Wednesday, February 11, 2009

ஈழத்து இளம் குயிலும் ஒஸ்காரில்...

என்னடா எதோ பறவை ஒன்று ஒஸ்கார் போட்டிக்கு போகுது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.எங்கட நாட்டு பாடகர்கள் ஒஸ்கருக்காக போட்டியிடுகின்றாரா என்று வாய் பிழக்க வேண்டாம்.எம்மவர்களின் திறமைகள் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் உலகம் அறிந்துகொண்டிருக்கும் வேளையில்..புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்கின்ற ஈழத்து இளம் குயில் அருள்பிரகாசம் மாதங்கி பற்றித்தான் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் வரும் ஓ சாய பாடலை பாடியது இந்த மாயா என்ற மதங்கிதான்.மதங்கி என்றவுடன் நீங்கள் நினைக்க வேண்டாம் தென்னிந்திய பின்னணிப் பாடகி மாதங்கி என்று...இவர் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி ஈழத்தில் பிறந்த இவர் தனது 11 ஆவது வயதில் லண்டனுக்கு அகதியாக சென்றார்.அங்குள்ள சென் மார்ஷல் ஆட்ஸ் அகடமியில் தனது கலை பட்டப்படிப்பை முடித்தார்.பட்டபடிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப் பாடல்களை இயற்றுவதிலும் தானாக அல்பங்களை வெளியிடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் மேலைத்தேய பாணியில் பல பாடல்களை பாடிய மாயா இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களையும்துன்பங்களையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் துளிகள் சிந்தி பாடலை பாடினார்.அவரது இந்த பாடல் உலகத்தையே கண் கலங்கச் செய்தது. இதற்கமைய அவர் பாடலை பாடி முடிக்க இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் போரை நிறுத்து மக்களை கொல்லாதே என கோஷம் எழுப்பியுள்ளனர்.மாதங்கியின் பாடல்களின் பெரும்பாலானவை ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தை பற்றியவையாகவே உள்ளது.2005 ஆம் ஆண்டு அல்பம் ஒப் த இயர் விருதை பெற்றார். கடந்த வாரம் இடம்பெற்ற கிரம்மி விருதுக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.எனினும் விருது கிடைக்கவில்லை. எனினும் தனது முதல் குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு கிரம்மி விருது வழங்கல் நிகழ்வில் பாடல் பாடி அசத்தியுள்ளார் இந்த மாதங்கி.மாதங்கியின் புகழ் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கவில் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கின்றது . இதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் எமது ஈழத்து இளம் குயிலையும் பாட வைத்திருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடுவதே எம்மவர்களின் கனவாக இருக்கும் போது ரஹ்மானே தனது இசையில் முதல் தடவையாக ஈழத்து இளம் குயிலைச் சேர்த்துக் கொண்டதும் அப்பாடல் ஒஸ்கார் போட்டியில் கலந்து கொண்டுள்ளதும் நம்மலுக்குத்தானே பெருமை.... விருதை பெற மாயாவுக்கு வாழ்த்துக்கள்

1 comment:

Thenie said...

பெருமைக்குரிய விடயம்

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...