Wednesday, April 1, 2009

ரம்பாவின் பிரச்சாரம் ஆரம்பம்



தேர்தல் பிரச்சார மேடையில் ரம்பா தயாராகிக் கொண்டிருக்கின்றார். மானாட மயிலாடா நிகழ்ச்சியில் நடுவரே அவருக்கு இன்று வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா அதற்காகவே அதிரடியாக sorry கவர்ச்சியாக களத்தில் இறங்கிவிடடார் ரம்பா .
அது சரி ரம்பா மேட்டருக்கு வாங்களன்...
ரம்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார்....
தொண்டர்கள் அலை மோதிக்கொண்டிருக்கின்றனர்.
ரம்பா மேடையில் அமர்க்கின்றார்... ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளக்கின்றது.
வருங்கால முதலமைச்சர் ரம்பா வாழ்க ரம்பா வாழ்க என்று கலைஞரோ பயந்து விட்டார் எனக்கு பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவளே வருங்காள முதல்வராம் எப்படி முட்டாள் தனமான தொண்டர்கள் என்று மனதுக்கு வேதனையோடு.
கலைஞர் ரம்பா கலைஞரின் தளபதி மு.கா.ஸ்டாலின் அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் குடும்ப குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பிரச்சாரத்தை கலைஞர் ஆரம்பித்து வைத்தார் எனது கட்சி இன்று பெரும் பின்னடை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
எல்லாப் பக்கதினாலும் அடி அடி அடி அடிக்கின்றார்கள்.நானும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. அதற்காகவே தொடை அழகி ரம்பா வை வைத்து பிரச்சாரம் செய்வது என்று எமது குடும்பக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
ரம்பா அம்மாவைப் பற்றி நான் சிறிது சொல்லியாக வேண்டும்.தமிழகத்திற்கு இரண்டு அம்மாக்கள் ஒன்று ஜெயா அம்மா மற்றது ரம்பா அம்மா.ஜெயா அம்மாவின் முதல்வர் கனவு நிறைவேறாது.
எனவே என் இரத்தத்தின் இரத்தங்களே என் சொந்தங்ளே என் உயிரிலும் மேலான தமிழ் மக்களே அடுத்து ரம்பா அம்மா உங்கள் முன்னிலையில் உரையாற்றுவார்...
(தொண்டர்கள் வெடிகொழுத்தி சந்தோஷப்படுகின்றார்கள்)
அழகிய லைலா ரம்பா வாழ்கதொடை அழகி ரம்பா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
ரம்பா பேசுவதற்காக மைக்கைப்பிடிப்பதற்கு முன்…
மானாடா மயிலாடா மானாடா மயிலாடா டைட்டில் சோங் போடப்படுகின்றது ரம்பா ஆடிய வண்ணமாக வந்து மைக்கைப்பிடிக்கின்றார்.
ஹாய் ஹாய் ஹாய் நான் டமிழக முதல்வரை ஆத்தரித்து பேச்ச வந்திருங்கின்றன்.நான் இங்கே வந்து பேசுவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு வனக்கம்.
கலைஞர் காட்வேர்க் செய்ஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கா அவர் டமிழ் மக்களுக்கு செய்யும் உதவி மிகப்பெரிது தானே ரி.வி தொடங்குவார்
தானே ரி.வி இலவசமாக கொடுப்பார்
தானே அரிசியை இலவசமாகக் கொடுப்பார் தானே ஆந்திரவிற்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பார்.அப்படி பட்ட டமிழக முதல்வர் கலைஞருக்கு உங்க ஓட்டை போடுங்க?
கலைஞரின் performance நல்லாயிருக்கு.. வரவர
அவரது டலன்ட் தெரிய வருகின்றது.
இடையில் சஞ்சய் வந்தார் என்னடா என்று பார்தால் பிரேக் சொல்ல வந்துவிட்டாரா என்று நினைத்தேன் இல்லை அவர் வந்து சொன்னது
நீங்கள் கலைஞருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்றால் கலைஞர் என்று டைப் பண்ணி கலைஞர் போனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்கள் அதில் அதிஷ்ட சாலிக்கு கலைஞர் தங்க மோதிரம் வழங்குவார் என்று அறிவித்து விட்டு சென்றார்.
தேர்தல் களத்தின் முதலாவது பிரச்சாரம் முடிந்து விட்டது.
மீண்டு ஒரு பிரச்சாரத்தில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது கலைஞர் தொலைக்காட்சியின் வால்கள்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...