Wednesday, March 11, 2009

பாலாவின் பட்டறை

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. அவரின் வாரிசாக வந்த பாலா குருவை விட பல மடங்கு மாற்று சினிமாவை உருவாக்கி வருகின்றார்.


தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏன் ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். வழமையான மசாலா படங்களை உடைத்து இன்று வெற்றி நடைபோடுகின்றது நான் கடவுள்....


பாலா எனும் சிற்பி செதுக்கிய சிற்பங்களைப்பற்றித்தான் எனது பதிவை இடலாம் என்று நினைத்தேன்.
பாலாவின் கைபட முன் இருந்த கல்லுக்குள் இருந்த நிலையும் பின் பாலாவின் கைபட்டபின் அந்தச் சிற்பங்களின் வெற்றியுமே இன்று தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.


விக்ரம்
சேதுவுக்கு முன்னிருந்த விக்ரம் யாருமே அறிந்திருந் விக்ரம் டப்பிங் கலைஞராகவும் ஹீரோ வுக்கு நண்பனாகவும் நடித்து வந்தார் விக்ரம் பி.சி.ஸ்ரீராமின் இயக்கத்தில் வெளிவந்தது மீராவில் கதாநாயகனாகவும் அஜித்தின் உல்லாசம் படத்தில் அஜித்தின் அண்ணனாகவும் நடித்தார் ஆனால் வெற்றி நயகனாக அவரால் சோபிக்க முடியவில்லை.

விக்ரம் எனும் வைரம் மறைந்ததிருந்தது யாருக்குமே தெரியாது அது பாலா எனும் சிற்பியினால்தான் பட்டை தீட்டப்பட்டார். சேது இன்றும் விக்ரமின் சியான் அடையாளம் தமிழ் சினிமாவை மாற்றி யமைத்த படம்.
பாலாவின் பாடங்கள் என்றால் சோதனைகளைக் கடந்துதான் சாதனை செய்கின்றது.

விக்ரம் சேது படம் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்ட பின்புதான் அனைவருக்கும் விக்ரம் என்ற நடிகன் வெளியுலகத்திற்குத் தெரிந்தது. அதன்பின் விக்ரம் நடித்த படங்கள் தில் தூள் காசி படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. மீண்டும் பாலவின் படம் பிதா மகன் வெட்டியானாக வாழ்ந்தார் விக்ரம் தேசிய விருது கிடைத்தது.


பாலாவின் பாசறை என்பது ஒரு நடிகனுக்கு தேடல்களை ஏற்படுத்துகின்றது என்றுதான் சொல்லலாம் பாலாவின் படத்தில் நடித்த பிறகு அந்த நடிகன் நல்ல கதாபாத்திரங்களை தேடுகின்றார்கள். அப்படி விக்ரம் தேடி நடிப்பதால் தான் அந்நியன்- கந்தசாமி என்று தனது படைப்புக்களை தரமுடிகின்றது.


சூர்யா
பாலாவின் கைபட்ட மற்றும் ஒரு நட்சத்திரம் ஏன் சூரியன் என்று கூடச் சொல்லலாம்.நந்தாவுக்கு முன் நந்தாவுக்கு பின் என்று சூர்யாவின் திரை வாழ்க்கையை நாம் பிரித்து பார்க்கலாம்.

நேருக்கு நேர் படத்தில் மூலம் வசந்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சூர்யா விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

சிவகுமாரின் மகன் என்ற பெயருடன் திரைக்கு அறிமுகம்.... தனி ஹீரோ டபிள் ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்தார் முரளியுடன் காதலே நிம்மதி, விஜயகாந்துடன் பெரியண்ணா விஜயுடன் மீண்டும் ப்ரண்ட்ஸ் என்று நடித்தார் படங்களில் அவரது நடிப்பு பேசும் படியாக அமையவில்லை.


அப்பொழுதுதான் பாலாவின் நந்தாவில் நடித்தார் சூர்யா நந்தா... சூர்யாவை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டுபோய் நிறுத்தியது.

அதன் பின் வந்த ஸ்ரீ தோல்வியைக் கொடுத்தாலும் துவண்டுவிடாமல் பாலாவின் சிஷ்யன் அமீரின் முதல் படம் மௌனம் பேசியதே சூர்யாவுக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்தது.


பாலாவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு சவால் என்றுதான் சொல்லலாம் பிதாமகன் விக்ரமுடன்அதன் பின் சூர்யா தேடல்களில் இறங்கினார்.. மாறுபட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்தார்.

பேரழகன், காக்க காக்க, வேல், ஆறு, வாராணம் ஆயிரம் என்று தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வேறு வடிவங்கள் கொடுக்கின்றார் என்றால் அது பாலாவின் பட்டறையில் இருந்தவடியால்தான்.



ஆர்யா
பாலாவின் பட்டறையில் எதிர்பாராமல் நுழைந்த நடிகர் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

அஜித்துடன் மோதல் அதன் பின்பு பாலா கண்டுபிடித்த நடிகர் ஆர்யா சினிமா பின்புலமே இல்லாமல் வந்த நடிகர் இயக்குநர் ஜீவாவினால் கண்டுபிடிக்கப்பட்டு இயக்குநர் விஷ்ணுவர்த்தனால் வளர்க்கப்பட்டு பாலாவினால் பட்டை தீட்டப்பட்டார்.


நான் கடவுள் ஆர்யாவுக்கு நடிப்பு என்ன என்பதை கற்றுக்கொடுத்துவிட்டது.அடுத்து சர்வம்மெட்ராஸ் பட்டணம் என்று வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகின்றார் ....... சரி பார்ப்பம் பாலாவின் பட்டறையில் அடுத்ததாக எந்த நடிகருக்கு அதிஷ்டம் என்று பார்ப்பம்.

நல்ல சினிமாவையும் நல்ல நடிகர் களையும் உருவாக்கும் வல்லமை தமிழ் சினிமாவில் பாலாவும் அவரது சிஷ்யப்பிள்ளைகளும் செய்துவருவது பெருமைக்குரிய விடயம்.

1 comment:

சரவணகுமரன் said...

ம்ம்ம்... பார்ப்போம்...

நல்ல பதிவு...

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...