Sunday, April 26, 2009

தமிழீழம் தமிழனால் சாத்தியமா?

இந்தியாவின் தேர்தல் ஒரு புறம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் மறுபுறம் என்று இன்று காதுகளையும் மனங்களையும் காயப்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் ஆயிரக்கணக்கு.


ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

(நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியாமல் வேலைப்பழு என்ன செய்யமுடியும் உங்களை ஏமாற்றக்கூடாதே. அரசியல் தலைவர்கள்தான் ஏமாற்றுவார்கள் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். தினமும் பதிவு இட வேண்டும் என்றுதான் நினைப்பேன் முடியாமல் போய்விடும். இந்தப் பதிவும் இரவு 2 மணியளவில்தான் பதியவேண்டிய சூழ்நிலை)

நேற்று ஒரு செய்தியைக் கேட்டு புல்லரித்துப் போனேன் ஒரு நிமிடம் எனது கையை நானே கிள்ளிப் பார்த்துவிட்டேன் என்றால் பாருங்களன்.

தனிஈழம்தான் தமிழர்களுக்குத் தீர்வு என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இவ்வளவு காலமும் உலகத் தமிழர்களின் தலைவன் என்று தன்னை பெருமையோடு கூறிக்கொண்டிருந்த கருணாநிதிக்குக் கூட இந்தச் செய்தி ஒரு இடியாகவேத்தான் இருக்கும்.

வைகோவை பொடா சட்டத்தில் உள்ளுக்குத் தள்ளியதும் இந்த ஜெயலலிதாதான் ஆனால் இன்று வைகோவுடன் கூட்டும் தனித் தமிழீழந்தான் தீர்வு என்றும் சொல்லியிருக்கின்றார் என்றால் அவரின் மனதில் ஏற்பட்ட மாற்றமா? இல்லை இதுவும் ஒரு தேர்தல் வியூகமா என்று தெரியவில்லை.

கருணாநிதியின் கபடநாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இன்று தோல்வியில் முடிந்து நிற்கின்றது. சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களும் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் இராணுவம் விடுகின்றது என்று கலைஞர் ரி.வி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

முன்பு சினிமாக்காரர்களின் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் யார் நேரடியாக ஒளிபரப்புவது என்ற போட்டியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்த கருணாநிதி அரசாங்கம் இன்று ஈழம் தொடர்பான செய்திகளை மூடி மறைக்கின்றது என்றால் சோனியாவுக்கு பயந்துதான் இவ்வளவும் செய்கின்றார் இந்த கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் சொன்னதுதான் உண்மை என்று தோன்றுகின்றது.


6 கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ் நாட்டில் ஒரு கோடி தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் ஈழப்பிரச்சினைக்கு எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.ஆனால் 100 தமிழனுக்கு பிரச்சினை என்றால் ஒரு தமிழன்õதான் குரல் கொடுகின்றான்.

ஒரு ராஜீவ் காந்தியை கொண்டதற்காக ஒரு இனத்தையே அழிக்கின்றார் சோனியா காந்தி.
கர்நாடகத்தில் பிரச்சினையென்றால் முழுக்கர்நாடகமே கொந்தழிக்கின்றது.

சீக்கியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முழு சீக்கிய இனமுமே கலவரத்தில் ஈடுபடுகின்றது.


ஆனால் ஒரு தமிழனுக்கு பிரச்சினை என்றால்????????


அண்மையில் இலங்கை வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருந்த கருத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இந்தப் பிரச்சினையை கையாண்டிருந்தால் எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் இன்று ஒற்றுமையாக இருக்கின்றார்களா என்றுதெரியவில்லை.


தமது சுகபோக வாழ்க்கைக்கும் பணத்திற்குமாக தமிழன் இன்று விலைபோய்க்கொண்டுதான் இருக்கின்றான்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் என்றால் இன்று பிரபாகரனுக்கு எத்தனை எட்டப்பர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டினால்தான் அந்த இனத்திற்கு விடுதலை கிடைக்கும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருபோதும் தமிழன் என்ற இனம் போராடாது அப்படி போராடினால் அந்த இனம் உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.

Monday, April 20, 2009

வெறுங்குடங்களின் கையில் பத்திரிகை

இலங்கையில் ஊடகத்துறை வருங்காலத்தில் ஏன் அடுத்த சந்ததியினருக்கு எப்படி பயனளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

அண்மையில் எனக்கு ஒரு பத்திரிகை நண்பருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்ன விடயங்கள் எனது மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் நுழைவதற்காக கனவுடன் திரிபவர்கள் எத்தனை பேர்.... பாரதியர் தொடங்கி இன்று எஸ்.டி.சிவநாயகம் வரை எத்தனை பத்திரிகை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

ஏன் இன்றும் எத்தனைபேர் தங்களது திறமைகளை இலைமறை காயாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

(அது சரி உங்கட நண்பன் உங்களுக்கு சொன்னதை முதலில் சொல்லுங்கள் என்று திட்டுவது எனக்கு தெரிகின்றது)

முன்பெல்லாம் பத்திரிகையாளன் ஆவது என்றால் எழுத்துத்துறையில் ஆர்வமும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று இன்டர் நெட் பார்க்கத் தெரிந்தால் போதும். அதில் வருவதை அப்படியே எடுத்து பிரசுரிக்கின்றார்கள்.அப்படிப் பிரசுரிப்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் என்றால், தனது எழுத்தாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையாம்?ஒருவன் தனது முகவரியைத் தேடிக்கொள்ள முடியாத நிலை பத்திரிகை நிறுவனங்களில் உள்ளதாகவும், அப்படி அவர்கள் தாங்களாகவே தேடிக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் அந்தப் பத்திரிகை நிறுவனத்தில் குறைவாகவே இருக்கும்.
திறமைகளுக்கு முக்கியத்துவமா? இல்லை வால்பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவமா?நிறைகுடங்கள் தளம்பாது என்பது நிதர்சனம். ஆனால் வெறும்குடங்களாக இருப்பவர்களின் கையில் நாளை பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை.

Sunday, April 12, 2009

சிந்திக்க வேண்டிய சித்திரை


தமிழர்களின் புதுவருடப் பிறப்பு நாளை உலகத் தமிழர்களின் தமிழ் முதலாம் நாள் இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்பு சித்திரை வருடப்பிறப்பு என்றால் எத்தனை சந்தோஷம் ஈழத்தமிழனுக்கு.


ஆனால் இன்று ஈழத்தமிழன் சொல்லொண துயரத்தில் இருக்கின்றான் அவனது இருப்புக் கூட கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை மலரப்போகும் விரோதி வருடம் ஈழத்தமிழனுக்கு என்ன செய்யப்போகின்றதோ தெரியவில்லை.


இன்னொரு சோமாலியா போல் முல்லைத்தீவில் பஞ்சம் பட்டிணி மக்களை வாட்டுகின்றது உணவுப்பொருட்களின் விலையோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றது.சிங்களப் பேரினவாதம் விடுதலைப் புலிகளையும் தமிழனையும் அழித்து விட்டுத்தான் தனது சிஙக்ள புதுவருடத்தைக் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றது.


தமிழனைக் கொன்று குவித்து அவனது இரத்தத்தில் சுகம் காணத் துடிக்கின்றது. விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விட்டதாக நினைக்கின்றது சிங்களப் பேரினவாதம்.


ஆனால் அது இன்னும் விரிவடைந்து வந்து ஒரு ஏழுச்சி நிலையில் நிற்கின்றது. ஆயுதப் போராட்ட ரீதியில் புலிகள் தோல்வியை அடைந்திருப்பது உண்மைதான்.


ஆனால் அவர்களை உலகம் அங்கீரிக்கின்ற ஒரு நிலையை இன்று புலம்பெயர் தமிழர்கள் செய்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் உணர்த்துகின்றன.


வீட்டின் ஒரு கோடியில் இருந்த தமிழீழத் தேசியக் கொடி இன்று உலகத்தின் அத்தனை கோடிக்கரைகளையும் தொட்டு நின்று பறக்கின்றது.


ஒரு புறம் உலகப் பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் ஈழத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலை தமிழனின் வாழ்க்கைக்கு எப்போது நிம்மதி கிடைக்கப்போகின்றதோ வாழப் பிறந்தவனா இல்லை சாகப் பிறந்தவனா தமிழனா என்று எண்ணத் தோன்றுகின்றது.தமிழர்கள் ஒன்று பட்டால் இந்த சித்திரையில்லை எத்தனை சித்திரைகள் வந்தாலும் தமிழனை அழிக்க முடியாது.

Friday, April 10, 2009

லண்டன் உண்ணாவிரதம் உணர்த்துவது என்ன?


லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் உலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
காந்தி தேசம் கைவிட்ட பின்னர் இன்று உலகத் தமிழர்கள் ஐ.நா.வையே நம்பியிருக்கின்றார்கள்.
தமிழர்கள் இன்று 300 பேரை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்திருக்கின்றனர்.
தடுக்குமா உலகம்? இல்லை தட்டிக்கழிக்குமா? காந்தி வழி என்று சொல்வதை விட திலீபன் வழி என்றால் ஈழத்தமிழனுக்கு நல்லது.
உண்ணாவிரதங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று புலம்பெயர் தமிழர்களின் இந்த உண்ணாவிரதம் உலக நாடுகளை கொஞ்சம் அசைக்கும் என்றுதான் தெரிகின்றது.
கடும் குளிரிலும் இந்த உண்ணாவிரதிகளின் கண்களில் சிந்துவது இரத்தக்கண்ணீர் ஈழத்தமிழனுக்காக.... அந்தக் கண்களில்.... என்ன தெரிகின்றது
உலகமே...... கைகொடு ஈழத்தமிழனைக் காப்பாற்ற.











Tuesday, April 7, 2009

லண்டனில் தமிழர்கள் போராட்டம்











லண்டனில் தமிழர்கள் போராட்டம்

ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
அவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.
நேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...













Wednesday, April 1, 2009

ரம்பாவின் பிரச்சாரம் ஆரம்பம்



தேர்தல் பிரச்சார மேடையில் ரம்பா தயாராகிக் கொண்டிருக்கின்றார். மானாட மயிலாடா நிகழ்ச்சியில் நடுவரே அவருக்கு இன்று வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா அதற்காகவே அதிரடியாக sorry கவர்ச்சியாக களத்தில் இறங்கிவிடடார் ரம்பா .
அது சரி ரம்பா மேட்டருக்கு வாங்களன்...
ரம்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார்....
தொண்டர்கள் அலை மோதிக்கொண்டிருக்கின்றனர்.
ரம்பா மேடையில் அமர்க்கின்றார்... ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளக்கின்றது.
வருங்கால முதலமைச்சர் ரம்பா வாழ்க ரம்பா வாழ்க என்று கலைஞரோ பயந்து விட்டார் எனக்கு பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவளே வருங்காள முதல்வராம் எப்படி முட்டாள் தனமான தொண்டர்கள் என்று மனதுக்கு வேதனையோடு.
கலைஞர் ரம்பா கலைஞரின் தளபதி மு.கா.ஸ்டாலின் அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் குடும்ப குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பிரச்சாரத்தை கலைஞர் ஆரம்பித்து வைத்தார் எனது கட்சி இன்று பெரும் பின்னடை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
எல்லாப் பக்கதினாலும் அடி அடி அடி அடிக்கின்றார்கள்.நானும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. அதற்காகவே தொடை அழகி ரம்பா வை வைத்து பிரச்சாரம் செய்வது என்று எமது குடும்பக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
ரம்பா அம்மாவைப் பற்றி நான் சிறிது சொல்லியாக வேண்டும்.தமிழகத்திற்கு இரண்டு அம்மாக்கள் ஒன்று ஜெயா அம்மா மற்றது ரம்பா அம்மா.ஜெயா அம்மாவின் முதல்வர் கனவு நிறைவேறாது.
எனவே என் இரத்தத்தின் இரத்தங்களே என் சொந்தங்ளே என் உயிரிலும் மேலான தமிழ் மக்களே அடுத்து ரம்பா அம்மா உங்கள் முன்னிலையில் உரையாற்றுவார்...
(தொண்டர்கள் வெடிகொழுத்தி சந்தோஷப்படுகின்றார்கள்)
அழகிய லைலா ரம்பா வாழ்கதொடை அழகி ரம்பா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
ரம்பா பேசுவதற்காக மைக்கைப்பிடிப்பதற்கு முன்…
மானாடா மயிலாடா மானாடா மயிலாடா டைட்டில் சோங் போடப்படுகின்றது ரம்பா ஆடிய வண்ணமாக வந்து மைக்கைப்பிடிக்கின்றார்.
ஹாய் ஹாய் ஹாய் நான் டமிழக முதல்வரை ஆத்தரித்து பேச்ச வந்திருங்கின்றன்.நான் இங்கே வந்து பேசுவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு வனக்கம்.
கலைஞர் காட்வேர்க் செய்ஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கா அவர் டமிழ் மக்களுக்கு செய்யும் உதவி மிகப்பெரிது தானே ரி.வி தொடங்குவார்
தானே ரி.வி இலவசமாக கொடுப்பார்
தானே அரிசியை இலவசமாகக் கொடுப்பார் தானே ஆந்திரவிற்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பார்.அப்படி பட்ட டமிழக முதல்வர் கலைஞருக்கு உங்க ஓட்டை போடுங்க?
கலைஞரின் performance நல்லாயிருக்கு.. வரவர
அவரது டலன்ட் தெரிய வருகின்றது.
இடையில் சஞ்சய் வந்தார் என்னடா என்று பார்தால் பிரேக் சொல்ல வந்துவிட்டாரா என்று நினைத்தேன் இல்லை அவர் வந்து சொன்னது
நீங்கள் கலைஞருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்றால் கலைஞர் என்று டைப் பண்ணி கலைஞர் போனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்கள் அதில் அதிஷ்ட சாலிக்கு கலைஞர் தங்க மோதிரம் வழங்குவார் என்று அறிவித்து விட்டு சென்றார்.
தேர்தல் களத்தின் முதலாவது பிரச்சாரம் முடிந்து விட்டது.
மீண்டு ஒரு பிரச்சாரத்தில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது கலைஞர் தொலைக்காட்சியின் வால்கள்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...