Wednesday, November 12, 2008

கொண்டாட்டங்களை நிறுத்திய கமல்

எதோ வண்டியை நிறுத்தியதாக நீங்கள் நினைக்கவேண்டாம். ஈழத்தில் நடக்கும் போர் காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அந்த வேளையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஓகே அதுசரிதான் தனது இரத்த சொந்தங்கள் பாதிக்கப்படும் பொழுது எனக்கு என்ன பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கமல் நினைத்திருக்காலாம்.ஆனால் கொழும்பில் உள்ள பல இலத்திரனியில் ஊடகங்கள் கமல் பிறந்த நாளை கொண்டாடியது அவர்கள் கொண்டாடியது தப்பில்லை. அவர்கள் எதையும் எப்பவும் கொண்டாடி ஆக வேண்டிய நிலையா நிர்ப்பந்தமா தெரியவில்லை.ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் எதுவுமே தெரியாததுபோல இவர்களின் கொண்டாட்டங்கள் இருந்தன.வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடலாமா? இல்லை உண்மையைச் சொன்னால் ஊடகங்களை நிறுத்திவிடுவார்கள் என்ற பயமோ தெரியவில்லை.ஊடங்கங்கள் தான் இவ்வாறான செயல்களில் இருக்கின்றது என்றால் மக்களுமா?ரசிகர்கள் என்ன செய்கின்றார்கள் தங்களது தலைவன் இவ்வாறான ஒரு அறிக்கையை விடுகின்றார் என்றால் இவர்களுக்கு எங்கே போயிற்றுது புத்தி.கொழும்பு எதோ அமெரிக்காவிலும் ஈழம் எதோ அவுஸ்திரேலியாவிலும் இருப்பதுபோல பிரம்மையில் இருக்கின்றார்களா?இல்லாவிட்டால் எங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கின்றார்களா என்று தெரியவில்லை.தமிழ் நாட்டில் இன்று இருக்கின்றநிலைமை இலங்கையில் உள்ள மக்களுக்கு அதுவும் கொழும்பில் உள்ள மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகக் கூட தங்களது ஆதங்கங்களை இந்த ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...