Monday, March 9, 2009

ஜெயாவின் கபட நாடகம்


கருணாநிதியின் படம் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது ஜெயலலிதா புதிய திரைப்படத்தைஇன்று திரைக்கு கொண்டுவந்திருக்கின்றார்.

கதை திரைக்கதை இயக்கம் எல்லாம் ஜெயாதான்

இசை: தா.பாண்டியன்

ஒளிப்பதிவு: ஜெயா .ரிவி.

ஒலிப்பதிவு: வைகோ

பாடல்கள்: சசிகலா ஆகிய சினிமாவின் சாரி

அரசியல் ஜம்பவான்கள் இணைந்து வழங்கும் “ஈழத்தமிழரும் உண்ணாவிரதமும் என்ற படத்தை இன்று மட்டும் தமிழகமேங்கும் திரையிடப்படுகின்றது.

தேர்தல் வருது என்றவுடன் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்தவர் ஜெயலலிதா என்று தெரிகின்றது.

ஈழத் தமிழர்களின் உயிர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் இன்று அழிக்கப்பட்டு தமிழனிடம் உள்ள ஒரு சொற்ப நிலத்தையும் சிங்கள இராணுவம் பிடிப்பதற்காக தமிழ் உயிர்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத் தமிழர்களுக்காக முழுத் தமிழகமே இன்று திரண்டு நிற்கின்றது.

இவ்வேளையில் தான் மட்டும் தனித்து நின்றால் மக்கள் தன்னை நிராகரித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு தானும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டதுபோல் நடிக்கின்றார் இந்த ஜெயலலிதா.

என்ன கொடுமை சார்... ஈழத் தமிழரின் நலனில் உண்மையான அக்றை கொண்டுள்ளவர் என்றால் இன்று ஏன் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்று கூக்குரல் ஈடுகின்றார்.கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதற்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற பெயரில் கருணாநிதியினை சாடுவதே ஜெயலலிதாவின் பிழைப்பாகப்போய்விட்டது.கருணாநிதி என்ன செய்தார் என்று சொல்வதை முதலில் ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.நான் என்ன ஈழத் தமிழர்களுக்கு செய்தேன் செய்யப்போகின்றேன் என்று சொல்லட்டும் பார்ப்பம். அதைவிடுத்து கருணாநிதி அது செய்தார் இது செய்தார் என்று சொல்லி தனது அரசியலை நடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் ஜெயா.ஈழதமிழனுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காமல் அவர்களுக்காக போராடுவதே மேல் உண்ணாவிரதம் அதை தொடக்கி வைத்தவர்கள் மாணவர்கள் அந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புப் கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர் இந்த ஜெயலலிதா.

இது உண்ணா விரதமா இதைபார்க்க தமிழகமே உனக்கு மானம் ரோசம் சூடு சுறணை இல்லையா?

1 comment:

Anonymous said...

விடுதைலைப் புலிகளிடம் சொல்லுங்கள். இவர்கள் தமிழினத்துக்கு தமிழ் விடுதலை உணர்வுக்கு எதிரி என்று சொல்லி சுட்டு விடுவார்கள்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...