Tuesday, December 30, 2008

நடந்து வந்த பாதை

2008 எப்படியிருந்தது சுவடுகளின் நிழலா- சுமைகளின் சுமையா- துன்பங்களின் ரணங்களா- நிலவில் பனியா தெரியவில்லை.(என்னடா சாத்திரக்காரன் மாதிரி சாத்திரம் சொல்லுகின்றனே என்று நினைக்க வேண்டாம்)
2008 இல் அரசியல் என்ன நடந்தது சினிமாவில் என்ன நடந்தது உலகத்தில் என்ன நடந்ந்து என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் அதைப்ப பற்றி நான் இங்கு பதிய வரவில்லை.
ஏன் என்றால் நமக்குள் நடக்கும் போராட்டங்களும் ஒரு அரசியல்தானே நம்மைச்சுற்றி எத்தனை சினிமாக்கள்.
உலகமே ஒரு நாடக மேடைதானோ அதில் நாம் எல்லாம் நடிகர்கள்தானே.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போதும் நாம் எதாவது ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் அந்த சபதத்தில் நாம் வெற்றி பெறுகின்றோமா இல்லையா?
என்று நாம் பார்தால் 100 இற்கு 50 வீதமானோர்தான் வெற்றி பெறுகின்றார்கள்.தோல்வி பெறுப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் நேரம் சரியில்லை காலம் சரியில்லை ஜாதகத்தில் கோளாறு அதிஷ்டம் இல்லை என்று என்னென்னவோ சொல்கின்றார்கள்.
அவர்கள் ஏன் அப்படிச் சொல்கின்றார் என்றால் அவர்களிடம் முயற்சி இல்லை- தன்னம்பிக்கை இல்லை-சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- உதவிகள் யாரும் செய்ய மாட்டேன்றார்கள் என்று குறைகளையே அடுக்கிக்கொண்டு போய்கொண்டு இருப்பார்கள். குறைகளை அடுக்குவதை விட உங்களிடம் உள்ள சின்ன சின்ன நிறைகளை நீங்கள் நிவர்த்தி செய்து பார்த்திங்கள் என்றால் போன ஆண்டை விட அடுத்த ஆண்டு உங்களுக்கு நல்ல நிலையையேக் கொடுக்கும்.
ஆனால் சிலபேர் எடுக்கின்ற சபதங்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது.
(அதற்காக நான் றோம்ப உத்தமன் இல்லை)பிறக்கப்போகும் ஆண்டில் இருந்து
நான் குடிக்கமாட்டேன்
நான் இனி கடலைபோட மாட்டேன்
நான் இனி சைட் அடிக்கமாட்டேன்
இனி நான் ஒழுங்காக கோயிலுக்குப்போவேன்
ஏதோ அடுத்த வருடம் தொடங்கி இவர்கள் ஞானிகள் ஆகிவிடுவார்கள் போல் இன்றைகே ஆரம்பித்து விட்டார் அவர்களது சபதங்களைச் செல்கின்றதுக்கு.அது அவர்களுக்கு ஓவரா தெரியவில்லையோ? கேட்டால் சொல்கின்றார்கள் வருட முடிவை துக்கத்தோடு கொண்டாடுவதற்கு இரவு இரவாக தண்ணி அடிக்க வேண்டியது. பின் காலை விடிந்த வுடன் நல்லா நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு கோயில் கும்பிட வேண்டியது .
இப்படி நீங்கள் செய்வதால் நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு கடவுளையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
( என்னடா இவன் காதை கடிக்கின்றனே என்று திட்ட வேண்டாம் )
இதுதான் உண்மை நிலை வருட முடிவில் எத்தனை பேர் தண்ணியடித்துவிட்டு விபத்துக்களில் இறக்கின்றனர்.
சரி தண்ணி அடிப்பவர்கள் பற்றி விவாதத்திற்கு வரவில்லை.
நாம் அடுத்த ஆண்டு இவ்வாறுதான் இருப்போம் என்று ஒரு முடிவை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்றால். அதில் நீங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
(அதற்காக நம்பிக்கைதான் வாழ்கை என்று பஞ்சு டயலொக் பேசிக் கொண்டிருந்தால் சரிவராது)
முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள்..
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த ஊரு உலகம் உன்னை நம்பி...
பாடல் வரிகளில் எத்தனை உண்மை .
என்னால் முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களால் மட்டும் தான் முடியும்.முடியாதது என்று ஒன்றுமில்லை ஆனால் அவை நடக்கின்ற கால எல்லைகள் கூடலாம். இதற்காக ஒரு வாரத்தில் ஒரு மாதத்தில் ஒரு வருடத்தில் நடந்து விடும் என்று நினைக்க வேண்டாம் நான் போன வருடம் போட்ட திட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்று நினைக்க வேண்டாம்.
ஏன் அதை அடுத்த வருடமும் தொடர்ந்தால் உங்களுக்கு வெற்றிதான் கிடைக்கும்.அதை விடுத்து நான் போனவருடம் போட்ட திட்டம் நிறைவேறவில்லை என்று மனம் வருந்தத் தேவையில்லை.
2009 எப்படி இருக்கப்போகின்றதோ தெரியவில்லை என்று சொல்லாதீர்கள் வருட ஆரம்பத்தில் ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள் இந்த இந்த மாதங்களில் இவற்றை செய்யலாம் என்று அவற்றுக்கேற்றமாதிரி உங்களது வாழ்க்கையை அமையுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெறலாம்.
(இவர் பெரிய பருப்பு நாங்கள் இவர் சொல்லுறத கேட்கிறத்துக்கு என்று நிங்கள் நினைக்கின்றது தெரிகின்றது.)
அப்படித்தான் போன வருடம் செய்தனான் ஒன்றும் நடக்கவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதற்குள் எத்தனை புயல் எத்தனை சூறாவளி வாழ்க்கையில் நடந்திருக்கின்றது.
அதுதான் விதியின் சதி.....
2009 வருடத்தை.... வரவேற்போம்.
வாழ்த்துவோம் வெற்றியோடு வாழ்வோம்....

Tuesday, December 23, 2008

சிரிப்பு


சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.... இன்றைக்கு அமர்க்களமாக சிரிப்பைப்பற்றி கொஞ்சம் சிரிக்கலாமே.
பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு பழசுகள் சொல்லுங்கள் இந்த டயலொக்கை அந்தக் காலத்தில பெண்கள் சிரிச்சாலே தப்பாக பார்ப்பார்களாம்.
( ஏன் அவர்கள் பேய் மாதிரி சிரிக்கின்றார்களோ தெரியவில்லை அதனால் தான் அப்படி சொன்னார்களே)
சரி நாம் நாளந்தம் யாருடையாவது முகத்தில் முழிக்கும் பொழுது அவர்கள் முகம் ஏதோ இழவு விழுந்த மாதிரி இருந்தால் அன்று உங்களது நாள் எப்படியிருக்கும் சும்மா அதிருமலே.ஆனால் புன்னகைத்த முகத்துடன் பார்த்தால் உங்களது முகத்தில் எத்தனை சந்தோஷங்கள்.
அத்தனைக்கும் ஒரு பெண் சிரித்தால் சும்மா அவ சிரிப்பாலயே சிக்ஸர் அடிச்சுட்டு என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

சிரிப்பிலே எத்தனை வகை என்று கேட்டால் கட்டாயம் எனக்குத் தெரியாது.
நான் ஒன்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லை அவ்வளவுக்கு சிரிப்பை ஆராய.
எனக்குத் தெரிந்த சிரிப்புக்களும் என்னைக் கவர்ந்த சிரிப்புகளும் என்றுதான் சொல்லலாம்.
(அ...அ.. இவர் ரசித்துப் பார்த்ததை நாங்க ஏன் படிக்க வேண்டும் எங்களுக்கு வேற வேலை இல்லை என்று நீங்கள் மனதுக்குள் பேசுகிறது தெரிகிறது)

மனதுக்குள் சிரிக்கும் பெண்ணே
என் மனம் மறிய மாட்டாயோ
மாரி மழை பொழிந்த வேளையிலும்
மனம் இரங்க மாட்டாயோ

ஐயோ சாமி இது நான் காதலியைப் பார்த்து படித்தது என்று நினைக்க வேண்டாம். எல்லாம் கனவில வந்த வர்ணங்கள் ஆயிரத்தில் ஒன்றுதான்.

புன்னகை இளவரசி சினோகாவும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் புன்னகையையும் பார்த்து எத்தனை நெஞ்சங்கள் மனம் மகிழந்திருக்கின்றன.
சிரித்த முகத்துடன் காணப்பட்டால் அனைவரையும் நீங்கள் கவர்ந்து இழுக்கலாம். அதற்காக ஓவரா சிரிச்சீங்களோ உங்களை இழிச்சவாயன் என்றுதான் நினைப்பார்கள்.
வாரணம் ஆயிரம் தந்த அழகி சாமிரா ரெட்டி .அவளின் கண்கள் கவிதை சொல்ல வில்லை. உதடுகள் உச்சரிக்கவில்லை. கார்கூத்தல் உதிரவில்லை.ஆனால் அவள் உதிர்ந்த புன்கையோ ஆயிரம் அர்த்தங்கள்...
கொஞ்சம் படங்களைப் பாருங்களே ............
சரி எடுத்த மேட்டருக்கு வாரமல் எங்கேயோ போகிறாய் என்று நினைக்க வேண்டாம்.
சிரிப்பு
இந்த நாலு எழுத்துக்களையும் உச்சரிக்கும் உதடுகள் கட்டாயம் சின்னப் புன்னகையாவது உதிரத் தோன்றும்.
நீங்கள் அலுவலகத்தில் செல்லும் பொழுது உங்களது மேலதிகாரி தொடக்கம் உங்களுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களையும் நீங்கள் ஒரு சின்ன புன்னகையித்தால் போதும் அவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிடுவீர்கள்.
உங்களுக்கு கோபங்கள் வரும்பொழு நீங்கள் கண்ணாடி முன் போய் சிரித்துப் பாருங்கள் உங்களது முகம் எப்படி இருக்கும் என்று (அதற்காக நாங்கள் என்ன போகின்ற இடம் எல்லாம் கண்ணாடி கொண்டு போகவா முடியும் என்று கேட்க வேண்டாம்.)
உங்களது வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் வந்தால் அது உங்களது முகத்தில் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் நீங்கள் உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை உலாவ விடுங்கள் அது மற்றவர்களுக்கு சந்தோஷத்தையே கொடுக்கும்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போய்விடும்..... என்று சொல்வார்கள்.
அதற்காக இரவு 12 மணிக்கு எழும்பி சிரிச்சீங்களோ உங்களுக்கு பேய் பிடித்துவிட்டது என்றுதான் நினைப்பார்கள். அதற்காக நீங்கள் சிரிக்காமல் இருந்து விடக்கூடாது அதற்கா ஒரு நேரம் ஒதுக்கியே இன்று பலர் சிரிப்பையே ஒரு மருந்தாக நினைத்து காலையில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பொழுது குழுவாக சேர்ந்து சிரிக்கின்றார்கள்.
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை சிரிக்கின்றீர்கள் என்பது முக்கியம் அதனால் உங்களது ஆயுள் அதிகரிக்கும் அதேவேளை நீங்கள் இளமையாகவும் இருப்பீர்கள்.குழந்தையின் சிரிப்பில் மகிழாத இதயம் உண்டா சொல்லுங்கள்....
இன்று பலபேருடைய செல்போன்களில் குழந்தைகளின் சிரிப்புக்களே சிருங்காரம் செய்கின்றன.ஏன் நீங்கள் அலுவலகம் விட்டு வீடு களைப்புடன் வீடு செல்லும்போது உங்களது குழந்தைகளின் சிரிப்பைக் கேட்டாலே உங்களது களைப்பு எல்லாம் பறந்துபோய்விடும் அல்லவா.

புன்னகை எனும் ஆயுதம் ஏந்தி
இந்த பூமி தனை ஆண்டிடுவோம்
(சிரியுங்கள் மற்றவர்கள் உங்களை சிரிக்காதவரை..)

Friday, December 19, 2008

கடலை போடுவது ஆபத்தா?

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.

Saturday, December 13, 2008

இப்படியும் குளிக்கின்றார்களாம்....




இந்தக்குளிரிலும் இப்படிக் குளிக்க இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்துச்சோ தெரியவில்லை.
( என்னடா இவன் குளிக்கேலையா என்று நினைக்க வேண்டாம்)சீனாவின் Liaoning என்னுமிடத்தில் ஆறு பனிக்கட்டிகளாக உறைந்துபோய்யுள்ளது. அதில் குளிப்பதற்கு இவர்களுக்கு வந்த ஆசையினால் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகளை வெட்டி அதற்குள் குளிக்கின்றார்கள் நீச்சல் வீரர்களாம் இவர்கள்.

ஒபாமா அலையாம்........
















Monday, December 8, 2008

நட்பு.........................




நட்பைப்பற்றி நண்பர்களுடன் விவாதித்துவிட்டு வருகின்றேன் என்றேன்.விவாதித்தேன்...... சும்மா வந்து விழுந்த அம்புகள் என்னைக்குத்திவிட்டன. அதனையும் எனது நண்பர்கள் எனக்குத்தந்த முத்துக்கள் (எனது அறிவுக்கு) என்றுதான் சொல்ல வேண்டும். (உங்களுக்கு அது முத்தோ இல்லையோ எனக்குத் தெரியாது முத்தாகப் பட்டால் வாழ்த்துங்கள் இல்லையேல் நல்லாகத் திட்டுங்கள்.)

புரிந்துணர்வு... நண்பர்களுக்கிடையில் வருவது முக்கியம் ... புரிந்துகொண்ட நண்பர்கள் இன்று எத்தனை பேர் காதலர்களாகவும் எத்தனை பேர் கணவன் மனைவியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அத்தனைக்கு அவர்களது புரிந்துணர்வுதான் காரணம்.

விட்டுக்கொடுப்பு...
ஐயோ சாமி இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு கோபம்கோபம்தான் வரும் ஏன் என்றால் நான் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கின்றேன்.. அதனால் பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கின்றது.ஆனால் நான் விடுக்கொடுக்கும்போதேலாம் அதை எனது நண்பர்கள் இவனுக்கு சூடு சுறனை இல்லை என்று திட்டுவார்கள். இவனுக்குகோபமே வராதா? இவன் எல்லாம் ஒரு மனிதனா என்றேலாம்..... கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் நான் எதனையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ஏன் என்றால் எனது நண்பன்தானே எனது நண்பிதானே நாளைக்கு எனக்கு அவர்கள் முக்கியம் நான் கோபப்பட்டு ஒருவார்த்தை சொன்னால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமோ தெரியாது. அப்படி நான் எதாவது சொன்னால் எமது நட்புக்குள் கலங்கம் வந்துவிடுமோ என்றுதான்.ஆனால் என்னை புரிந்த நண்பர்கள் புரியாத நண்பர்கள் என்று எத்தனை விதம் அத்தனைக்கும் விட்டுக்கொடுப்புகள்தான் காரணம் .என்னடா சொந்தப்புராணம் பாடுறானே என்று நினைக்க வேண்டாம்.... விட்டுக்கொடுங்கள் உங்கள் நண்பனுக்கு நண்பிக்கு.... ஆனால் அதையும் ஒரு அளவுகோலோடுதான் விட்டுக்கொடுக்க வேண்டும். (நட்புக்கு மரியாதை என்று சினிமா டயலொக் ஒன்றும் அடிக்கவேண்டாம்)

ஈகோ.... உங்களது நண்பனுடன் நண்பியுடன் சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம்தான் ஆனால் யார் முதலில் கதைப்பது அவன்பெரியதா நான் பெரிதா அவள் பெரிதா நான் பெரியதா என்ற ஈகோ...
கிளம்பிட்டான் ஐயா கிளம்பிட்டான் இது உங்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் பேய் என்று சொல்லலாம் உங்களிடத்தில் ஏன் இந்த ஈகோ குடிகொள்ளுதோ தெரியவில்லை.
புகைப்பதும்
மது அருந்துவதும்
மாதுவிடம் செல்வதும்
இதை எல்லாத்தையும் விட ஈகோ மிக கொடுமையானது கிடையாது என்பதுதான் எனது கருத்து.ஒரு சின்ன உதாரணம் தரளாம் என்று நினைக்கின்றேன்:
ரஜனியை எதிர்த்து ஜெயலலிதாவின் கட்சியில் பிரசாரம் செய்தவர் ஆச்சி மனோராம்மா.. ரஜனி இருக்கின்ற உயரம் என்ன மனோராம்மா இருக்கின்ற உயரம் என்ன? அது உங்களுக்குத்தானே தெரியும்.
ரஜனிக்கு ஈகோ இருந்திருந்தால் மனோரம்மாவை என்ன செய்திருக்கலாம்.ஆனால் தனது அருணாச்சலம் படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்.அன்றுதான் செய்த தப்பை உணர்ந்து மனம் வருந்தியவர் மனோராம்மா.
ஆனால்.....................................................
உங்களுக்கு எது சரி என்று பட்டதை நீங்கள் செய்வதை விட .உங்களது நண்பர்களுடன் கலந்து ஆலோசியுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தோழ் கொடுப்பான் தோழன் என்று சும்மாவா சொன்னார்கள். ஆனால் நீங்கள் அளவோடு தோழ்கொடுங்கள்.... என்றுதான் சொல்லதோன்றுகின்றது...ஏன் என்றால் எனது நண்பன் ஒரு உதாரணம் சொன்னான் அதான்... நீங்கள் உங்களது நண்பன்தானே நண்பிதானே என்று நீங்கள் விட்டுக்கொடுத்தால் அதுவே உங்களுக்கு சில வேளை ஆபத்தாக அமைந்துவிடலாம்.
நாயை தூக்கி மடியில் வைத்தால் அது கட்டாயம் நக்கித்தானே தீரும்..
நாயே இப்படி இருக்கும்போது ஆறு அறிவுபடைத்தவர்கள் மனிதர்கள்.
நட்புக் கொள்ளுங்கள் அது உங்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் பார்த்துசெயற்படுங்கள்....ஏன் என்றால் சினிமா துறையில் எத்தனை நண்பர்கள் இன்றைய திகதியில் பிரிந்துசெல்கிறார்கள் எம்.எஸ்.வி. -ராமமூர்த்தி தொடக்கம் இன்றைய ஹரிஸ் ஜெயராஜ்-கௌதம், யுவன்-செல்வராகவன் என்று நீண்டுகொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே நட்பு அது நிலைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களது நண்பனோடோ நண்பியோடோ வெளிப்படையாக இருங்கள் ஆனால் வெகுளியாக இருக்காதீர்கள்.

Friday, December 5, 2008

தோழா தோழா


தோழா தோழா தோழ்கொடு தோழா.. என்ன பாட்டுப்பாடுறன் என்று நினைக்கவேண்டாம். காதலைப் பற்றிப்போட்டுவிட்டானே... நட்பைப்பற்றிப்போடவில்லையே இவனுக்கு நண்பர்கள் இல்லையோ நட்பைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்றேல்லாம் திட்ட வேண்டாம்.
மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று உங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது மிகக்குறைவாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் பாடசாலை முதல் நீங்கள் பல்கலைக்கழகம் முடிக்கும் வரை எத்தனை பாடசாலைகள் எத்தனை கல்விநிறுவனங்கள்எத்தனை நண்பர்கள்.... அத்தனையும் பசுமையின் சின்னங்கள்.
அதன் பின் தொழில் சார் நண்பர்கள் என்று உங்களின் நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஆண், பெண் நட்பு அது இன்று சர்வசாதாரணமாகிவிட்டதொன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக பழகுவதே ஒரு செய்தி-ஒரு பரபரப்பு- அவர்களை தவறான பார்வையில் பார்ப்பதும் நோக்குவதும் சமூகத்தில் இருந்து வந்தது.
ஆனால் இன்று அது கால ஒட்டத்தில் மறைந்து போய்விட்டது.நமது கலாச்சாரம் வெளிநாட்டின் கலாசாரத்தில் ஒன்றிப்போய்விட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது.ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் நட்பாக பழகலாம் அதில் எந்தத் தப்புமில்லை ஆனால் ஒரு வரையறைஎன்பது கட்டாயம் தேவைப்படுகிறது.நண்பர்களுக்கிடையில் ஒளிவு மறைவு என்பது இருக்கக்கூடாது.கணவன் மனைவிகள் கூட தங்களுக்குள் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.ஏன் நீங்கள் கூட ஒரு விடயத்தை உங்களது பெற்றோர்களிடம் பகிர்ந்துகொண்டீர்களா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...“நான் எனது அப்பா அமமாவுக்கு எல்லா விடயத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்று.பதில் இல்லையென்டுதான் வரும்.பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விடயத்தையும் நாம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.அவ்வாறு நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் நல்லதோ கெட்டதோ ..... உங்களது மனோ நிலையும் அந்த விடயத்தை நீங்கள் நோக்கும் பொழுது அது உங்களைப் பாதிக்கும் விதமும்தான் முக்கியம்.நீங்கள் நட்புக்கொள்ளும் நண்பர்கள் அனைவரையும் நீங்கள் நண்பர்களாகக் கொண்டாலும் நீங்கள் உங்களது வட்டத்திற்குள் சிலரையே வைத்திருப்பீர்கள். அவ்வாறு வைத்திருக்கும் நண்பனோ நண்பியோ....தான் உங்களது துன்பத்திலும் இன்பதிலும் பங்குகொள்கின்றார்கள்.அதற்காக மற்றவர்கள் பங்குகொள்ள மட்டார்கள் என்று இல்லை..என்னதொடர் கதையா என்று நினைக்க வேண்டாம்....நண்பர்களிடம் நான் இதைபற்றி விவாதித்து விட்டு தொடர்வேன்.

Tuesday, December 2, 2008

துளிகள்


யார் இந்த நாராயணன்?

இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியும் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர் குலைக்க மத்திய அரசுடன் செயல்படுவருபவர். தமிழ் நாட்டில் உளவு துறையை மிகவும் சதூரியமாக கையாளக்குடிய நபர் இவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்று காத்துக்கிடந்தனர். ஈழத்தின் அவல நிலைமைகளை பிரதமருக்கு சொல்வதற்காக இருந்தனர். அப்போது அவர்களை சந்திக்க விடாமல் செய்தவரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இந்த நாராயணன். கியூபாவில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பதற்கு ஏற்படு செய்துகொடுத்தவர்.
தமிழர்களின் நலனில் அக்கறையில் துளி கூட விரும்பம் இல்லை இந்த நாராயணனுக்கு இவர் தனது பெயரை நரதர் என்று மாற்றி வைத்திருக்கலாமே?
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் எம்.கே.நாராயணன் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளின.
ஏதோ இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய வீரன் என்ற எண்ணத்தில் அவர் மீது அவ்வளவு பாராட்டு மழை.
பின்ன அவருக்கு இதைக் கூடாச் செய்யாவிட்டால் தேச தூரோகம் ஆகிவிடும் அல்லவோ?
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டக் காரணமாக இருந்தவர்கள் இருவர் (நரிகள்) ஒருவர் டிஸ்சித்தும் நாராயணணும்தான்.
இவர்கள் இருவரின் வழிகாட்டுதல்தந்திரம் போன்ற காரணங்களினால்தான் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைக்கு வந்ததும். உலக அரங்கில் அது அவமானப்பட்டு திரும்பிப்போனதுக்கும் இவர்களின் இராஜதந்திரங்களே காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று விடுதலைப் புலிகளின் தலைவரை நிர்ப்பந்த்திற்குள் உள்ளாக்கி எப்படியாவது இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று பாடுபட்டவர் இந்த நாராயணன்.
ஆனால் அது பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளை தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு என்று உலக அரங்குகளில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்.
90 களில் தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் நாராயணன் மேற்கொண்ட சதிதான் காரணம்.
தி.மு.க தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கு என்று அறிக்கை சமர்ப்பித்தவரும் இந்த நாராயணன்தான்.
அதனால் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் வேண்டப்படாத நபர்களில் நாராயணணும் ஒருவர்.
அதன் காரணமாக கருணாநிதியை சந்திப்பதற்கு நாராயணன் பலமுறை முயற்சி செய்தும் அவர் அதை மறுத்து வந்தார்.
ஆனால் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரா வந்த பின் கட்டாயம் அவரை சந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு.
இலங்கையில் இடம் பெற்ற சார்க் மாநாட்டில் தனியார் காரில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சென்றவர் என்ற பெருமை நாராயணனையே சாரும் அவ்வளவு அவருக்கு இலங்கை மீது நம்பிக்கையாம்?
நாராயணன் (நரி) பற்றி மேலும் பல விடயங்கள்.... வரும்

Wednesday, November 26, 2008

வர்ணங்கள் ஆயிரம்

கௌதம்மேனனின் உணர்வுகளின் குவியலா அல்லது உணர்ச்சிகளின் குவியலா என்று சொல்லத் தோன்றுகின்றது வாரணம் ஆயிரம் .தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தையும் தன்னால் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். அவர் செதுக்கிய சிற்பங்கள் ஆயிரம் சேர்த்துத்தானோ இந்த வாரணம் ஆயிரம்.தந்தை மகன் பாசம் தான் கதை என்றாலும் சின்ன சின்ன உணர்வுகளை காட்டிய விதம் பிரமிக்க வைக்கின்றது.தந்தை 5 அடி பாய்ந்தால் பிள்ளை 20 அடி பாயும் என்பார்கள். அதை போல சிவகுமாரையே மிஞ்சிவிட்டார் சூர்யா.சூர்யா தந்தை மகன் என்று இரண்டு கதாபாத்திரங்கள் சும்மா பின்னியெடுக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கு அவனது தந்தைதான் முன்னோடி. அவ்வாறு இருக்கும் தந்தையையே தனது முன்னோடியாக கொண்டு சிறு வயது முதல் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.தந்தை கதாபாத்திரத்திற்கும் மகன் பாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கின்றார் ஸாரி வாழ்ந்திருக்கின்றார்.சாமிராரெட்டி தமிழுக்கு புதுவரவு நல்லவரவு இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் பட்டாம் பூச்சி.சாமிரா ரெட்டி சூர்யா காதல் இளையராஜாவின் இடைக்காலத்துப் பாடல்கள் கேட்ட அனுபவம்.... இதை நான் சொல்ல வில்லை படத்திலேயே சூர்யா சொன்ன வசனம்.இவர்களது காதலையும் அமெரிக்காவின் அழகையும் பசுமையாக தந்த கமெராமென் ரத்னவேல் சூப்பர்.சிம்ரனின் நடிப்புக்கு ஒரு சபாஸ்போடலாம் தந்தை சூர்யா இறந்தபோது மகன் சூர்யாவை பார்க்கும்பொழுது தனது முகபாவத்தினாலேயே அத்தனை வேதனைகளையும் செய்து விடுகின்றார்.தியா (குத்து ரம்யா) அனைவரதும் வாழ்விலும் காட்டாயம் இப்படி ஒரு பொண்ணு வருவாள் வந்துகொண்டு இருப்பாள் என்பதை புடம் போட்டு காட்டியிருக்கின்றது.கண்களினால் ஒரு கவிதை என்றே சொல்லலாம்.இசை..................................................... படத்தின் பெரும்பலமே ஹரிஸ்ஜெயராஜ் முந்தினம் பார்த்தேனே..... நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... அவ என்னைத் தேடி தேடி வந்த அஞ்சல.. அனல் மேல பனித்துளி... பாடல்கள் இதம். பெண்கவிஞர் தாமரையின் வரிகள் நன்று.என்னடா... படத்தைப்பற்றி இவன் ஓவரா ரீல் விடுறான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நிலவில் கூட கறை ஒன்று இருக்கத்தான் செய்யும். சில காட்சிகளின் நீளம் அதிகம் தான் சூர்யா போதைக்கு அடிமையாகும் காட்சி... மற்றும் காஷ்மீரில் இடம் பெறும் காட்சிகள்...அதை விடுத்துப்பார்த்தால் .வாரணம் ஆயிரம் வர்ணங்கள் ஆயிரம் என்றுதான் சொல்லவேண்டும்.

Monday, November 24, 2008

பாகம் 2


என்ன தொடரும் என்று போட்டுவிட்டு என்னும் பதியாமல் இருக்கின்றானே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது. இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.
தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.
தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.
காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை. காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம்.

அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.
தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......

இந்தக்காதல்......

பொறுங்கோ வாரேன்.....

உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?
உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும். ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.
அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.
மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .
அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“
உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவ
னையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.
நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்
என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.
2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....

உடல்கள் இணையும் காதல்.....
அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்று
சிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.
அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர்கள் காதலியுங்கள்
உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.
பொது இடங்களில் உங்களது காமலீலைகளை
அரங்கேற்றதீர்கள். நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

Friday, November 21, 2008

என்பார்வையில் காதல்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது. சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம். ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது. இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.காதலைப்பற்றி எழுத நிறையவே இருக்கின்றது ஆகையால் இன்னும் அது தொடர்ந்து வரும்....

Monday, November 17, 2008

மாமனார் வீடுக்கு மருமகனின் நன்றி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி யும் நேற்று(16.11.2008) நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டிருந்தார்.காலை 8 மணி முதல் மாலை4 மணி வரை இந்த உண்ணாவிரதம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தை விட அதிகமான ரசிகர்கள் மாநிலங்கள் தோறும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர்.அது சரி எல்லா நடிகர்களும் இருக்கும் போது விஜய் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா? அதனால் தான் இப்படி ஒரு உண்ணாவிரதம் என்று கோடம்பாக்கத்தில் இப்பொழுது பரப்பரப்பாக பேசப்படும் விடயம் எவ்வளவு மூத்த நடிகர்கள் விஜயகாந்த்,கமல், ரஜனி போன்ற ரசிகர்படைகளை வைத்திருக்கும் நடிகர்களுக்கு வரத இந்த எண்ணம் விஜய்கு ஏன் வந்தது? என்றுதானே நீங்கள் கேட்கின்றீர்கள்.விஜய் புகுந்த வீடு லண்டனாக இருக்கலாம். ஆனால் அவரது மனைவி சங்கீதா ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அவரதுபூர்வீகம் ஈழம் .மனைவியின் தாய்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் மருகமன் அதற்காக கண்ணீர் விடத்தான் வேண்டும். அதை நல்ல மருகனால்தான் முடியும் அவ்வாறு விஜய் செய்தது வரவேற்கத்தக்கது.அதைவிட உலககலாவிய ரீதியாக நோக்கினாலும் ரஜனிக்கு அடுத்தபடியாக இன்று மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்த நடிகர் என்றால் அது விஜய்தான்.ஈழத்தில் விஜய்க்கு அதிகமான ரசி
கைகள் இருக்கின்றார்கள் எனவே தனது ரசிகர்களுக்காகஅவர் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் அவர்களின் மனங்களில் ஒருதெம்பையே ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்லலாம். நாம் விரும்பும் நடிகர் இவ்வாறு தங்களுக்காக குரல் கொடுத்தது என்பது அவர்களுக்கு ஆறுதலாகவே இருக்கின்றது என்று சொல்லலாம்.அது சரி என்ன ஒரே விஜய் புரணம் படுகிறான் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.கோடம்பாக்கத்தில் இப்பொழுது பெரும் பரப்பரப்புக்குள்ளான இந்த உண்ணாவிரதம் விஜய் அரசியல் நோக்கோடு இதை பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அடித்தளமாக இந்த உண்ணாவிரதம் இருந்தது என்று சில பட்சிகள் கூறுகின்றன.ஒரு புதிய அரசியல் கட்சியால்கூட இவ்வாறு கூட்டம் கூட்டமுடியுமா என்பது சந்தேகம்தான் சரி பொறுத்திருந்துபார்ப்போம் என்ன நடக்குது என்று.

Wednesday, November 12, 2008

கொண்டாட்டங்களை நிறுத்திய கமல்

எதோ வண்டியை நிறுத்தியதாக நீங்கள் நினைக்கவேண்டாம். ஈழத்தில் நடக்கும் போர் காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அந்த வேளையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஓகே அதுசரிதான் தனது இரத்த சொந்தங்கள் பாதிக்கப்படும் பொழுது எனக்கு என்ன பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கமல் நினைத்திருக்காலாம்.ஆனால் கொழும்பில் உள்ள பல இலத்திரனியில் ஊடகங்கள் கமல் பிறந்த நாளை கொண்டாடியது அவர்கள் கொண்டாடியது தப்பில்லை. அவர்கள் எதையும் எப்பவும் கொண்டாடி ஆக வேண்டிய நிலையா நிர்ப்பந்தமா தெரியவில்லை.ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் எதுவுமே தெரியாததுபோல இவர்களின் கொண்டாட்டங்கள் இருந்தன.வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடலாமா? இல்லை உண்மையைச் சொன்னால் ஊடகங்களை நிறுத்திவிடுவார்கள் என்ற பயமோ தெரியவில்லை.ஊடங்கங்கள் தான் இவ்வாறான செயல்களில் இருக்கின்றது என்றால் மக்களுமா?ரசிகர்கள் என்ன செய்கின்றார்கள் தங்களது தலைவன் இவ்வாறான ஒரு அறிக்கையை விடுகின்றார் என்றால் இவர்களுக்கு எங்கே போயிற்றுது புத்தி.கொழும்பு எதோ அமெரிக்காவிலும் ஈழம் எதோ அவுஸ்திரேலியாவிலும் இருப்பதுபோல பிரம்மையில் இருக்கின்றார்களா?இல்லாவிட்டால் எங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கின்றார்களா என்று தெரியவில்லை.தமிழ் நாட்டில் இன்று இருக்கின்றநிலைமை இலங்கையில் உள்ள மக்களுக்கு அதுவும் கொழும்பில் உள்ள மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகக் கூட தங்களது ஆதங்கங்களை இந்த ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

Monday, November 10, 2008

ஈழப்பிரச்சினையும்சினிமா ஒப்பனைகளும்

ஈழத்தில் போர் தொடங்கி இற்றைக்கு 30 வருடங்கள் ஆகின்றன ஆனால் சில தமிழ்ச்சினிமா நட்சத்திரங்கள் நேற்றுத்தான் ஈழத்தில் போர் நடப்பதுபோலவும் அங்குள்ள அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் எடுக்கப்படுவதை அதிசயமாகப் பார்க்கின்றன.
அது சரி ஈழத்துப்பிரச்சினையைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை உலகம் அறிந்த ஒன்று அகையினால் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகள் கட்டாயம் ஈழமக்களுக்குத் தேவை அது நடிகர்களினால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்றால் அது சிலருக்கு தங்களின் அரசியல் இலாபங்ககளுக்காகவே உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபடுகின்றனரே என்றே சொல்லத் தோன்றுகின்றது.நடிகர் விஜயகாந்தை அரசியல் வாதி என்பதை நிறுபித்துவிட்டார் பல வருடங்களாக ஈழத்தில் மக்களுக்கு எப்பொழுது அமைதிகிடைக்கின்றதோ அப்போது தனது பிறந்த நாளை கொண்டடுவேன் என்று கூறிய விஜயகாந்தா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
உண்ணாவிரததில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்று அறிவித்தபோதும் கமலின் உரையில் குருதிப்புனல் பட வசனம் உதவியது அது போல ரஜனிகாந்த மத்திய அரசையும் இலங்கை அரசையும் சாட்டை அடி கொடுத்தார் என்றார்கள்.
அது சரி நியாயம் என்று நாம் பார்த்தாலும் ரஜனியின் அடுத்தபடம் ரோபா 150 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படுகின்றது. அதற்கு தயாரிப்பு ஈழத்தைச் சேர்ந்த ஐங்கரன் நிறுவனம். உலக ரீதியில் ரோபோ வெற்றி பெறவேண்டும் என்றால் ஈழத்தமிழரை கட்டாயம் ஆதரிக்கவேண்டிய நிலை ரஜனிக்கு. குறைந்த பட்ஜட் குசேலன்னுக்காக கன்னட மக்களிடம் தான் பேசியது தவறு என்று கூறி அங்கே தனது படத்தை ரிலீஸ் செய்தவர் இவர் .அப்படிப் பார்த்தால் ரோபோவுக்காக இவர் பேசியது என்றே நோக்கத் தோன்றுகிறது தவிர ஈழமக்களுக்காக பேசியிருந்தால் வரவேற்கத்தக்கது.ஏகன், துரை படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்வதை ஈழத்தமிழர்கள் தடை செய்தார்கள்.அது அந்தப் படத்தின் நாயகர்கள் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்ற வதந்தி என்று சொல்லப்படுகின்றது.அது சரி இது சதியாக இருக்கலாம் என்று யார் ஆவது யோசித்தார்களா இல்லை இந்த இரண்டு படங்களையும் தயாரித்தது இதே ஐங்கரன் நிறுவனம் தான்.அவர்களை படங்கள் தயாரிப்பதில் இருந்து முடக்குவதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சதி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.ஈழத்தமிழர்கள் உணர்ச்சிமிக்கவர்கள் என்பதை புரிந்துகொண்டு அவரான செய்தியை முதலில் வெளியிட்டதே இந்தியப் பத்திரிகை ஒன்று அதன் உண்மைத் தன்மையை புரியாமல் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு நடிகர்களின் மீதும் படங்களின் மீதும் கோபம் கொண்டனர்.
நாயகர்கள் உண்மையாக அப்படி பேசவில்லை என்பது அவர்களின் உண்ணாவிரத உரையில் தெரிகிறது.
ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள் இருக்கிறார்கள் வரவேற்கத்தக்கது.அதை விட ரசிகர்கள் போட்டிக்கு போட்டியாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.ஈழத்தமிழருக்காக இருக்கிறார்களா இல்லை தல தளபதி என்றா போட்டியில் இருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்தினார்.அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தார்.விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றார்கள்உண்மையான உணர்வாயின் வரவேற்போம்.
நமூர் காரன் ஆகாஷ் இவரை எப்படித்தான் சொல்வதென்று இருக்கின்றது இவரைப்பற்றி சொல்வதென்றால் பச்சோந்தி என்றே சொல்லத் தோன்றுகின்றது.அப்படி நல்லவர் தமிழ்சினிமா உலகிற்கு விஜய்க்குப்போட்டிய வருவேன் என்று மார்பு தட்டிக்கொண்டு இருக்கிறவர்.அதுசரி இவருக்கு உண்ணாவிரதம் இருக்க என்ன தகுதி இருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இவர்.இலங்கை வரும்போது தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்றும் இந்தியாவில் தான் லண்டனைச் சேர்நதவன் என்றும் தெலுங்கு சினிமா உலகில் தான் பெரிய ஹீரோ என்றும் பொய் சொல்லித் திரிபவர் மட்டுமல்ல தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காக பத்திரிகைகளில் பொய்யான செய்திகளை வழங்குவதில் இவரைப் போல கில்லாடியை நாம் பார்த்திரு“கக முடியாது.உண்மையான தமிழன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற உணர்வு இருந்தால் தனது அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம். இவரை விட மன்சூர் அலிகான் எவ்வளவோ மேல்..
ரி.ஆதி

Saturday, November 8, 2008

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே
இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவரசர்களுக்கு முடிசூட்டும் விழாவும் விழாவில் ஏற்பட்ட சறுக்கல்களும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ஏன் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது.அன்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும்சரி சக்தி ரி.வியில் பார்த்தவர்களும் சரி நிகழ்ச்சியின் ஏற்பாட்டிலும் சரி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செய்தார்களா?அவர்கள் நிகழ்ச்சிய நடத்துவதில் இருந்த ஆர்வத்தைக்காட்டிலும் ஏதோ மாட்டு மந்தையை அடுக்குவது போன்று காட்டுக்கத்தல் இருக்கிறதே அதை ரசிக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்கள்.குறிப்பாக சக்தி எப்.எம் பொறுப்பாளர் மாயா ( உண்மையான பெயர் மாயாண்டி) அவர் மேடை நிகழ்ச்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்துதான் செய்தாரா?அல்லது வடிவேலுமாதிரி எதாவது காமடி கிமடி பண்ணினாரா என்று தெரியவில்லை.அவர் உச்சரிக்கும் பல வார்த்தைகள் சரியில்லை குறிப்பாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுக்கபோகிறோம் என்று அறிவித்தார்.இவரை எல்லாம் யார் மேடை நிகழ்ச்சிக்கு விட்டது?.................................................... இந்த புள்ளி ஏன் இட்டேன் என்றால் வார்த்தைகளால் சொல்ல முடியாத தவறுகள் மயாவில்.
கஜமுகன் ஏனோ தானோ என்று அடிக்கடி விளம்பர இடைவேளை சொல்வதில்லையே கவனமாக இருந்தார்.
பிரியா சக்தி ரி.வி( சக்தி ரி.வியில் வேற அறிவிப்பாளர்கள் இல்லைப்போல)தனக்கும் மேடை நிகழ்ச்சியை நடத்தும் திறமை இருக்கு என்று காட்டிக்கொண்டு திருவிழாவில் காணாமல் போன குழந்தை எவ்வாறு கத்துமோ அவ்வாறு இருந்தது அவரது அறிவிப்பும் ஏனோ தனக்கும் காமடி பண்ண முடியும் என்று ரை பண்ணியிருக்கிறா போலா.
பாராட்டக்கூடிய சில விடயங்கள்
1. நமது கலைஞர்களை ஊக்குவித்தமை
2. இறுதி நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைக்காமை
3. நமது பாடகர்களை நடுவர்களா பயன் படுத்தியது வரவேற்கத்தக்கது
4. இசை இளவரசர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இவ்வளவு காலமும் நடத்தியமை வரவேற்கத்தக்கது.
சக்தி ரி .வி. இசை இளவரசர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷியா எங்கே?இசை இளவரசர்கள் முடிசூட்டியவர்களுக்கும் முடிசூட்டாதவர்கள் தழைத்தவர்கள் அல்ல அனைவரும் திறமை சாளிகள் என்றே தெரிகிறது.ஏதோ இந்தியா தரத்துடன் ஒப்பிடாமல் நமது கலைஞர்களை நாம் வளர்ப்போம் வாழ்த்துவோம் .

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...