Tuesday, June 9, 2009

கோபங்களும் புரிந்துணர்வுகளும்


எனக்கு கோபத்தைப் பற்றி பதிவு ஒன்று பதிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆவா.ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை இன்று கோபத்தைப் பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் கொஞ்சம் அலசலம் என்று நினைக்கின்றேன்.
கோபம் எத்தனை வகை என்று எல்லாம் எனக்கு அவ்வளவாக அறிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
எதற்காக ஏற்படுகின்றது?
ஏற்படுவதற்கான காரணங்கள்... இவை பற்றியும் பார்த்தோமானால் காதலர்களின் கோபங்களை நான் பார்த்திருக்கின்றேன்.
நேரத்திற்கு வராவிட்டால் கோபம்
வேறுபெண்ணுடக் கதைத்தால் கோபம்
டெலிபோன் வெயிட்டிங்கில நின்றால் கோபம்
தினமும் அவளை நினைக்கா விட்டால் கோபம்
இவை எல்லாம் காதலர்களுக்குள் இடையில் ஏற்படும் சின்ன சின்ன கோபங்கள்..
இதை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் அவ்வாறு செய்துகொண்டு இருந்தோம் என்றால் அதுவே நமது வாழ்கையை வேரோடு புடுங்கி எறிந்துவிடும்.
காதலிக்கும் போது எந்தப் பெண்ணும் எந்த ஆணும் யாருடனும் பழகலாம் என்று விடுவார்கள். ஆனால் அதுவே திருமணம் ஆனா பின்னர் அவ்வாறு நடப்பதற்கு இருவரும் அனுமதிப்பதில்லை அவ்வாறுநடந்தால் குடும்பத்தில் பிரிவுகள்தான் நிகழம் அது ஆணின் தப்பா பெண்ணின் தப்பா என்று சொல்ல முடியாது அது சமூகத்தின் தப்பாகவே இருக்கின்றது.
அந்தக் கோபங்களை நாம் எப்படி புரிந்துணர்வு மூலம் புரிய வைக்கலாம் என்றால் வெளிப்படையாக இருங்கள் எல்லாரிடமும் இல்லாவிட்டாலும் உங்களை நம்புபவர்கள் மீதும் நீங்கள் நம்புபவர்கள் மீதும் நீங்கள் தாராளமாக வெளிப்படையாக இருக்கலாம்.
அவர்கள்தான் உங்களைப் புரிந்து வைத்தவர்களாக இருப்பார்கள்.ஏன் அவர்களிடமும் உங்களுக்கு கோபம் வராத என்று கேட்ககூடாது அவர்களிடமும் கோபம் வரும் ஆனால் எந்த சூழ்நிலையில் அவருக்குக் கோபம் வந்தது என்பதை புரிந்து வைத்திருந்தால் அந்த உறவுக்குள் எந்தப்பிளவும் ஏன் எந்த விரிசலும் ஏற்படாது.
அப்படியிருந்தும் அவர்களுக்கிடையில் இடைவெளிகள் தோன்றும் என்றால் அவர்களிடையே புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்மையுமே காரணம்.
நீங்கள் ஒருவர் மீது கோபப்படும்போது அது அவர்களது உள்ளத்தை சுடாதவரைக்கும் நல்லது. அதை மிறி அது அவர்களது உள்ளத்தை சுட்டுவிட்டால்.
சுட்டாலும் மறக்காது நெஞ்சம் உயிர் உள்ளவரை அதை அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்.
(கோபம் இன்னும் தொடரும்)

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...