Saturday, March 14, 2009

பூஷ் மீது ஷூ வீச்சும் முல்லைத்தீவில் குண்டு வீச்சும்


என்னடா குண்டக மண்டக்க என்று தலைப்பு வைத்திருக்கின்றான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் எல்லாம் ஒரு காரணத்தோடுதான்.அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர் ஜ் டபிள்யூ மீது ஊடகவியளார் ஒருவர் தனது ஷூ வினைத் தூக்கி புஷ்ஷின் மீது வீசினார்.

இது பழைய கதை இப்பொழுது அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டது.
ஒரு ஷூ வினால் எறிந்தவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை என்றால் முல்லைத்தீவில் தினமும் அரைச் சதத்திற்கும் அதிகமாக மக்களை குண்டு வீசிக்கொள்ளும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன தண்டனை?

அமெரிக்காவே உனது நாட்டின் தலைவனுக்கு ஒருவன் ஷூ வினால் எறிந்ததுக்கே உடனே தண்டனை கொடுக்கும் நீ.

உனது நாட்டு பிராஜாவுரிமை பெற்று இருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன கொடுக்கப்போகின்றாய்?

இவர் பெரிய சட்டத்தரணி கதைக்க வந்திட்டார் எங்களுடன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஒரு நாளுக்கு 50, 70 என்று தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது உலகத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையோ?

அமெரிக்கனின் மீது தூசு விழுந்தால் கூட தட்டிக்கேட்கும் உலகம்.
ஈழத்தில் தமிழனின் உயிர்கள் பறிக்கப்படுவதை தட்டிக்கேட்டால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...