Tuesday, March 31, 2009

அசின் கடத்தப்பட்டார்



தனது உதவியாளரை கடத்தி மறைத்து வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லிவ வந்த அசின் நேற்று இரவு 12.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக அவரது தந்தை இன்று காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த சில வாரங்களாக அசினின் உதவியாளரை காணவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடி மும்பாய் தூத்துக்குடி சென்னை ஆகிய இடங்களில் அவர் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிறப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு அசின் இந்திப் படசூட்டிங்கை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை வீட்டு வாசலில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரைக் கடத்திச் சென்றதாக அவரது கார் சாரதி தெரிவித்தார்.
இந்த செய்தி முழுவதும் ஏப்ரல் 1 ஆம் திகதியான முட்டாள் தினத்தில் முட்டாள் அனைவருக்காகவும் வெளியிடப்படுகின்றது.

Monday, March 30, 2009

ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்கு யாருமில்லையா?


ஈழத்தமிழனின் வாழ்க்கை இன்று மிகவும் கொடூரமான மூர்க்கத்தனமானஈவிரக்கமற்ற தாக்குதல்களால் இன்று அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றது.
அண்மையில் இணையத் தளமொன்றில் ஏறிகணைத் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சாலை வளாகத்திலேயே உயிரை விடுகின்ற இளைஞனை பார்த்தபோது சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பயந்துதான் இருக்கின்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.
(அந்த வீடியோ இங்கே
பலவீனமான இதயம் கொண்டவர்கள்
இதைப் பார்க்க வேண்டாம்)
http://www.tamilkathir.com/news/1279/75//d,video.aspx
அமெரிக்கா பிரிடடன் போன்ற நாடுகள் இலங்கைக்கு கண்டனங்களையும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டிருக்கின்றன ஒழிய அந்த நாடுகளின் செயல் வடிவங்கள் ஒன்றும் முற்றுப்பெறவில்லை.
சீனாவும் ராஷ்யாவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.ஈழத்தில் இடம் பெறுவது ஒரு இனப்பிரச்சினை அதை சீனா ஒரு மதப்பிரச்சினை வடிவிலேயே கையாழ்கின்றது.
சீனா புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதால் தனது மதத்தை கடைப்பிடிக்கும் இலங்கைக்கு அது ஆதரவு வளங்குகின்றது.இலஙகையில் தங்களது தளங்களை நிறுவவதற்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.அதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றது.
இந்தியாவோ ஒரு படி மேல் தனது இராணுவத்தை நான்காம் கட்ட ஈழப்போருக்கு (தமிழர்களை பூண்டோடு அழிக்கும் போருக்கு) அனுப்பிவைத்திருக்கின்றது.
வல்லரசாக முயலும் இந்தியா இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்தால்தான் . தான் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக திகழமுடியும் . விடுதலைப் புலிகள் முப்படைகளையும் உடைய ஒரு வலுப்பெற்ற ஒரு அமைப்பாக இருப்பதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு இலங்கைக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழனை அழிக்கும் இலங்கை அரசின் கொள்கைக்கு துணை போகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது தேர்தல் காலம் ஈழப்பிரச்சினை என்பது அவர்களது தேர்தல் கால கொள்கையாகவே வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழனின் பிரச்சினை என்ன தேர்தல் அறிக்கையா?முத்துக்குமார் தீக்குழிப்பு அதனைத் தொடர்ந்து எத்தனை தீக்குளிப்புக்கள் அத்தனைபேரின் உயிர்கள் ஈழத் தமிழனுக்காக.
கட்சி ரீதியான தீக்குழிப்புக்கள் இனி தேர்தல் கால பிரச்சாரத்தில் முதன்மை வகிக்கப்போகின்றது.ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்திலும் இருந்து ஒருவர் இருவர் என்று தீக்குழித்துவிட்டார்கள்.
என்ன செய்தோம் என்பதை விட என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.உலகத் தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் இன்று தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் வெளியிட்டு வருகின்றன.ஆனால் ஈழத்தமிழர்களாலாலேயே வாழ்கின்றது சன் ரி.வியும் கலைஞர் ரி.வியும் ஆனால் அன்றாடம் கொல்லப்படும் தமிழர்களைப் பற்றி என்ன செய்கின்றது இந்த ஊடக நிறுவனங்கள்.
வெளிநாட்டில் வாழ்கின்றவர்களின் பணத்தில் கலைஞரின் குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. மத்திய அரசுக்கு நாங்கள் ஈழப்பிரச்சினை பற்றி சொல்லிவருகின்றோம் என்கிறார் கலைஞர் ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை.
சோனியா கருணாநிதியின் சொல்லைக் கேட்கின்றாரா இல்லையா என்று தெரியவிலலை.ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்தியா இராணுமும் வந்து போரிடுகின்றது. இதுகூட கருணாநிதிக்கு தெரியவிலலையா?மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதற்கு கருணாநிதி காலில் கூட விழுந்து வாங்குவார் போல் தெரிகின்றது.
ஈழத் தமிழனைக்காப்பாற்ற ஒபமாதான் இனி வரவேண்டும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை.கூட இருந்து குழி பறிக்கின்றது இந்தியா (சோனியா) காலங்கள் மாறும் அப்பொழுது என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆவியாகத் திரியும் ஈழத்தமிழன் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பான்.

Tuesday, March 24, 2009

சம்பிரதாயங்களும் சடங்குகளும்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் மக்களை வழி நடத்துகின்றதா இல்லை மக்களை சீரழிக்கின்றதா என்று பட்டி மன்றம் வைக்க நான் வரவில்லை அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவத்தைத் தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் தான் அவளுக்கு அவர்களின் ஊர் வழக்கப்படித்தான் திருமணம் நடந்தது. ஆனால் நடந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அந்த ஊர்வழக்கமும் அவர்களது கலாசாரமும் அவளை என்ன கொடுமைப்படுத்துகின்றது.
திருமணம் ஆகி இரண்டு நாட்கள்தான் தாலி கட்டும்போது மாப்பிள்ளை தாலியை மாற்றிக் கட்டிவிட்டாராம் பெண்ணுக்குக் கட்டாமல் தங்கைக்கு கட்டினதாக நீங்கள் நினைக்க வேண்டாம் தாலி தலைகீழாக கட்டிவிட்டாராம்.
அதற்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பெண் வீட்டார் நீ வந்த நேரம் தான் இப்படி நடக்கின்றது என்று அவளது முகத்திற்கு முன்னாலே சொல்கின்றனராம்.
நான் கேட்கின்றேன் மாப்பிள்ளை ஒழங்காக தாலியைக் கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.
அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் பெண் அழகில்லாதவள் என்று மாப்பிள்ளையை விட பெண் அழகாக இருப்பது தான் அந்த ஊர் மக்களிடமும் அவனது உறவினர்களிடமும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
வயது போன பட்டி கூட என்ன கோயில்ல இருக்கின்ற சிலையை கொண்டு வந்து விட்டானா. பொம்மை மாதிரியே இருக்கு.
என்ன இந்தப் பெண் இப்படி மெல்லிசாக இருக்குதே என்று சொல்கின்றார்.
அந்தக் காலத்தில பெண்கள் உரல் குத்திமாதிரியோ தெரியவில்லை.தாலியை
தலைகீழாகக் கட்டியதற்காக முதல் இரவைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள் என்ன கொடுமை பாருங்களேன்.
பூனை குறுக்கே போனால் பயணத்தை ரத்துச் செய்கின்றார்கள்.காகம் பசியினால் கத்தினால் கூட அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து விருந்தினர் வரப்போகின்றார்கள் என்று சொல்வது.
விதவைப் பெண்களை நற்காரியங்கள் செய்வதற்கு முன்னிலையில் விடுவதில்லை.இப்படியன செயல்களால் பலரது மனங்கள் வேதனைப்படுகின்றது.
ஏன் ஒரு கூட்டத்தில் சமூகத்தில் தள்ளி வைக்கப்படுகின்றார்கள். சம்பிர்தாயங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று என்ன என்ன கொடுமைகளை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கின்றது.

Friday, March 20, 2009

விஜயின் கோபமும் ஊடகங்களும்

வில்லு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது அதில் விஜய் ரசிகர்க ளைப் பார்த்து சத்தம்போட வேண்டாம் என்று கோபமாக கத்திய வீடியோ அண்மையில் இணையத்தளங்களில் உலா வந்தது.

அதை உடனே அனைத்து இணையத்தளங்களும் பதிவாளர்களும் தங்களுக்கு ஏதேதோ எழுதி பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.விஜய் அப்படி நடந்திருக்கக்கூடாது. விஜய் அப்படி நடக்கின்றதால் தான் அவரது வீட்டில் ஒவ்வொரு கண்ணாடியும் உடையுது. அவர் சாதுவாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.

அதிலும் விஜயின் இந்த செய்தி போட்டால்தான் தங்களது பதிவை கூடுதலாக பார்க்கின்றார்கள் என்ற போட்டி சில பாதிவாளர்களுக்கு இடையில் இதை அவர்களே தங்களது பதிவில் வேறபோட்டிருக்கின்றார்கள்.

விஜய் ஒரு நடிகர்தான் அதற்காக அவருக்கு கோபம் வரக்கூடாது என்பது அடி முட்டாள்த்தனம் என்று தான் சொல்லலாம்.ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? நீங்கள் ஒரு இடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஒரு லிமிட்டைத்தாண்டி சத்தம் வந்தால் நீங்கள் என்ன பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா?என்னடா விஜய்க்கு வக்காளத்து வாக்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் .

இப்படி ஒரு வீடியோ வந்தவுடன்தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்து 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜய் சென்றபோது நடந்து சம்பவம் மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகையில் செய்தி வெளிந்தது. அதன் விவரம் இங்குள்ளது.

விஜய் கொழும்பு வந்தபொழுது டென்சன் என்ற தலைப்பில் வெளிவந்தது.அப்பொழுது விஜய் கோபமாக இருந்ததாவும் இருந்தது.

அது தொடர்பாக அந்த பத்திரிகை நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு தங்களது தலைவரைப் பற்றி தப்பாக போட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் நடந்ததாக நான் அறிந்துகொண்டேன்.

(சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் முழுவிபரங்களும் வரும்)

ஒரு நடிகர் தான் கோடிக்கணக்கில் காசை வேண்டிக்கொண்டு எவ்வளவுதான் சமூகத்தில் தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்க முடியும். இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிடுகின்றார்கள்.ஒரு நடிகன் நடிக்கும் படத்தைப் பற்றியும் அவனது படைப்பைப்பற்றியும் மட்டும் எழுதுங்கள் அவன் அது செய்தான் இது செய்தான் என்று எழுதுவதால்தான் அவர்களும் முதல்வர் கனவை காண முயல்கின்றார்கள் .

Thursday, March 19, 2009

காதலின் பரிமாணங்கள்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.


ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது.


சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.


அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.


ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.


பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம்.


ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது.


இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.

காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது.


இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.


தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை.


காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம். அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள்.


தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன்.....
உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும்.


ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.


சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.


மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவனையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.


நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.


2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....உடல்கள் இணையும் காதல்.....அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்றுசிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.


அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.


இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர்கள் காதலியுங்கள்உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.பொது இடங்களில் உங்களது காமலீலைகளை அரங்கேற்றதீர்கள்.


நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

Tuesday, March 17, 2009

கடலை போடுவதால் ஆபத்து

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.

வாழ்வதற்கு இடம்







உனை தேடும் விழிகள்




Saturday, March 14, 2009

பூஷ் மீது ஷூ வீச்சும் முல்லைத்தீவில் குண்டு வீச்சும்


என்னடா குண்டக மண்டக்க என்று தலைப்பு வைத்திருக்கின்றான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் எல்லாம் ஒரு காரணத்தோடுதான்.அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர் ஜ் டபிள்யூ மீது ஊடகவியளார் ஒருவர் தனது ஷூ வினைத் தூக்கி புஷ்ஷின் மீது வீசினார்.

இது பழைய கதை இப்பொழுது அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டது.
ஒரு ஷூ வினால் எறிந்தவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை என்றால் முல்லைத்தீவில் தினமும் அரைச் சதத்திற்கும் அதிகமாக மக்களை குண்டு வீசிக்கொள்ளும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன தண்டனை?

அமெரிக்காவே உனது நாட்டின் தலைவனுக்கு ஒருவன் ஷூ வினால் எறிந்ததுக்கே உடனே தண்டனை கொடுக்கும் நீ.

உனது நாட்டு பிராஜாவுரிமை பெற்று இருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன கொடுக்கப்போகின்றாய்?

இவர் பெரிய சட்டத்தரணி கதைக்க வந்திட்டார் எங்களுடன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஒரு நாளுக்கு 50, 70 என்று தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது உலகத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையோ?

அமெரிக்கனின் மீது தூசு விழுந்தால் கூட தட்டிக்கேட்கும் உலகம்.
ஈழத்தில் தமிழனின் உயிர்கள் பறிக்கப்படுவதை தட்டிக்கேட்டால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்.

Wednesday, March 11, 2009

பாலாவின் பட்டறை

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. அவரின் வாரிசாக வந்த பாலா குருவை விட பல மடங்கு மாற்று சினிமாவை உருவாக்கி வருகின்றார்.


தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏன் ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். வழமையான மசாலா படங்களை உடைத்து இன்று வெற்றி நடைபோடுகின்றது நான் கடவுள்....


பாலா எனும் சிற்பி செதுக்கிய சிற்பங்களைப்பற்றித்தான் எனது பதிவை இடலாம் என்று நினைத்தேன்.
பாலாவின் கைபட முன் இருந்த கல்லுக்குள் இருந்த நிலையும் பின் பாலாவின் கைபட்டபின் அந்தச் சிற்பங்களின் வெற்றியுமே இன்று தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.


விக்ரம்
சேதுவுக்கு முன்னிருந்த விக்ரம் யாருமே அறிந்திருந் விக்ரம் டப்பிங் கலைஞராகவும் ஹீரோ வுக்கு நண்பனாகவும் நடித்து வந்தார் விக்ரம் பி.சி.ஸ்ரீராமின் இயக்கத்தில் வெளிவந்தது மீராவில் கதாநாயகனாகவும் அஜித்தின் உல்லாசம் படத்தில் அஜித்தின் அண்ணனாகவும் நடித்தார் ஆனால் வெற்றி நயகனாக அவரால் சோபிக்க முடியவில்லை.

விக்ரம் எனும் வைரம் மறைந்ததிருந்தது யாருக்குமே தெரியாது அது பாலா எனும் சிற்பியினால்தான் பட்டை தீட்டப்பட்டார். சேது இன்றும் விக்ரமின் சியான் அடையாளம் தமிழ் சினிமாவை மாற்றி யமைத்த படம்.
பாலாவின் பாடங்கள் என்றால் சோதனைகளைக் கடந்துதான் சாதனை செய்கின்றது.

விக்ரம் சேது படம் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்ட பின்புதான் அனைவருக்கும் விக்ரம் என்ற நடிகன் வெளியுலகத்திற்குத் தெரிந்தது. அதன்பின் விக்ரம் நடித்த படங்கள் தில் தூள் காசி படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. மீண்டும் பாலவின் படம் பிதா மகன் வெட்டியானாக வாழ்ந்தார் விக்ரம் தேசிய விருது கிடைத்தது.


பாலாவின் பாசறை என்பது ஒரு நடிகனுக்கு தேடல்களை ஏற்படுத்துகின்றது என்றுதான் சொல்லலாம் பாலாவின் படத்தில் நடித்த பிறகு அந்த நடிகன் நல்ல கதாபாத்திரங்களை தேடுகின்றார்கள். அப்படி விக்ரம் தேடி நடிப்பதால் தான் அந்நியன்- கந்தசாமி என்று தனது படைப்புக்களை தரமுடிகின்றது.


சூர்யா
பாலாவின் கைபட்ட மற்றும் ஒரு நட்சத்திரம் ஏன் சூரியன் என்று கூடச் சொல்லலாம்.நந்தாவுக்கு முன் நந்தாவுக்கு பின் என்று சூர்யாவின் திரை வாழ்க்கையை நாம் பிரித்து பார்க்கலாம்.

நேருக்கு நேர் படத்தில் மூலம் வசந்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சூர்யா விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

சிவகுமாரின் மகன் என்ற பெயருடன் திரைக்கு அறிமுகம்.... தனி ஹீரோ டபிள் ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்தார் முரளியுடன் காதலே நிம்மதி, விஜயகாந்துடன் பெரியண்ணா விஜயுடன் மீண்டும் ப்ரண்ட்ஸ் என்று நடித்தார் படங்களில் அவரது நடிப்பு பேசும் படியாக அமையவில்லை.


அப்பொழுதுதான் பாலாவின் நந்தாவில் நடித்தார் சூர்யா நந்தா... சூர்யாவை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டுபோய் நிறுத்தியது.

அதன் பின் வந்த ஸ்ரீ தோல்வியைக் கொடுத்தாலும் துவண்டுவிடாமல் பாலாவின் சிஷ்யன் அமீரின் முதல் படம் மௌனம் பேசியதே சூர்யாவுக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்தது.


பாலாவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு சவால் என்றுதான் சொல்லலாம் பிதாமகன் விக்ரமுடன்அதன் பின் சூர்யா தேடல்களில் இறங்கினார்.. மாறுபட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்தார்.

பேரழகன், காக்க காக்க, வேல், ஆறு, வாராணம் ஆயிரம் என்று தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வேறு வடிவங்கள் கொடுக்கின்றார் என்றால் அது பாலாவின் பட்டறையில் இருந்தவடியால்தான்.



ஆர்யா
பாலாவின் பட்டறையில் எதிர்பாராமல் நுழைந்த நடிகர் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

அஜித்துடன் மோதல் அதன் பின்பு பாலா கண்டுபிடித்த நடிகர் ஆர்யா சினிமா பின்புலமே இல்லாமல் வந்த நடிகர் இயக்குநர் ஜீவாவினால் கண்டுபிடிக்கப்பட்டு இயக்குநர் விஷ்ணுவர்த்தனால் வளர்க்கப்பட்டு பாலாவினால் பட்டை தீட்டப்பட்டார்.


நான் கடவுள் ஆர்யாவுக்கு நடிப்பு என்ன என்பதை கற்றுக்கொடுத்துவிட்டது.அடுத்து சர்வம்மெட்ராஸ் பட்டணம் என்று வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகின்றார் ....... சரி பார்ப்பம் பாலாவின் பட்டறையில் அடுத்ததாக எந்த நடிகருக்கு அதிஷ்டம் என்று பார்ப்பம்.

நல்ல சினிமாவையும் நல்ல நடிகர் களையும் உருவாக்கும் வல்லமை தமிழ் சினிமாவில் பாலாவும் அவரது சிஷ்யப்பிள்ளைகளும் செய்துவருவது பெருமைக்குரிய விடயம்.

Monday, March 9, 2009

ஜெயாவின் கபட நாடகம்


கருணாநிதியின் படம் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது ஜெயலலிதா புதிய திரைப்படத்தைஇன்று திரைக்கு கொண்டுவந்திருக்கின்றார்.

கதை திரைக்கதை இயக்கம் எல்லாம் ஜெயாதான்

இசை: தா.பாண்டியன்

ஒளிப்பதிவு: ஜெயா .ரிவி.

ஒலிப்பதிவு: வைகோ

பாடல்கள்: சசிகலா ஆகிய சினிமாவின் சாரி

அரசியல் ஜம்பவான்கள் இணைந்து வழங்கும் “ஈழத்தமிழரும் உண்ணாவிரதமும் என்ற படத்தை இன்று மட்டும் தமிழகமேங்கும் திரையிடப்படுகின்றது.

தேர்தல் வருது என்றவுடன் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்தவர் ஜெயலலிதா என்று தெரிகின்றது.

ஈழத் தமிழர்களின் உயிர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் இன்று அழிக்கப்பட்டு தமிழனிடம் உள்ள ஒரு சொற்ப நிலத்தையும் சிங்கள இராணுவம் பிடிப்பதற்காக தமிழ் உயிர்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத் தமிழர்களுக்காக முழுத் தமிழகமே இன்று திரண்டு நிற்கின்றது.

இவ்வேளையில் தான் மட்டும் தனித்து நின்றால் மக்கள் தன்னை நிராகரித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு தானும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டதுபோல் நடிக்கின்றார் இந்த ஜெயலலிதா.

என்ன கொடுமை சார்... ஈழத் தமிழரின் நலனில் உண்மையான அக்றை கொண்டுள்ளவர் என்றால் இன்று ஏன் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்று கூக்குரல் ஈடுகின்றார்.கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதற்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற பெயரில் கருணாநிதியினை சாடுவதே ஜெயலலிதாவின் பிழைப்பாகப்போய்விட்டது.கருணாநிதி என்ன செய்தார் என்று சொல்வதை முதலில் ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.நான் என்ன ஈழத் தமிழர்களுக்கு செய்தேன் செய்யப்போகின்றேன் என்று சொல்லட்டும் பார்ப்பம். அதைவிடுத்து கருணாநிதி அது செய்தார் இது செய்தார் என்று சொல்லி தனது அரசியலை நடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் ஜெயா.ஈழதமிழனுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காமல் அவர்களுக்காக போராடுவதே மேல் உண்ணாவிரதம் அதை தொடக்கி வைத்தவர்கள் மாணவர்கள் அந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புப் கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர் இந்த ஜெயலலிதா.

இது உண்ணா விரதமா இதைபார்க்க தமிழகமே உனக்கு மானம் ரோசம் சூடு சுறணை இல்லையா?

Sunday, March 8, 2009

வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கு ஒரு சலூட்.



என்னை வாழவைத்துக்கொண்டிருப்பதும் எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்பவர்கள் பெண்கள்… அந்தப் பெண்களுக்காக ஒரு தினம் இன்று அந்த தினத்தைப் பற்றியும் பெண்கள் பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன் ஆனால் சற்று பிந்தித்தான் எனது பதிவை இடவேண்டிய சூழ்நிலை.. என்ன பிந்தி வந்தாலும்.. என் மனம் கவர்ந்த பெண்களைப் பற்றி நான் பதியாமல் போனால் நான் வாழ்ந்துதான் என்ன?
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பால் என்பது உண்மை அது தாயாக தாரமாக நண்பியாக எத்தனை பரிமாணங்களில் தோற்றம் கொடுக்கின்றனர்.
பெண்கள் இன்று ஆணுக்கு சரிநிகராக வளர்ந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகின்றது. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அது அவர்களுக்குக் கிடைத்த தன்னம்பிக்கையென்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
பத்துமாதம் ஒரு குழந்தையைச் சுமந்து பின் அதை சீராட்டி பாலூட்டி வளர்த்து எடுக்கின்றபொறுப்பு இருக்கின்றதே அதை விட இனிமையான ஒரு சுமை இருக்க முடியாது.கணவனுக்கு அடுத்தப் படியாக தனது குழந்தையை கண்ணும் கருத்துமாக காக்கின்றாள் ஒரு தாய் அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்லவேண்டும் இத்தனை வருடங்களாக என்னை சுமந்தது மட்டுமல்லமல் இன்று வரையும் அன்பில் ஒரு குறைகூட விடாமல் பார்த்துக்கொள்ளும் தாய்கு நான் என்ன பரிகாரம் செய்யப்போகின்றேனோ தெரியவில்லை....
மனைவி.... அதைப்பற்றி அறிய எனக்கு இன்னும் வயது வராதபடியினால்..
தோழிகள்
நான் இன்று துணிந்து ஒரு வார்த்தை வாயினால் ஏன் இந்த பதிவினைக்கூட இடுவதற்கு காரணம் எனது தோழிகள் தான் என்று சொல்லலாம் நான் விடும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதிலும் என்னை நான் திருத்திக் கொள்வதில்லும் பெரிய பங்கு எனது தோழிகள் இந்த தோழிகள் இல்லையேல் நான் இன்று எங்கே? எப்படி? ஏன் உயிரோடு கூட இருந்திருப்பேனா தெரியவில்லை.
நான் அவர்களிடம் பெற்ற அன்பு என் வாழ் நாள் முழுவதும்.. ஏன் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் கூட நான் மறக்க முடியாது நான் துவண்டு போயிருக்கும் வேளைகளில் எனக்கு ஏணியாக இருந்தவர்கள் எனது தோழிகள்தான்.இந்த பெண்கள் தினத்தில் அவர்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்.
(அது சரி சுய புராணம் பாடமல் எதாவது எழுத முடியாத என்று நிங்கள் நினைக்கின்றது எனக்கு தெரியும் இன்று பெண்கள் தினம் அதுவும் தமிழன் கண்டு பிடித்தான இல்லை அமெரிக்கன் கண்டு பிடித்த இந்தப் பெண்கள் தினத்தை இன்று மீடியாக்கள் தங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
பெண்களில் சாதித்தவர்களின் பேட்டிகள் என்ற போர்வையில் நடிகைகளை பேட்டிகாண்பது என்ன நியாயம்?ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையை பெற்று வளர்ப்பதும் சாதனைதான். பூமா தேவிக்கு பொறுமையிருக்கு என்று சொல்கின்றார்கள் அதை நான் பார்த்ததில்லை ஆனால் பெண்களிடம் பொறுமையும் விவேகமும் இருக்கின்றது.

வரலாற்றில் வாழ்ந்த பெண்ளுக்கும் இன்றும் வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கும் ஒரு சலூட்.

Monday, March 2, 2009

பேனா முனைகளை துப்பாக்கி முனையாக்காதீர்


தமிழர்கள் மீதான அடுக்குமுறைகள் தமிழர்கள் மீதான கொடுமைகள் தமிழர்கள் மீதான வன்முறைகள் என்று சிங்களப் பேரினவாத அரசாங்கம் செய்துவரும் நிலையில் இன்று தென்னிலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீதும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
சுடர் ஒளி - தினக்குரல் - வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது ஊடகவியலாளர்களை கடத்திக் கொலை செய்வது என்று தனது பாரிய பங்களிப்பை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
சிவராம்-நடேசன்-நிமலராஜன் என்று தொடங்கிய கொலைகள் இன்று லசந்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
திஸ்ஸ நாயகம்.. தொடங்கி இன்று வித்தியாதரன் ( வித்தி) வரை துணிந்து தமிழ் மக்களின் குரலாகத் திகழ்பவர்களை பொலிஸ் விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்திருக்கின்றது மஹிந்த அரசு.உரிமைக்குரல் இனத்தில் வெளிப்பாடு இந்த இனத்தின் ஊடககங்களே அந்த ஊடகங்களில் துணிந்து செயற்படுபவர்கள் இன்று ஒரு சிலரே..
வித்தியாதாரன் கைது இன்று தமிழ் உலகுக்கும் ஒரு வேதனையான செய்தி மட்டும் மல்ல சோதனையும் கூட அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அரசு செய்யும் தவறுகளை தன் நெற்றிக் கண் கொண்டு செய்திகளை வெளியிடுபவர்... தமிழினம் இன்று நல்ல ஊடகவியலாளர்களை இழந்து வருகின்றது.யாரும்... ஊடகவியலாளன் ஆகலாம்… ஆனால் ஒரு சிலரே அதை தொழில் என்று நினைக்காமல் தமது கடமைகடப்பாடுகட்டாயம் என்று தங்களை ஊடகங்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள். அவ்வாறு அற்பணிப்பவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றது.இன்று ஒரு வித்தி நாளை எத்தனை வித்தியோ... தெரியவில்லை... தமிழ் மக்களின் உரிமைகள் குரல்கள் நசுக்கப்படுகின்றன.அண்மையில் கொழும்பில் உள்ள தமிழ் ஊடகங்களின் தலைவர்களை மஹிந்த அரசு சந்தித்ததாகவும் முல்லைத்தீவில் நடைபெறும் பேரில் இறக்கின்ற காயப்படுகின்ற தமிழ் மக்களின் படங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் என்றும் அந்த படங்கள் விடுதலைப் புலிகளினால் கிராபிக்ஸ் செய்து அனுபப்படுகின்ற என்றும் ஊடகங்களை அவ்வாறான படங்களை பிரசுரிக்க வேண்டாமாம்?ஓகே... அவர்கள் சொல்கின்றது சரியென்றால் வவுனியா வைத்தியசாலைக்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் முல்லைத்தீவில் இருந்து வருபவர்கள் என்ன சுற்றுலாவா வருகின்றார்களா?மக்கள் படும் வேதனைகள் மக்களுக்குத் தெரிவிப்பது ஊடகங்களின் கடமை அவற்றை விடுத்து தமிழ் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் விதிக்குமானால்.. பேனா முனை பிடிக்கும் ஊடகவியாளர்களை துப்பாக்கி முனை பிடிக்க வைக்காதீர்கள்

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...