Monday, December 8, 2008

நட்பு.........................




நட்பைப்பற்றி நண்பர்களுடன் விவாதித்துவிட்டு வருகின்றேன் என்றேன்.விவாதித்தேன்...... சும்மா வந்து விழுந்த அம்புகள் என்னைக்குத்திவிட்டன. அதனையும் எனது நண்பர்கள் எனக்குத்தந்த முத்துக்கள் (எனது அறிவுக்கு) என்றுதான் சொல்ல வேண்டும். (உங்களுக்கு அது முத்தோ இல்லையோ எனக்குத் தெரியாது முத்தாகப் பட்டால் வாழ்த்துங்கள் இல்லையேல் நல்லாகத் திட்டுங்கள்.)

புரிந்துணர்வு... நண்பர்களுக்கிடையில் வருவது முக்கியம் ... புரிந்துகொண்ட நண்பர்கள் இன்று எத்தனை பேர் காதலர்களாகவும் எத்தனை பேர் கணவன் மனைவியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அத்தனைக்கு அவர்களது புரிந்துணர்வுதான் காரணம்.

விட்டுக்கொடுப்பு...
ஐயோ சாமி இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு கோபம்கோபம்தான் வரும் ஏன் என்றால் நான் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கின்றேன்.. அதனால் பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கின்றது.ஆனால் நான் விடுக்கொடுக்கும்போதேலாம் அதை எனது நண்பர்கள் இவனுக்கு சூடு சுறனை இல்லை என்று திட்டுவார்கள். இவனுக்குகோபமே வராதா? இவன் எல்லாம் ஒரு மனிதனா என்றேலாம்..... கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் நான் எதனையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ஏன் என்றால் எனது நண்பன்தானே எனது நண்பிதானே நாளைக்கு எனக்கு அவர்கள் முக்கியம் நான் கோபப்பட்டு ஒருவார்த்தை சொன்னால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமோ தெரியாது. அப்படி நான் எதாவது சொன்னால் எமது நட்புக்குள் கலங்கம் வந்துவிடுமோ என்றுதான்.ஆனால் என்னை புரிந்த நண்பர்கள் புரியாத நண்பர்கள் என்று எத்தனை விதம் அத்தனைக்கும் விட்டுக்கொடுப்புகள்தான் காரணம் .என்னடா சொந்தப்புராணம் பாடுறானே என்று நினைக்க வேண்டாம்.... விட்டுக்கொடுங்கள் உங்கள் நண்பனுக்கு நண்பிக்கு.... ஆனால் அதையும் ஒரு அளவுகோலோடுதான் விட்டுக்கொடுக்க வேண்டும். (நட்புக்கு மரியாதை என்று சினிமா டயலொக் ஒன்றும் அடிக்கவேண்டாம்)

ஈகோ.... உங்களது நண்பனுடன் நண்பியுடன் சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம்தான் ஆனால் யார் முதலில் கதைப்பது அவன்பெரியதா நான் பெரிதா அவள் பெரிதா நான் பெரியதா என்ற ஈகோ...
கிளம்பிட்டான் ஐயா கிளம்பிட்டான் இது உங்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் பேய் என்று சொல்லலாம் உங்களிடத்தில் ஏன் இந்த ஈகோ குடிகொள்ளுதோ தெரியவில்லை.
புகைப்பதும்
மது அருந்துவதும்
மாதுவிடம் செல்வதும்
இதை எல்லாத்தையும் விட ஈகோ மிக கொடுமையானது கிடையாது என்பதுதான் எனது கருத்து.ஒரு சின்ன உதாரணம் தரளாம் என்று நினைக்கின்றேன்:
ரஜனியை எதிர்த்து ஜெயலலிதாவின் கட்சியில் பிரசாரம் செய்தவர் ஆச்சி மனோராம்மா.. ரஜனி இருக்கின்ற உயரம் என்ன மனோராம்மா இருக்கின்ற உயரம் என்ன? அது உங்களுக்குத்தானே தெரியும்.
ரஜனிக்கு ஈகோ இருந்திருந்தால் மனோரம்மாவை என்ன செய்திருக்கலாம்.ஆனால் தனது அருணாச்சலம் படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்.அன்றுதான் செய்த தப்பை உணர்ந்து மனம் வருந்தியவர் மனோராம்மா.
ஆனால்.....................................................
உங்களுக்கு எது சரி என்று பட்டதை நீங்கள் செய்வதை விட .உங்களது நண்பர்களுடன் கலந்து ஆலோசியுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தோழ் கொடுப்பான் தோழன் என்று சும்மாவா சொன்னார்கள். ஆனால் நீங்கள் அளவோடு தோழ்கொடுங்கள்.... என்றுதான் சொல்லதோன்றுகின்றது...ஏன் என்றால் எனது நண்பன் ஒரு உதாரணம் சொன்னான் அதான்... நீங்கள் உங்களது நண்பன்தானே நண்பிதானே என்று நீங்கள் விட்டுக்கொடுத்தால் அதுவே உங்களுக்கு சில வேளை ஆபத்தாக அமைந்துவிடலாம்.
நாயை தூக்கி மடியில் வைத்தால் அது கட்டாயம் நக்கித்தானே தீரும்..
நாயே இப்படி இருக்கும்போது ஆறு அறிவுபடைத்தவர்கள் மனிதர்கள்.
நட்புக் கொள்ளுங்கள் அது உங்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் பார்த்துசெயற்படுங்கள்....ஏன் என்றால் சினிமா துறையில் எத்தனை நண்பர்கள் இன்றைய திகதியில் பிரிந்துசெல்கிறார்கள் எம்.எஸ்.வி. -ராமமூர்த்தி தொடக்கம் இன்றைய ஹரிஸ் ஜெயராஜ்-கௌதம், யுவன்-செல்வராகவன் என்று நீண்டுகொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே நட்பு அது நிலைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களது நண்பனோடோ நண்பியோடோ வெளிப்படையாக இருங்கள் ஆனால் வெகுளியாக இருக்காதீர்கள்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...