Monday, November 10, 2008

ஈழப்பிரச்சினையும்சினிமா ஒப்பனைகளும்

ஈழத்தில் போர் தொடங்கி இற்றைக்கு 30 வருடங்கள் ஆகின்றன ஆனால் சில தமிழ்ச்சினிமா நட்சத்திரங்கள் நேற்றுத்தான் ஈழத்தில் போர் நடப்பதுபோலவும் அங்குள்ள அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் எடுக்கப்படுவதை அதிசயமாகப் பார்க்கின்றன.
அது சரி ஈழத்துப்பிரச்சினையைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை உலகம் அறிந்த ஒன்று அகையினால் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகள் கட்டாயம் ஈழமக்களுக்குத் தேவை அது நடிகர்களினால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்றால் அது சிலருக்கு தங்களின் அரசியல் இலாபங்ககளுக்காகவே உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபடுகின்றனரே என்றே சொல்லத் தோன்றுகின்றது.நடிகர் விஜயகாந்தை அரசியல் வாதி என்பதை நிறுபித்துவிட்டார் பல வருடங்களாக ஈழத்தில் மக்களுக்கு எப்பொழுது அமைதிகிடைக்கின்றதோ அப்போது தனது பிறந்த நாளை கொண்டடுவேன் என்று கூறிய விஜயகாந்தா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
உண்ணாவிரததில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்று அறிவித்தபோதும் கமலின் உரையில் குருதிப்புனல் பட வசனம் உதவியது அது போல ரஜனிகாந்த மத்திய அரசையும் இலங்கை அரசையும் சாட்டை அடி கொடுத்தார் என்றார்கள்.
அது சரி நியாயம் என்று நாம் பார்த்தாலும் ரஜனியின் அடுத்தபடம் ரோபா 150 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படுகின்றது. அதற்கு தயாரிப்பு ஈழத்தைச் சேர்ந்த ஐங்கரன் நிறுவனம். உலக ரீதியில் ரோபோ வெற்றி பெறவேண்டும் என்றால் ஈழத்தமிழரை கட்டாயம் ஆதரிக்கவேண்டிய நிலை ரஜனிக்கு. குறைந்த பட்ஜட் குசேலன்னுக்காக கன்னட மக்களிடம் தான் பேசியது தவறு என்று கூறி அங்கே தனது படத்தை ரிலீஸ் செய்தவர் இவர் .அப்படிப் பார்த்தால் ரோபோவுக்காக இவர் பேசியது என்றே நோக்கத் தோன்றுகிறது தவிர ஈழமக்களுக்காக பேசியிருந்தால் வரவேற்கத்தக்கது.ஏகன், துரை படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்வதை ஈழத்தமிழர்கள் தடை செய்தார்கள்.அது அந்தப் படத்தின் நாயகர்கள் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்ற வதந்தி என்று சொல்லப்படுகின்றது.அது சரி இது சதியாக இருக்கலாம் என்று யார் ஆவது யோசித்தார்களா இல்லை இந்த இரண்டு படங்களையும் தயாரித்தது இதே ஐங்கரன் நிறுவனம் தான்.அவர்களை படங்கள் தயாரிப்பதில் இருந்து முடக்குவதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சதி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.ஈழத்தமிழர்கள் உணர்ச்சிமிக்கவர்கள் என்பதை புரிந்துகொண்டு அவரான செய்தியை முதலில் வெளியிட்டதே இந்தியப் பத்திரிகை ஒன்று அதன் உண்மைத் தன்மையை புரியாமல் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு நடிகர்களின் மீதும் படங்களின் மீதும் கோபம் கொண்டனர்.
நாயகர்கள் உண்மையாக அப்படி பேசவில்லை என்பது அவர்களின் உண்ணாவிரத உரையில் தெரிகிறது.
ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள் இருக்கிறார்கள் வரவேற்கத்தக்கது.அதை விட ரசிகர்கள் போட்டிக்கு போட்டியாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.ஈழத்தமிழருக்காக இருக்கிறார்களா இல்லை தல தளபதி என்றா போட்டியில் இருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்தினார்.அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தார்.விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றார்கள்உண்மையான உணர்வாயின் வரவேற்போம்.
நமூர் காரன் ஆகாஷ் இவரை எப்படித்தான் சொல்வதென்று இருக்கின்றது இவரைப்பற்றி சொல்வதென்றால் பச்சோந்தி என்றே சொல்லத் தோன்றுகின்றது.அப்படி நல்லவர் தமிழ்சினிமா உலகிற்கு விஜய்க்குப்போட்டிய வருவேன் என்று மார்பு தட்டிக்கொண்டு இருக்கிறவர்.அதுசரி இவருக்கு உண்ணாவிரதம் இருக்க என்ன தகுதி இருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இவர்.இலங்கை வரும்போது தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்றும் இந்தியாவில் தான் லண்டனைச் சேர்நதவன் என்றும் தெலுங்கு சினிமா உலகில் தான் பெரிய ஹீரோ என்றும் பொய் சொல்லித் திரிபவர் மட்டுமல்ல தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காக பத்திரிகைகளில் பொய்யான செய்திகளை வழங்குவதில் இவரைப் போல கில்லாடியை நாம் பார்த்திரு“கக முடியாது.உண்மையான தமிழன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற உணர்வு இருந்தால் தனது அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம். இவரை விட மன்சூர் அலிகான் எவ்வளவோ மேல்..
ரி.ஆதி

4 comments:

Anonymous said...

Hai Ahthy,
epdi oru nalla pera vachchittu een ranaggalnu loosu mathiri oru per ok visayaththukku varuvoom.
eela thamilargalin poorattam enru netraya poorattam alla athu 35 varudaggalukku metpattathu athu enruthan then india nejjaggalukku therinthullathu enbathu kavalaikuriya vidayam. enravathu eggalodu kai koorkka vanthargale athu emathu palame.
eruppinum yar unmayaga emathu eelathamilar poorattaththai mathiththu yaryar pesukinranar yaryar pachchonthigal enpathu santhegamai ullathu karanam sila nadigargal elaththamilargalin poorattaththai avargal nadikkum film poola ninaththuk kondanar. Eg: ajith arjun evargal thodarpaga vilivantha seithigal.
nadigar vijayakanth avar oru nadigar mattumalla nall arasiyalvathi enbathayum nirubiththullar. enna erunthalum eela thamilargalukku unmayaga kaikodukka mun vanthulla anaththu ullaggalukkum eela thamilar sarbaga enathu nanrigal. naggal nichchayam velvoom.

ahthy un pani thodarga
nanry

Thamilan.

Anonymous said...

Hi all viewers...

Pls updates more details in this web site & get more benefits... i wish u all the best.. do something different.. we are expecting more from "RANANGAL".....

GAJAA....

Anonymous said...

Hi..

It was really superb.keep rocking my friend. good luck to u.....

Arunah

Anonymous said...

Hi my Buddy!

Congratulations u have spun a fantastic web.... Keeps spinning


Reka

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...