Monday, November 17, 2008

மாமனார் வீடுக்கு மருமகனின் நன்றி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி யும் நேற்று(16.11.2008) நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டிருந்தார்.காலை 8 மணி முதல் மாலை4 மணி வரை இந்த உண்ணாவிரதம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தை விட அதிகமான ரசிகர்கள் மாநிலங்கள் தோறும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர்.அது சரி எல்லா நடிகர்களும் இருக்கும் போது விஜய் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா? அதனால் தான் இப்படி ஒரு உண்ணாவிரதம் என்று கோடம்பாக்கத்தில் இப்பொழுது பரப்பரப்பாக பேசப்படும் விடயம் எவ்வளவு மூத்த நடிகர்கள் விஜயகாந்த்,கமல், ரஜனி போன்ற ரசிகர்படைகளை வைத்திருக்கும் நடிகர்களுக்கு வரத இந்த எண்ணம் விஜய்கு ஏன் வந்தது? என்றுதானே நீங்கள் கேட்கின்றீர்கள்.விஜய் புகுந்த வீடு லண்டனாக இருக்கலாம். ஆனால் அவரது மனைவி சங்கீதா ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அவரதுபூர்வீகம் ஈழம் .மனைவியின் தாய்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் மருகமன் அதற்காக கண்ணீர் விடத்தான் வேண்டும். அதை நல்ல மருகனால்தான் முடியும் அவ்வாறு விஜய் செய்தது வரவேற்கத்தக்கது.அதைவிட உலககலாவிய ரீதியாக நோக்கினாலும் ரஜனிக்கு அடுத்தபடியாக இன்று மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்த நடிகர் என்றால் அது விஜய்தான்.ஈழத்தில் விஜய்க்கு அதிகமான ரசி
கைகள் இருக்கின்றார்கள் எனவே தனது ரசிகர்களுக்காகஅவர் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் அவர்களின் மனங்களில் ஒருதெம்பையே ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்லலாம். நாம் விரும்பும் நடிகர் இவ்வாறு தங்களுக்காக குரல் கொடுத்தது என்பது அவர்களுக்கு ஆறுதலாகவே இருக்கின்றது என்று சொல்லலாம்.அது சரி என்ன ஒரே விஜய் புரணம் படுகிறான் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.கோடம்பாக்கத்தில் இப்பொழுது பெரும் பரப்பரப்புக்குள்ளான இந்த உண்ணாவிரதம் விஜய் அரசியல் நோக்கோடு இதை பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அடித்தளமாக இந்த உண்ணாவிரதம் இருந்தது என்று சில பட்சிகள் கூறுகின்றன.ஒரு புதிய அரசியல் கட்சியால்கூட இவ்வாறு கூட்டம் கூட்டமுடியுமா என்பது சந்தேகம்தான் சரி பொறுத்திருந்துபார்ப்போம் என்ன நடக்குது என்று.

1 comment:

Anonymous said...

so far i believe anybody would have been thought in a diffreent aspect regarding actor Vijai's hunger strike.....
better put a name for ur profile

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...