Wednesday, February 25, 2009

திறந்தவெளிச் சிறையில் தமிழ் உயிர்கள்.......

ஈழத்தமிழன் போர் இன்னல்களிலும் விட மிகவும் கொடுமையான துன்பத்தை இன்று வவுனியா திறந்தவெளி சிறையில் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றான்.தமிழன் என்றால் விடுதலைப் புலி..என்று சொல்லும் அரசாங்கம் போர் நடைபெறும் பிரதேசத்தை விட்டு வாருங்கள் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தருகின்றோம் என்று சொல்லி முல்லைத்தீவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை அகதி முகாம் என்ற பெயரில் கம்பிவேலிகள் அமைத்து அவர்களை அதற்கு வாழும்படியும் எக்காரணங்கள் கொண்டும் அவர்கள் வெளியேறாதபடி கடும் பாதுகாப்பும் போட்டு இன்று மக்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.துப்பாக்கி முனையில் கல்வி.... துப்பாக்கி முனையில் குளியல்... என்ன கொடுமை.... எமது சகோதர உறுவுகளுக்கு ...விசாரணையின் பேரில் கற்பழிப்புக்கள்.....யாருக்குத் தெரியும்.....உள்ளுக்குள் நடப்பவை??உலக நாடுகள் கூட சொல்லிப்பார்த்துவிட்டது அரசாங்கத்திற்கு வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு சுதந்திரமாக விடவேண்டும் என்று ஆனால் அரச தரப்பு குருடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.ஒரு அகதி முகாமுக்குள்ளேயே எமது மக்களால் சுதந்திரமாக சுபீட்சமாக வாழ முடியாத நிலையில் எப்படி இந்த நாட்டில் தமிழ் மக்களால் சுபீட்சமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும்.தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிøமயைக் கொடுப்போம் அவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்போம் என்று மஹிந்த அரசாங்கம் சொல்வது... நடக்காத காரியம்.இதை இந்தியா நம்பி (சேர்ந்து) தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போகின்றது.பிரிட்டன் அமெரிக்கா ஈழப்பிரச்சினையில் கொண்டிருக்கும் அக்கறை கூட இந்தியாவிடம் இல்லாதது... தேச துரோகமே... அவர்களின் பாணியில் சொன்னால் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே செய்துகொண்டிருக்கின்றது.வெளிநாடுகள் போர்ரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டவுடன் இந்தியா விழுந்து அடித்துக்கொண்டு மக்களை போரில் இருந்து காப்பற்றவேண்டும் என்று பிரணாப் கூறுவது சிரிப்பாகவே இருக்கின்றது.ஐ.நா.வின் அறிக்கைகளைப் பார்த்து இந்தியா பயந்து விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.ஐ.நா.படைகளை இலங்கைக்கு அனுப்பு என்று உலக நாடுகள் பல வற்றில் தமிழர்கள் போராட்டம் மட்டும் மல்ல தீக்குளிப்புக்களையும் நிகழத்திக்கொண்டிருக்கின்ற வேளையில்....சில நேரம் ஐ.நா படைகள் வந்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. பாக்குநீரினையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வருகை... இந்தியாவின் சகோதர நாடான இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து. குரங்கு ஆப்பு இழுத்த கதையாகத்தான் இந்தியாவின் நிலை மாறப்போகின்றது என்பது நிதர்சனம்.

3 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

Thanks for info!

Unknown said...

இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்
ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.
தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//
//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//
//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//
//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

அடி மனதில் இரத்தம் வருகிறதா.
வரும்...

Anonymous said...

நன்றிகள் உங்கள் தகவல்களுக்கு .....பார்க்க நெஞ்சு பொறுக்குதிலையே இந்த ஈழத்தமிழன் படும்பாட்டை எண்ணி ....என்று விடியுமோ அவர்களின் சுதந்திரம். வாழ்க தமிழ் ............

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...