Saturday, August 8, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மடல்.....






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு வணக்கம்.
பாராளுமன்ற தேர்தல் வருவதும் வாக்குறுதிகள் கொடுப்பதும் அவை பின்பு காணாமல்போவதும் உலக அரசியலில் நிகழ்ந்து வரும் ஒரு விடயம்தான் அதற்கு கூட்டமைப்பு மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது....
சரி அது எதற்கு நமக்கு அரசியலில் இது சாதாரணப்பா கவுண்ட மணி ஸ்டைலில் சொல்லவேண்டியிருககின்றது.

இன்முறை பாராளுமன்ற தேர்தல் ஆனது நாட்டில் அமைதி நிலவுகின்ற காலத்தில்வருகின்ற தேர்தல். இம்முறை வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளி;ல் கூடுதல் எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். (சந்தோசம்தான்)

சம்பந்தன் ஐயா கூறியது போன்று இம்முறை தமிழர்களில் தேர்தலில் வெற்றி பெற்று பேரம் பேசும் அரசியலை உருவாக்க கூடிய தகுதி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகுத்தான் இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் மாண்டவர்களின் ஏன் விதைக்கப்பட்டவர்களின்  கனவு.... தமிழர்கள் சுதந்தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே.
இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் ஆவியை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். உலகமே  மிகவும் வேதனை அடைந்த அந்த நாட்கள்.........
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை... வருது.... அது வந்தால் தமிழர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும் என்று நினைக்கலாமா?

தேர்தல் மேடைகளில் ஐ.நா.விசாரணை அறிக்கையை பற்றி பேசுவதை விடுங்கள்....... அது வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதுபோல் வரும்....
உரிமை இழந்து உறவை இழந்து உணர்வுகளோடு மட்டும்தான் இருக்கின்றோம்.

இன்று மீள் குடியேற்றப்பட்டு வசதிகள் இன்றி மக்கள் கண்ணீர் தவி;கின்றனர்.
அவர்களுக்கு ஐ.நா. அறிக்கையை பற்றி பேசி என்ன பயன்? உயிர் வாழ்வதற்கு அவர்களுக்கு ஒரு அதிகாரம் வேண்டும்.  அதை இம்முறை பேரம் பேசும் அரசியல் மூலம் நீங்கள் பெற்றுக்கொடுக்கலாம்.

கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டாது என்று வீரவசனம் பேசலாம். அதற்கு ஒரு 1000 பேர் வரவேற்பார்கள்..

ஆனால் பாதிக்கப்படப்போவதும் எமது எதிர்கால சந்ததியே... அதை உணர்ந்து
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் அவர்களுக்காக இந்த தேர்தலில் பேரம்பேசும் சக்கியாக மாறி அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும்.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தொழில்சாலைகள் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும். என்பாட்டன்.. முப்பாட்டான் காலத்தில் இருந்த அதே தெரு அதே கடை இனறும் அதே இடத்தில் இருக்கின்றது. என்றால் நாமும் அதே இடத்தில் தான் நிற்கின்றோம் என்று அர்த்தம்.

அஸ்ரப் காலத்தில் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பேரம் பேசும் அரசியல் மூலம்  அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிவனங்களிலும் அனைத்து திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

ஆனால் தமிழ் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

 அவர்களுக்கு உரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமை பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே இருக்கின்றது.

அதை செய்வீர்கள் என்ற ஆதங்கத்துடன்....

நன்றி
இப்படிக்கு 
வருங்காலம்




காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...