Friday, July 3, 2009

என்ன கொடுமை சரவணா.....

நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திக்கின்றேன் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது.

மக்கள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள்.. வாழ்கின்றனர் என்ற பசப்பு வார்த்தையை நானும் நம்பி ஒரு தடவை யாழ்ப்பாணம் சென்று வந்தேன்.. சென்று வந்தேன் என்பதை விட நொந்து வந்தேன் என்று தான் சொல்ல முடியும்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்? அப்படி என்றால் ஏன் அங்கிருந்து விமானத்தில் வரும் பொழுது பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் இல்லாதஇராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் கட்டுவன் பகுதியில் முதலில் பயணிகள் பொதிகள் அனைத்தும் இராணுத்தினரால் பரிசோதனை செய்யப்பட்டு பின் மொப்ப நாயின் மூலம் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகின்றது.

பின் பயணப் பொதிகளை பயணிகளே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்ற வேண்டும். சரி அவ்வளவுதான் சோதனை என்று பெரு மூச்சு விட்டுவிட்டு இருந்தேன்.

பெருமூச்சு விட்டு சில நிமிடங்களில் வேறு வாகனங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் பலாலி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இன்னொரு சோதனை நடவடிக்கை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கும் மொப்ப நாய்களிடம் மீண்டும் எமது பயண பொதிகள் சோதனை செய்யப்படுகின்றது. பின் பயண பொதிகளை இராணுவத்தினர் அக்குவேறு ஆணி வேறாக சோதனை செய்கின்றனர்.

சோதனை செய்த பின் வாகனத்தில் மீண்டும் பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்ற வேண்டும்.. இத்தனைக்கு ஒரு வழி போக்குவரத்திற்கு 11 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது..

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வருவது என்றால் விமானத்தில் வருவது என்ற பெயர் ஒழிய ஆனால் அங்கிருந்து கொழும்பு வருவதென்றால் எவ்வுளவு கஷ்டங்கள்.

இத்தனைக்கும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாம்?
என்ன கொடுமை சரவணா ?

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...