Tuesday, January 24, 2017

இலங்கையில் ஜல்லிக்கட்டு பேரணியும் விதண்டா வாதங்களும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் தொடர்ந்து 7 நாட்களாக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் எழுச்சியை கண்டுள்ளனர்.. இளைஞர்கள் சமூகவலைத்தளங்களினூடாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். வெற்றியும் கண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகநாடுகள் பலவற்றில் இளைஞர்களும் மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் தான் இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு போன்ற இடங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு இலங்கையில் இளைஞர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது அந்த இளைஞர்களை கொச்சப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நான் இந்த பதிவை மேற்கொள்கின்றேன்……
தமிழக இளைஞர்கள ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராடத்த்தை அன்று ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மேற்கொண்டிருந்தால் அத்தனை உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். அப்படி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வீண் போராட்டம் என்று கொச்சைப்படுத்துகின்றனர்.
2009 ஆம் ஆண்டுதான் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட ஆண்டு. சமூகவலைத்தளங்கள் என்பது அறிமுகப்படுததப்பட்டு பெரிதும் இளைஞர்களால் அறியப்படாத ஆண்டாகவே இருந்தது. ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமூகவலைத்தளங்களில் பரவவும் இல்லை பேஸ்புக் டுவிட்டர் கடந்த 5 ஆண்டுகள்தான் மக்களிடத்தில் சென்றடைந்திருக்கின்றது அவ்வாறு இருக்கும்போது எப்படி இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்திருப்பார்கள் அறிவு ஜீவிகளே சொல்லுங்கள் பார்ப்பம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள்தான் மாறிமாறி ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக தமது கட்சிகள் சார்பாகவே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன தவிர கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளத்தை பார்வையிட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் இது வசைபாடுபவர்களுக்கு தெரியாதா?
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அரசியல் சாராத இளைஞர்களே திரண்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். சிங்கள இணையத்தளம் ஒன்று கொழும்பில் புலிகள் வந்துவிட்டனர். இது அவர்களின் ஆர்ப்பாட்டம் என்று எழுதியிருந்தது.
தமிழக இளைஞர்களுக்கு நாம் ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார்.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அண்ணன் முத்துக்குமார் தீக் குளித்தானே அவன்மட்டுமா எத்தனை தமிழக இளைஞர்கள் தீக்குளித்து தமது உயிரை நீத்தார்களே அதுயாருக்காக அவன் ஏன் தன் உயிரை எமக்காக தரவேண்டும். அவனும் தமிழன்தானே அவனுக்கு செய்யும் நன்றிக்கடன் கூட எமக்கு இல்லை.
(தமிழகம் எமக்கு செய்த உதவிகளை சொல்லப்போனால் அதற்கு ஒருபுத்தகமே போடலாம்)
நன்றி மறப்பது நன்றறன்று……
வசைபடுபவர்கள் இப்பவும் நண்டுகளாகவே இருக்கின்றனர்…….
(நண்டுக்கதை தெரியும்தானே எல்லோருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை)
இளைஞர்களை ஊக்கப்படுத்தாமல் அப்ப செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் இப்ப செய்திருக்கலாம் என்ன்? என்ன? கேள்வி முதலில் நீங்கள் வந்து எங்களுடன் களத்தில் இறங்குகள் வீட்டில் இருந்துகொண்டு பேஸ்புக்கில் போட்டுவீட்டு சோம்போறிகளாக இருக்காதீர்கள்…..
விரைவில் …. எமது நாட்டில் இடம்பெறும் உரிமைகளுக்காகவும் காலிமுகத்திடல்லிஎமது இளைஞர் கூட்டம் விரைவில் கூடும்….



No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...