Friday, July 31, 2009

கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும்

இராமாயண காலத்தில் இருந்தே தமிழர்களை அடக்கிக்கி ஆளும் வட இந்தியக் கொள்கைவாதம்.வால்மீகியில் ஆரம்பித்து இன்றைய இந்து ராம் வரைக்கும் தமிழர்களின் தலைவனை கொடுரமான அரக்கர்கள் என்று வர்ணித்துக் கொண்டு வந்திருக் கின்றனர்.அன்று இராவணனை அரக்கன் என்று வர்ணித்தார் வால்மீகி.
கம்பன் ஏன் தமிழில் மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.அன்று வடஇந்தியாவின் கொள்கைகளை தென்னிந்தியாவிற்கு மாற்றினார் கம்பர் இன்று சோனியா காந்தியின் கொள்கையினை தென்னிந்தியாவுக்கு மாற்றுகிறார் கருணாநிதி.
கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும் இன்று ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது. இராமாயணத்தில் விபூஸனன் எப்படி இராமரிடம் எட்டபன் போல் போய் ஒட்டிக்கொண்டானோ அதேபோல் இன்று எத்தனை தமிழ் அரசியல் வாதிகள் இந்தியாவின் கதையை நம்பி ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள் அதனால் அன்று இராவணனை இழந்தது தமிழ் இனம் இன்று பிரபாகரனை இழந்து நிற்கின்றது.
அதுசரி ஒரு கெட்டவனை இராமாயணத்தில் விபூசனன் நல்லன் என்று வாரலாறு நம்பவைத்துள்ளது.அதுபோல் பிரபாகரன் என்ற நல்ல வீரனைப்பற்றி வடஇந்திய கொள்கைவாதம் கேட்டவன் என்று வர்ணித்து அதை வரலாறாகவும் மாற்றுவதற்கு அது செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
அன்று ஒரு சீதையை கடத்தியதற்காக.... முழு இலங்கையையே அழித்தது இந்தியா இன்று ஒரு ராஜீவ்காந்திக்குப் பதிலாக முழுத் தமிழினத்தையே அழித்தொழித்திருக்கின்றது.

முன்பு வரதராஜா பெருமாளை தனது தேவைகளுக்காக பயன்படுத்திய இந்தியா அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தது.
இன்று அவரின் நிலைய என்ன???????
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டமாதிரிஇந்தியாவை நம்பி தமிழர்களை தமிழர்களே அழிக்கின்றார்கள்.

1 comment:

ஐந்திணை said...

//தமிழர்களை தமிழர்களே அழிக்கின்றார்கள்//

True

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...