Friday, March 20, 2009

விஜயின் கோபமும் ஊடகங்களும்

வில்லு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது அதில் விஜய் ரசிகர்க ளைப் பார்த்து சத்தம்போட வேண்டாம் என்று கோபமாக கத்திய வீடியோ அண்மையில் இணையத்தளங்களில் உலா வந்தது.

அதை உடனே அனைத்து இணையத்தளங்களும் பதிவாளர்களும் தங்களுக்கு ஏதேதோ எழுதி பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.விஜய் அப்படி நடந்திருக்கக்கூடாது. விஜய் அப்படி நடக்கின்றதால் தான் அவரது வீட்டில் ஒவ்வொரு கண்ணாடியும் உடையுது. அவர் சாதுவாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.

அதிலும் விஜயின் இந்த செய்தி போட்டால்தான் தங்களது பதிவை கூடுதலாக பார்க்கின்றார்கள் என்ற போட்டி சில பாதிவாளர்களுக்கு இடையில் இதை அவர்களே தங்களது பதிவில் வேறபோட்டிருக்கின்றார்கள்.

விஜய் ஒரு நடிகர்தான் அதற்காக அவருக்கு கோபம் வரக்கூடாது என்பது அடி முட்டாள்த்தனம் என்று தான் சொல்லலாம்.ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? நீங்கள் ஒரு இடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஒரு லிமிட்டைத்தாண்டி சத்தம் வந்தால் நீங்கள் என்ன பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா?என்னடா விஜய்க்கு வக்காளத்து வாக்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் .

இப்படி ஒரு வீடியோ வந்தவுடன்தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்து 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜய் சென்றபோது நடந்து சம்பவம் மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகையில் செய்தி வெளிந்தது. அதன் விவரம் இங்குள்ளது.

விஜய் கொழும்பு வந்தபொழுது டென்சன் என்ற தலைப்பில் வெளிவந்தது.அப்பொழுது விஜய் கோபமாக இருந்ததாவும் இருந்தது.

அது தொடர்பாக அந்த பத்திரிகை நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு தங்களது தலைவரைப் பற்றி தப்பாக போட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் நடந்ததாக நான் அறிந்துகொண்டேன்.

(சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் முழுவிபரங்களும் வரும்)

ஒரு நடிகர் தான் கோடிக்கணக்கில் காசை வேண்டிக்கொண்டு எவ்வளவுதான் சமூகத்தில் தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்க முடியும். இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிடுகின்றார்கள்.ஒரு நடிகன் நடிக்கும் படத்தைப் பற்றியும் அவனது படைப்பைப்பற்றியும் மட்டும் எழுதுங்கள் அவன் அது செய்தான் இது செய்தான் என்று எழுதுவதால்தான் அவர்களும் முதல்வர் கனவை காண முயல்கின்றார்கள் .

1 comment:

Anonymous said...

kova padurathu thappu illanga... ennga? yaaru mela kova paduromnu onnu irukku?? enn unga offecil poi chumma orama poittu irukka... colelgueai.. thitti parunga appo tehriyum....

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...