Monday, July 13, 2009

மாற்றங்களும் மனிதமும்


மனிதனில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கை அது அவர்கள் வளரும் சூழலைப்பொறுத்து அவர்கள் மாற்றம் அடைவார்கள் என்று சொல்லலாம் அதற்காக மாற்றங்கள் மனிதனைப் புரணப்படுத்தும் என்பது நம்பிக்கை.
நான் இப்படித்தான் வாழ்வேன் என்பது உண்மை நிஜயம்கட்டாயம் என்று வாழ்ந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தமாவது கிடைக்கும்.நாம் எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் அதுவாகவே தீர்மானிக்கட்டும் என்றுவிடுவது நாம் வாழப் போகின்ற வாழ்க்கைக்கு ஒரு தடையாகவே இருக்கும்.
நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே சூழலில் இருந்து விட்டு ஒருவாரமோ அல்லது ஒரு மாதமோ வேறு ஒரு சூழலில் வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் உங்களில் பல மாற்றங்கள் தென்படும். ஏன் உங்களைச் சுற்றி இருக்கின்றவர்களில் கூட பல மாற்றங்களை நீங்கள் காணலாம். நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவை இழந்து விட்டோம் எவ்வளவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது புரியும். எது நிஜயம்எது போலி எது நம்பிக்கை எது வாழ்க்கை என்றெல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள மாற்றம் என்பது கட்டாயம் அவசியம்.
மாற்றங்கள் மனிதனினை சீர்படுத்தும் அவனை ஒரு நிலைப்படுத்தும் அவனது இலக்கை அடையக்கூடிய முறையைக் கற்றுக்கொடுக்கும்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...