லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் உலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
காந்தி தேசம் கைவிட்ட பின்னர் இன்று உலகத் தமிழர்கள் ஐ.நா.வையே நம்பியிருக்கின்றார்கள்.
தமிழர்கள் இன்று 300 பேரை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்திருக்கின்றனர்.
தடுக்குமா உலகம்? இல்லை தட்டிக்கழிக்குமா? காந்தி வழி என்று சொல்வதை விட திலீபன் வழி என்றால் ஈழத்தமிழனுக்கு நல்லது.
உண்ணாவிரதங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று புலம்பெயர் தமிழர்களின் இந்த உண்ணாவிரதம் உலக நாடுகளை கொஞ்சம் அசைக்கும் என்றுதான் தெரிகின்றது.
கடும் குளிரிலும் இந்த உண்ணாவிரதிகளின் கண்களில் சிந்துவது இரத்தக்கண்ணீர் ஈழத்தமிழனுக்காக.... அந்தக் கண்களில்.... என்ன தெரிகின்றது
உலகமே...... கைகொடு ஈழத்தமிழனைக் காப்பாற்ற.
No comments:
Post a Comment