Sunday, August 13, 2017

பிக் பஸ்....... (01)




அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது வேற இது வேற என்று சொன்னா நம்பவா போறீங்க…

சரி…. சுரி…விடயத்திற்கு வருவமே ஏன் வீண் அளப்பறை….. பிக் பஸ் என்றால் பெரி;ய பஸ்…… அட அதிலும் நாமும் பயணம் செய்து பார்போம் என்று கோட்டை பஸ் நிலையத்தி;ல்  களுத்துறைக்கு போகலாம் என்று அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஒருசீட்டைப்பிடித்து அமர்ந்துகொண்டேன்….
நம்மளுக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் இருந்தார்கள் அதில ஒருவனிடம் கேட்டேன் களுத்துறைக்கு நான் செல்கின்ற இடத்தை அவன் சொன்னான் எனக்கு தெரியாது… உங்களிடம் போன் இருக்கா என்று நான் ஆம் என்றேன் … உடனே அவன் கூகுல் மப்பை பார்த்து போங்கள் என்றான்.
நம்மலுக்கு கூள்தான் தெரியும் கூகிள் எங்கதெரியும் என்றேன்….

உடனே அந்த பையன் எனது போனை வாங்கி கூகிள் மப்பை டவுண்லோட் பண்ணி நாம  எந்த இடத்திற்கு பயணிக்கபோறமோ அந்த இடத்திற்கு வழிகாட்டிற விதத்தை சொல்லித்தான் தந்தான்….  விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று எனக்கு மறு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன்…
அவருக்கு வந்தது கோபம் என்னை அடிக்காத குறைதான்…. நீங்களும் உங்கட விஞ்ஞானமும் என்று கோபப்பட்டார்…..


ஏன் அப்படி கோபப்படுகின்றீர்கள் என்று கேட்டால்…..
அதுவா… வீட்டில் யாரும் என்னுடன் பேசுகின்றார்கள் இல்லை.
ஏன் வீட்டில்  சண்டைய என்றேன்….
இல்லை ஏல்லோரும் ஏதோ பேஸ் புக்காம் காலையில் எழுந்ததில இருந்து அதுகள் தூங்கும்மட்டும் அதோடுதானே இருக்கிதுகள்…. என்னத்தை சாப்பிடுதுகள் என்னதை குடிக்குதுகள் என்று அதுகளுக்கே தெரியாது எந்த நேரம் பார்த்தாலும் பேஸ்புக் அதில… அவன் இவ்வளவு லைக் போட்டிக்கான் இவன் இவ்வளவு லைக் போட்டிருக்கான் என்று சண்டைவேற…..

திடீர் என்று தூக்கத்தில சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்; ஏன் என்று போய் பார்த்தால் பேஸ் புக்கில ஜோக் போட்டிருக்காம் அதைபார்த்து சிரிக்கிறாங்க… இரவு 12 மணிக்கு பிறகு தூங்காமல் விடியும் மட்டும் பேஸ் புக்கில இருக்கிறதுகளாம் (கேட்டா நைட் டேட்டா இலவசமாம்.) அதனால் ஸ்கூலுக்கு கூட லேட்டாக போகிறது. அங்க போய் தூங்கி ரீச்சரிடம் அடிவே வாங்கிக்கட்டுறாங்;கள் என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.
அப்பதான் நான் யோசிச்சேன் குடும்பம் என்றால் எப்படி கூட்டாக இருந்து கதைத்து மகிழந்திருப்போம் இப்ப குடும்பத்தைவிட பெயர் ஊர் தெரியாத ஆணோடு பெண்ணும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்வதும் நல்லவர்களா கேட்டவர்களா என்று கூடதெரியாது உறவை வளர்த்துக்கொள்வதுமே இன்று பல குற்றங்களுக்கும்கொலைகளுக்கும் காரணமாகிப்போய்விடுகின்றது. ஏதையும் நாம் கவனத்தோடு இருந்தால்தான் நாம்  எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..
அட களுத்துறை வந்துவிட்டது நான் இறங்குகின்றேன்…இந்துமுறை எனது அளப்பறையை நிறுத்திக்கொள்கின்றேன்… மீண்டும் அடுத்த பஸ்ஸில் சந்திக்கின்றேன்…








No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...