Tuesday, September 29, 2009

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல்

தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரம் ஏன் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். கமல் என்னும் கமல்ஹாசனை.

கமல் சினிமாவில் பிரவேசித்து 50 ஆண்டுகள் நிøறைவு பெறுகின்றது.... ஒரு தனிமனிதனாக தமிழ் சினிமாவை தனது தோளில் வேதனைகளையும் கஷ்டங்களையும் சுகங்களையும் சேர்த்து சுமந்து வருகின்ற ஒரு அற்புதக்கலைஞன்.

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல் என்ற நிலை. சுவாசிக்கும் மூச்சுத்தொடங்கி உடலில் ஓடுகின்ற இரத்தம் வரைக்கும் கமலிடம் சினிமாதான்.

இந்த 50 நெடிய வருடங்களில் தனது நடிப்பு வாழ்க்கையில் கமல் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். அவரது குறிப்பிடத்தக்க சில படங்கள் வெற்றியை ஈட்ட முடியாமல் போனாலும் உலக சினிமா ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பண ரீதியான வசூலுக்கும் மேலாக மதித்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர் கமல்.

குறிப்பாக ஹேராம் படத்தின் தோல்வி அவரைப் பெரிதும் பாதித்தது. சிம்பனி இசை, சிறந்த நடிப்பு, சர்வதேச தரத்திலான இய க்கம் எல்லாமிருந்தும் இந்தப் படத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

('இந்தப் படம் தோற்றதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் இந்த வருத்தத்தைத் தந்ததற்காக நமது ரசிகர்கள் நிச்சயம் ஒருநாள் வருந்துவார்கள்!' கமல்).

முதல்வர் கலைஞர் வாயால் கலைஞானி எனப் பாராட்டப்பட்டவர் கமல்.
புதுமைகளை விரும்பி ஏற்பவர். திரைத் தொழில் நுட்பத்தின் அத்தனை முதல் முயற்சிகளையும் ஆராய்ந்து அதை அறிமுகப்படுத்தவும் தயங்காதவர்.
சினிமா சார்நத கமலை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சினிமா தவிர்ந்த தனிப்பட்ட வாழ்க்கை கமலை எத்தனை பேருக்குப்பிடிக்கும் என்பது குறைவுதான்.
அதற்கு கமல் எனும் மனிதன் தன்னையும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய ஏன் பேசுகின்ற மனிதன் அதனால் தான் கமலை சுற்றி சர்ச்சைகளும் வந்துகொண்டிருக்கின்றது.

தெளிந்த நீரோடையான கமலிடம் தெளிவான வாதங்களை நாம் அவரது உரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
(திருமணம் என்பது மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த தான் செய்துகொண்ட ஒரு முட்டாள்தனமான காரியம் என்றும் தனக்கு விரும்பிய பெண்ணுடன் வாழ்வதற்கு திருமணத்தை தான் பயன்படுத்தியதாகவும் கமல் அண்மையில் தெரிவித்திருந்தார்.)
அதற்கு சர்சைகள் கிளம்பின... அதற்கு கமல் சொன்ன பதில் இது எனது தனிப்பட்ட கருத்த கமல் எனும் மனிதனின் கருத்து என்று தெரிவித்தார்.

அந்த கருத்தை நாம் பார்த்தால் இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் பதவிகளில் உள்ளவர்கள் எத்தனை பெண்களுடன் இருக்கின்றார்கள் அதுவும் கள்ளத் தொடர்புகள் மூலம்.

சமூகத்தினால் இதை எல்லாம் அங்கீகரிக்க முடிகின்றது.
ஏன் கமல் கூட சொல்லியிருந்தார் விவாகரத்துசட்டங்களும் விவாகரத்தும் ஏன்வருகின்றது. நமது முன்னோடிகளாலேயே இது ஏற்பட்டிருக்கின்றது. அப்போ பிழைகள் செய்தது சட்டமா? இல்லை சமுதாயமா? ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் வாழ்கின்றான் என்பதை இந்த சமுதாயம் ஏன் அங்கீகரிக்கின்றது.
என்னட கமலை பற்றி பதியப்போய் வேற பாதைய மறுகின்றது என்று நினைக்க வேண்டாம் எல்லாம் இந்த சமூதாயத்தின் மீது வருகின்ற கோபங்கள்தான்.

கமல் எத்தனை படங்களில் நடித்தான் என்பதை பார்க்காது எத்தனை பெண்களுடன் இருந்தான் என்பதைத்தான் பார்க்கும் இந்த சமூகம்.
கமல் சிறப்பாக நடித்துவிட்டார் என்று தலைப்புச் செய்திகள் போடாத நாளிதழ்கள் கூட தங்களது வியாபாரத்திற்காக கமல் விவாகரத்தை மட்டும் பெரிது படுத்திப்போடுகின்றன. இதை இந்த சமூகம் ஏன் அங்கீரிக்கின்றது?

விவாகரத்துக்களும் நடிகர்களின் அந்தரங்கள வாழ்க்கையையும் சுவைபட எழுதும் எழுத்துகள் ஏன் அவனது திறமைகளை அங்கீகரிப்பதில்லை?
உன்னைப் போல் ஒருவனும் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் கோபங்கள் ஏன் அவர்கள் கோபங்களை அடக்குகின்றார்கள் என்பது புரியவில்லை.

கமலை அரசியலுக்கு அழைக்கின்றார்கள் ஏன்? கமலது புகழை பயன்படுத்திக்கொள்ளத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஒரு நல்ல மனிதனால் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

யாருக்கும் அடிபணியாத குணம்
தனது திறமையில் நம்பிக்கை உள்ள தன்மை
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு உணர்ந்தவர் என்பதினால்தான் கமல் அரசியலை வெறுகின்றார்.
அரசியலில் கமல் நுழைந்தால் கோபங்களும் சர்ச்சைகளும் புதிய அரசியல் நோக்கங்களையும் இந்த தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

அரைத்தமாவை அரைப்பதுதானே தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவிடயம்.
தி.மு.கா.வும் அ.தி.மு.காவும் தான் தொடர்ந்து ஆட்சியில் வரலாம் அவர்கள்தான் அரைத்தமாவை அரைத்துக் கொடுக்கக்கூடியவர்கள்.

2 comments:

வந்தியத்தேவன் said...

நியாயமான ஆதங்கங்களுடன் எழுதியிருக்கின்றீர்கள். கமலின் நல்ல படங்களைப் பாராட்டாதவர்கள் அவரின் அந்தரங்கத்தை மட்டும் குடைவார்கள்.

கமல் இன்னொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ பிறந்திருந்தால் இன்றைக்கு அனைவராலும் கொண்டாடப்பட்டிருப்பார்.

Tamil astrology said...

உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்

நன்றி

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...