப்பொழுதும் அடிமைப்படுத்திக்கொண்டிருக் கும்போதுதான் அங்கு புரட்சி தோற்றுவிக்கப்படுகின்றது.குட்டக் குட்டக் குனிபவன் தமிழன் என்று நினைக்காதே நீ நினைக்காத நேரம் நினைக்காத காலம் தமிழினம் வீறுகொண்டு எழும் அப்பொழுது இந்தியாவின் இறையாண்மை ஏங்கே போகப்போகின்றது என்று தெரியாது.குடும் அரசியலும் குடும்ப நலனுமே கனவாகக் கொண்ட கருணாநிதி என்று செய்கின்றாரோ தெரியவில்லை. ஈழப்பிரச்சினையில் ஆரம்பத்தில் இருந்து நான் தான் பேசி வருகின்றேன். நான் அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்வதை விடுத்து இப்பொழுது என்னசெய்ய வேண்டும் என்று நினைத்தால் நல்லது.மொத்த தமிழினமும் மாண்ட பின் குரல் கொடுத்து என்ன பிரயோசனம். வீறுகொண்டு எழுடா தமிழா உனக்கான ஒரு நாடு விரைவில்....

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...