Wednesday, November 25, 2009

இன்று பெண்கள் வன்முறைக்கு எதிரான நாள்


உலகில் எந்தவொரு வன்முறைகளும் பெண்களுக்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.
(ஏன் ஆண்களுக்கு எதிராக நடத்தப்பவிலலையா என்று முணு முணுக்க வேண்டாம்)
இன்றைய உலக மாற்றமும் கலாச்சார சீரழிவுகளும் நவீன நாகரிகத்தின் மாற்றமும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தோற்றுவிக்கின்றன.
பெண்கள் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இன்று கூடுதலாக காணப்படடாலும் வன்முறையாளர்கள் ஏன் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே...இதற்கு பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் .இல்லை பெண்களை அடக்கி ஆழ்கின்றனர்.
வீட்டு வேலைகளுக்கு பெண்கைள அமர்த்தி அவர்களை பாலியல் இம்மைகளுக்கு உட்படுத்துதல்.
சில பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் இம்மைச்சுக் உட்படுத்துதல்.
உயர் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களும் இவ்வாறான இம்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இம்சைக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் ஒரு சிலரே தாங்கள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.
ஏன் மற்றவர்கள் சொல்வதில்லை.
குடும்ப மானம்
குடும்பல நலன்
வாழ்வதற்கு பணம்
வேலை போய்விடுமோ என்ற கவலையின் காரணமாக தாம் அனுபவிக்கும் காஷ்டங்களை வெளியில் சொல்வது இல்லை. இதை ஆண் வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மீதான வன்முறையாளர்களாக மாறி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆண்வர்க்கம் பெண்கள் மீதான வள்முறைகளை மேற்கொள்ளும்பொழுது இதற்கு இன்னொரு பெண் உடந்தையாகவே இருக்கின்றாள் என்பது மிகவும் வெட்கக்கேடான விடயம்.
மாமியார் மருமகள் சண்டை
மற்றும் அலுவலகங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கின்றனர்.
இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது என்பதே அரிதான விடயம் அப்படி அரிதாக இருந்தாலும் அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
அதை ஆண்வர்க்கம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு பெண்ணைவைத்துக்கொண்டே மற்றைய பெண்ணை காய்நகர்த்துவார்கள்.ஏன் பெண்கள் மீதான வள்முறைகளை பெண்களே தீர்மானித்துக்கொள்கின்றனர் என்பது மிகவும் வருந்தத் தக்கதும் வேட்கத்தக்கதுமா ஒரு விடயம்.

Wednesday, November 11, 2009

நவம்பர் 12 நிகழ்வுகள்

1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.
1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.
1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994 - இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
2001 - நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...