Wednesday, December 2, 2009

காதலின் பிரிவுகள்



காதலின் வலிகளையும் காதலின் பிரிவுகளையும் எத்தனைகாலங்கலாக நாம் மறைத்து வைத்திருந்தாலும் அந்த ரணங்களை மீட்டும் போது மனதில் ஒரு வலி ஏற்படும்.. அந்த வலி சுமையாக இருந்தது..


இப்போது மீட்டும்போது சுகமாக இருக்கின்றது.
காதல்... நாம் விரும்பும் பெண்ணை விட நம்மை விரும்பும் பெண்ணை நாம் ஏற்றுக்கொண்டால் அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்..


(இது எங்கேயோ படத்தில கேட்டமாதிரி என்று நினைக்கின்றீர்கள் அதுசரிதான்)


நாம் ஒரு பெண்ணை விரும்பினால் அந்த பெண் நம்மளை விரும்புகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு உடனேயே நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள் அதற்கு பதில் நல்லதோ ?கேட்டதோ? அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


அதைவிடுத்து ஒரு பெண்ணுடன் நீங்கள் பழகுகின்றீர்கள் அதை நட்பா? காதலா? என்று முதலில் நீங்கள் உங்கள் மனதில் தீர்மானித்துக்கொள்ளுங்கள் நட்பாக பழகிவிட்டு திடீர் என்று காதலை நீங்கள் வெளிப்படுத்தும்போது அது உங்கள் மீதான வெறுப்பாகவே இருக்கும்.


அப்படியான காதலை ஒரு போதும் பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


அப்படி ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் முயற்சி திருவினையாக்கும் என்று பஞ்டயலொக் எல்லாம் பேசி மீண்டும் மீண்டும் உங்கள் காதலை தெரியப்படுத்துவதற்கு நீங்கள் நல்லவன் போல் காட்ட முனைவதும் சமூகத்தில் உள்ள கெட்டவர்களை விட நான் நல்லவன் என்று தெரியப்படுத்துவதும்.


அது உங்கள் மீதான வெறுப்பையே ஏற்படுத்தும். நீங்கள் மற்றவர்களுடன் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அதற்கு உங்களுக்கு தகுதியில்லை மற்றவர்கள்தான் நீங்கள் நல்லவர் என்று சொல்லவேண்டும்.


காதலியுங்கள் அது தப்பே இல்லை.. இருவரும் காதலித்து திருமணத்தில் சேரமுடியாததுதான் காதல் தோல்வி.
அதைவிடுத்து..


ஒருதலையாக காதலித்து அது கிடைக்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்ததுபோல் அலைவதும். கிடைக்காத அந்த பெண்ணுக்கு துரோகி என்ற பட்டமும் கொடுக்கின்றதும் உங்களது இயலாத்தன்மையைத்தான் காட்டுகின்றது.


காதலின் வலி ஒரு மனிதனை நரகத்திற்கு தள்ளிவடும்... அதை உணர்ந்து செயற்படவேண்டும்.


(எங்கங்க கேட்கின்றாங்கள் பட்டுத்தான் புரியவேண்டும் என்றால் அந்தக் கடவுளால் கூட இவர்களைத்திருத்த முடியாதே)


அந்தக் காலத்து காதலை விட இந்தக்காலத்தில் ஆண் பெண் நட்பு நன்கு ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றது.
நட்பு கத்தி முனையில் நடப்பதுபோன்றதுதான். கொஞ்சம் சரிந்தால் காதலாகிவிடும்.
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவரோ...
ஆயிரம் சேது படம் வந்தாலும் காதலையும் தோல்விகளையும் திருத்தவே முடியாது.


காய்ச்சலும் தடிமனும் தனக்கு வரும்போதுதான் அதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். இல்லையேல் காய்ச்சாலா என்று எள்ளிநகையாடிக்கொண்டிருப்பார்கள்.


(இது பாகம் 1) இன்னும் தொடரும்...




No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...