Tuesday, December 2, 2008

யார் இந்த நாராயணன்?

இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியும் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர் குலைக்க மத்திய அரசுடன் செயல்படுவருபவர். தமிழ் நாட்டில் உளவு துறையை மிகவும் சதூரியமாக கையாளக்குடிய நபர் இவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்று காத்துக்கிடந்தனர். ஈழத்தின் அவல நிலைமைகளை பிரதமருக்கு சொல்வதற்காக இருந்தனர். அப்போது அவர்களை சந்திக்க விடாமல் செய்தவரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இந்த நாராயணன். கியூபாவில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பதற்கு ஏற்படு செய்துகொடுத்தவர்.
தமிழர்களின் நலனில் அக்கறையில் துளி கூட விரும்பம் இல்லை இந்த நாராயணனுக்கு இவர் தனது பெயரை நரதர் என்று மாற்றி வைத்திருக்கலாமே?
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் எம்.கே.நாராயணன் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளின.
ஏதோ இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய வீரன் என்ற எண்ணத்தில் அவர் மீது அவ்வளவு பாராட்டு மழை.
பின்ன அவருக்கு இதைக் கூடாச் செய்யாவிட்டால் தேச தூரோகம் ஆகிவிடும் அல்லவோ?
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டக் காரணமாக இருந்தவர்கள் இருவர் (நரிகள்) ஒருவர் டிஸ்சித்தும் நாராயணணும்தான்.
இவர்கள் இருவரின் வழிகாட்டுதல்தந்திரம் போன்ற காரணங்களினால்தான் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைக்கு வந்ததும். உலக அரங்கில் அது அவமானப்பட்டு திரும்பிப்போனதுக்கும் இவர்களின் இராஜதந்திரங்களே காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று விடுதலைப் புலிகளின் தலைவரை நிர்ப்பந்த்திற்குள் உள்ளாக்கி எப்படியாவது இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று பாடுபட்டவர் இந்த நாராயணன்.
ஆனால் அது பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளை தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு என்று உலக அரங்குகளில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்.
90 களில் தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் நாராயணன் மேற்கொண்ட சதிதான் காரணம்.
தி.மு.க தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கு என்று அறிக்கை சமர்ப்பித்தவரும் இந்த நாராயணன்தான்.
அதனால் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் வேண்டப்படாத நபர்களில் நாராயணணும் ஒருவர்.
அதன் காரணமாக கருணாநிதியை சந்திப்பதற்கு நாராயணன் பலமுறை முயற்சி செய்தும் அவர் அதை மறுத்து வந்தார்.
ஆனால் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரா வந்த பின் கட்டாயம் அவரை சந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு.
இலங்கையில் இடம் பெற்ற சார்க் மாநாட்டில் தனியார் காரில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சென்றவர் என்ற பெருமை நாராயணனையே சாரும் அவ்வளவு அவருக்கு இலங்கை மீது நம்பிக்கையாம்?
நாராயணன் (நரி) பற்றி மேலும் பல விடயங்கள்.... வரும்

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...