Saturday, August 8, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மடல்.....






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு வணக்கம்.
பாராளுமன்ற தேர்தல் வருவதும் வாக்குறுதிகள் கொடுப்பதும் அவை பின்பு காணாமல்போவதும் உலக அரசியலில் நிகழ்ந்து வரும் ஒரு விடயம்தான் அதற்கு கூட்டமைப்பு மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது....
சரி அது எதற்கு நமக்கு அரசியலில் இது சாதாரணப்பா கவுண்ட மணி ஸ்டைலில் சொல்லவேண்டியிருககின்றது.

இன்முறை பாராளுமன்ற தேர்தல் ஆனது நாட்டில் அமைதி நிலவுகின்ற காலத்தில்வருகின்ற தேர்தல். இம்முறை வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளி;ல் கூடுதல் எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். (சந்தோசம்தான்)

சம்பந்தன் ஐயா கூறியது போன்று இம்முறை தமிழர்களில் தேர்தலில் வெற்றி பெற்று பேரம் பேசும் அரசியலை உருவாக்க கூடிய தகுதி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகுத்தான் இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் மாண்டவர்களின் ஏன் விதைக்கப்பட்டவர்களின்  கனவு.... தமிழர்கள் சுதந்தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே.
இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் ஆவியை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். உலகமே  மிகவும் வேதனை அடைந்த அந்த நாட்கள்.........
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை... வருது.... அது வந்தால் தமிழர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும் என்று நினைக்கலாமா?

தேர்தல் மேடைகளில் ஐ.நா.விசாரணை அறிக்கையை பற்றி பேசுவதை விடுங்கள்....... அது வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதுபோல் வரும்....
உரிமை இழந்து உறவை இழந்து உணர்வுகளோடு மட்டும்தான் இருக்கின்றோம்.

இன்று மீள் குடியேற்றப்பட்டு வசதிகள் இன்றி மக்கள் கண்ணீர் தவி;கின்றனர்.
அவர்களுக்கு ஐ.நா. அறிக்கையை பற்றி பேசி என்ன பயன்? உயிர் வாழ்வதற்கு அவர்களுக்கு ஒரு அதிகாரம் வேண்டும்.  அதை இம்முறை பேரம் பேசும் அரசியல் மூலம் நீங்கள் பெற்றுக்கொடுக்கலாம்.

கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டாது என்று வீரவசனம் பேசலாம். அதற்கு ஒரு 1000 பேர் வரவேற்பார்கள்..

ஆனால் பாதிக்கப்படப்போவதும் எமது எதிர்கால சந்ததியே... அதை உணர்ந்து
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் அவர்களுக்காக இந்த தேர்தலில் பேரம்பேசும் சக்கியாக மாறி அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும்.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தொழில்சாலைகள் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும். என்பாட்டன்.. முப்பாட்டான் காலத்தில் இருந்த அதே தெரு அதே கடை இனறும் அதே இடத்தில் இருக்கின்றது. என்றால் நாமும் அதே இடத்தில் தான் நிற்கின்றோம் என்று அர்த்தம்.

அஸ்ரப் காலத்தில் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பேரம் பேசும் அரசியல் மூலம்  அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிவனங்களிலும் அனைத்து திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

ஆனால் தமிழ் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

 அவர்களுக்கு உரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமை பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே இருக்கின்றது.

அதை செய்வீர்கள் என்ற ஆதங்கத்துடன்....

நன்றி
இப்படிக்கு 
வருங்காலம்




Wednesday, January 30, 2013

விஸ்வரூபமா.?........... இல்லை ஜெயாரூபமா


விஸ்வரூபமா.?........... இல்லை ஜெயாரூபமா என்று தெரியவில்லை... இன்று உலக அளவில் தமிழர்களின் மனங்களை கவலைகொள்ள செய்துள்ளது. விஸ்வரூபம் படம் தடையும் தடை நீடிப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும்தான்.

  • ஏன் தடை? 
  • யாரால் தடை ? 
  • எதற்காக தடை?....

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் விஸ்வரூபம் படத்தில் காட்சிகள் இருக்க்கின்றன என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து படத்தை தங்களுக்கு போட்டுக்காட்டினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.. அதனடிப்படையில் படம் வெளியிடுவதற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காட்டியிருக்கின்றார்.் அதன் பிறகு படம் வெளியிடுவதற்கு முதல் நாள் எப்படி இவர்களால் போராட்டத்தில் இறங்க முடிந்தது. யார் இவர்களின் பின்னணியில் உள்ளனர்?
படத்தை முதலில் ஆளும் கட்சியின் தொலைக்காட்சி வேண்டுவதற்கு போட்டி போட்டது. ஆனால் எதிர்த்தரப்பு தொலை க்காட்சிக்கு கமல் தனது தொலைக்காட்சி உரிமையை கொடுத்து இருக்கின்றார். அதை விட படத்தை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவள் விநியோகிஸ்தர்களாக படங்களை வேண்டியதா? இல்லை அண்மையில் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் சிதம்பரம்தான் பிரதமராக வரவேண்டும் என்று கமல் பேசியதா? இவை அனைத்தும் தான் ஜெயாவின் கோபத்திற்கு ( விஸ்வரூபத்திற்கு) ஆளாக்கியிருக்கின்றது.

படத்தை வெளியிடுவதற்கு முன்பு சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த சென்சார் சான்றிதழை தமிழக சென்சரில் இருந்தவர் ஒருவர் இஸ்லாமியர் அவருக்கு தெரியவில்லையா இது இஸ்லாமியருக்கு எதிரான படம் என்று?
ஆளும் கட்சியின் அடிவருடிகளௌக இருக்கின்ற பங்காளிக்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்ககத்திலும் அவர்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தமிழக அரசு தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தொடர் வழக்குகள் தொடர் தாக்குதல் இது இந்து இஸ்லாமிய பிரச்சினையை தமிழக அரசு கட்டவிழ்ந்து விட்டதாகவே தோன்றுகின்றது?
நடிகர்கள் கைவிட்ட நிலையில் கமல்...

விஸ்வரூபத்திற்கு பிரச்சினை ஆரம்பத்திலி வந்த போது நடிகர்கர்கள் கமலுக்கு கைகொடுக்கவில்லை.. நடிகர் சங்கம் ஏதோ ஒரு போக்கு சாக்கிற்கு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டது.
ஆரம்பத்தில் கமலுக்கு துணிந்து ஆதரவு கொடுத்தது பிரகாஷ்ராஜ் குஷ்பு மனோ பாலா கும்கி நாயகன் விக்ரம் ஆனால் அடுத்த முதலமைச்சர் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் விஜய் ஏன் கமலுக்கு ஆதரவாக இதுவரை ஒரு குரல் கொடுக்க வில்லை ஆளும் கட்சி்யை பகைத்துக்கொள்ள பயத்திலா? அஜித் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை..

கமலுக்கு நேரில் சென்று சிம்பு, சரத்குமார், ராதிகா, அரவிந்தசாமி, மணிரத்தினம் போன்றவர்கள் ஆறுதல் தெரிவித்திருக்கின்றார்கள்.
ரஜினியும் தன் நண்பனுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்தான் இயக்குநர் பாராதிராஜா இயக்குநர் கேயார் இயக்குநர் வசந் அர்ஜுன் என்று நடிகர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

இதே வேறு ஒரு நடிகருக்கு பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் உண்ணாவிரத்தில் ஈடுபடவேண்டும். அதில் கட்டாயம் கமல் கலந்துகொாள்ள வேண்டும். ஆனால் கமலுக்கு பிரச்சினை தமிழ்சினிமாவின் உயிர்மூச்சு அந்த மூச்சைக்க காப்பாற்ற யாரும் இல்லையா?
கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மதச்சார்பற்ற ஒரு மாநிலமோ ஒரு நாடோ இருந்தால் நான் அங்கு குடியேறத் தயரார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவ்வாறு கமல் தெரிவித்தது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

தமிழனுக்கே தமிழ் நாட்டில் வசிக்க இடமில்லையா?
எங்கே செல்கின்றது தமிழ் நாடு.

சரி படத்திற்கு வருவம் விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக காட்டமல் எப்படி காட்ட முடியும்????தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா உமர் குர் ஆன் படிப்பது போல் காட்டியிருப்பதாக குற்றம் சாட்டுக்கின்றார்கள். நான் கேட்கின்றேன் முல்லா உமர் குர் ஆன் படிக்காமல் கந்தசஷ்டி கவசமா படிக்க முடியும்?

இலங்கையிலும் இப்படத்திற்கு தடையாம்? எந்த நோக்கத்திற்காக இலங்கையில் தடை விதித்தார்கள் இலங்கை அரசாங்கம் தலிபான் தீவிரவாதத்திற்கு ஆதரவு குரல் கொடுப்பதற்காககவா? இல்லை முஸ்ஸில் மக்களையும் முஸ்லிம்அரசியல் வாதிகளையும் தம்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. இல்லை கமல் ஒரு தமிழ் என்ற ரீதியில் தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லையா இலங்கையில்?

இதே ஈழத்தமிழன் தன் போராட்ட வரலாற்றை படமாக்கினால் அதை இலங்கை அரசு தடை செய்யாமல் திரையிடுமா? அப்ப முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டமா?

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் படத்திற்கு தடை என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்கின்றது என்றால் படத்தை தடை செய்வதால்தான் சட்டம் ஒழுங்கு பதிப்படைகின்றது.இது தமிழ் நாட்டு அரசுக்கு தெரியாதா?
கமல் உலக நாயகன் அவன் எந்த நாட்டிலும் எந்த கிரகத்திலும் வாழ்வான்   அவனது திறமையும் அவனது அன்பு உள்ளங்களும் இருக்கின்றது.

Friday, November 4, 2011

ரஹ்மான் இசையில் பாட ஆசை-




சூப்பர் சிங்கர்ஸ் என்றவுடன் ஞாபகம் வருவது.. பாடகர்களா? இல்லை நடுவர்களா? என்று தெரியவில்லை... ஆனால் அனைவரது மனங்களை கொள்ளைக்கொண்டவர் தொகுப்பாளினி.. திவ்யாதான்.. ஒரு பாடகியாக இருந்துகொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் திவ்யா இலங்கை வந்திருந்திருந்தார். இவரை தீபாவளி மித்திரன் வாரமலருக்குக்காக சந்தித்தபோது....


உங்களது திரை இசைப் பயணம் பற்றி..

எனது இசைப் பயணம் தெலுங்கில் வெளியான ரெடி என்ற படத்தில் இடம்பெற்ற ஓம் நமஸதே என்ற பாடலுடன் ஆரம்பமானது. அதற்கு அப்புறம் தமிழில் வில்லுபடத்தில் “தீம் தனக்க தில்லானா என்ற பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைப்யில் பாடினேன். தமிழில் தீராதவிளையாட்டுப் பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்று, கனகவேல் காக்க இப் போது டூ படத்தில் கையை தொட.. போன்ற பாடல்களைப் பாடியுளளேன். தொடர்ந்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடிக்கொண்டிருக்கின்றேன்.

தமிழ் இசையமைப்பாளர்களில் யார் யாருடன் பணியாற்றியிருக்கின்றீர்கள்?

அவர்கள் உடனான அனுபவங்கள்?தமிழில் தேவிஸ்ரீபிரசாத், யுவன் சங்கர்ராஜா, விஜசூ அன்டனி, ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், மணி சர்மா போன்றோரின் இசையமைப்பில் பாடியிருக்கினறேன்.

தேவிஸ்ரீபிரசாத்


தேவிஸ்ரீபிரசாத்தை எனக்கு சின்ன வயத்தில் இருந்து தெரியும். நான் சின்னவயதில் எப்படி பாடுவேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரது இசையமைப்பில் எந்தப் பாடகராக இருந்தாலும் ஈஸியா பாடுவார்கள் . எங்களுக்கு அழுத்தம் கிடையாது. இப்படித்தான் பாடனும் என்று யாருமே வந்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இதுதான் டியூன் அதற்கு ஏற்ற மாதிரி பாடுங்கள் பிறகு அதை சரி செய்யலாம் என்று சொல்லுவார். அந்த மாதிரி ஒரு சுதந்திரம் கிடைக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜ்,

ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு வரியை 10 தடவை பாடச் சொல்லுவார். அவ்வளவு ஆத்மார்த்தமாக செய்வார். சரியாக வரும் வரைக்கும் பாடச் சொல்லுவார் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்திடுவார். ஆனால் பாடினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ்வளவு அழகாக அந்த பாடல் வந்திருக்கும். ஒரு பாடல் முடிப்பதற்கு நிறைய நேரம் எடுப்பார். புதிய பாடகர்கள் என்று இல்லாமல் பெரிய பாடகர்களும் அப்படித்தான் பாடவேண்டும். இவ்வாறான பெரிய இசையமைப்பாளரிடம் பாடுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன்.

விஜய் அன்டனி,

அவரிடம் பாடுவது ரொம்ப ஈஸி.. ரெககொடிங் போனால் அவர் இருக்கமாட்டார். யாராவது ரியூனைத் தருவார்கள். அதைப்பாடிவிட்டு வரவேண்டியதுதான். பிறகு அவர் திருத்திக்கொள்வார். அவருக்கு எந்த விதமாக பாடினாலும் சரி.

யுவன்,

யுவன் சங்கர்ராஜா இசையில் மூன்று பாடல்கள் பாடியிருக்கினறேன். ஆனால் அந்த மூன்று பாடல்களைப் பாடும் போதும் அவர் இல்லை. அங்கு பாடுமபோது ஒரு புதுவித அனுபவம். இசையமைப்பாளர் இல்லாமேலயே பாடியிருக்கின்றேன். பாடலைக் கேட்டுவிட்டு அவர் சொல்வார் ""நல்லாயிருக்கு நான் மிக்ஸ் பண்ணிவிடுறேன் என்று. நீயும் சவுண்ட் இன்ஜினியரும் பாடிக்கொள்ளுங்கள். நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன் என்பார்.

நல்லது பிரபல்யமான இசையமைப்பாளகளுடன் பணியாற்றியுள்ளீர்கள். எந்த இசையமைப்பாளர் இசையில் பாடவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளது?

கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாட்டாவது பாடவேண்டும். எல்லோரும் இருக்கிற ஆசை தான். எனக்கும் உள்ளது.
பாடகியாக வலம்வந்த நீங்கள் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறீர்கள். இதில் எது உங்களுக்கு பிடித்தமானதாகவுள்ளது?

பாடல்கள் பாடுவதுதான் எனக்கு பிடிக்கும். அது சுலபம் தொகுப்பாளினியாக இருப்பது ரொம்ப கஷ்டம். ஒரு தொகுப்பாளினி பார்வையாளர்களின் மனதைக் கவரவேண்டும். அது ரொம்பா கஷ்டமான விடயம். ஆனால் பாடுவது இப்படியானதல்ல. இசையமைப்பாளர் சொல்லித் தருவதை பாடிவிட்டு வந்தால் போதும். ஆனால், ரி.வி.யில் அப்படியில்லை. ஒவ்வொரு விடயத்தையும் நாமதான் பார்த்து பண்ணணும்.

நல்லது இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களில் இந்தப் பாடலை நான் பாடியிருக்கலாம் என்று நினைக்கும் பாடல் எது?..

யுவனின் இசையில் வந்த "இதுவரை இல்லாத உணர்விது' என்ற பாடல். இதனை அன்ரியாதான் பாடியிருந தாங்க அவங்க பாடினது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் பாடியிருக்கலாமே என்று யோசிப்பேன்.

சூப்பர் சிங்கர் திவ்யாவைப்பற்றி சொல்லுங்களேன்..

.தாய் மொழி மலையாளம் என்பதால் நான் முதலில் மலையாளத்தில் தான் ரி.வி தொகுப்பாளினியாக இருந்தேன். பிறகு அதற்கு விடைகொடுத்துவிட்டு அப்புறம் பாடகியாகிடடேன். அப்பொழுதுதான் விஜய் ரி.வியில் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை பாட அழைத்திருந்தார்கள். அப்பொழுது என்னை கேட்டார்கள். தொகுப்பாளினியாக செய்ய முடியுமா என்று நானும் ஓகே சொல்லி விட்டேன்.சூப்பர் சிங்கர் தான் என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அது ஆரம்பித்தபோது மக்களிடம் எப்படிபோய் சேரும் என்று எனக்குத் தெரியாது. அதற்கு முன்னர் நான் பாடியிருந்தாலும் சூப்பர் சிங்கர் ஆரம்பித்த பின்புதான் ஓ.. இவங்கதான் திவ்யா என்று மக்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். கண்டிப்பாக சூப்பர் சிங்கர் குழுவுக்கு நான் நன்றிக்கடமைப்பட்டிருக்கின்றேன். சூப்பர் சிங்கர் இல்லை என்றால் திவ்யாவே இல்லை. இந்த மாதிரி மக்கள் மத்தியில் ஒரு பெயர் வேண்டித் தந்தது அந்த நிகழ்ச்சிதான். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் ஏன்றால் நான் ஒரு மலையாளி. வீட்டில் மலையாளம் பேசுறனான். ஆனால், தமிழில் ஒரு நிகழ்ச்சி அதுவும் தொலைக்காட்சியில் செய்ய வேண்டும் என்றால் அந்த மொழயே தெரியாமல் பண்ணவேண்டிய சூழ்நிலையில் இருநதேன். முதலில் மக்கள் என்னை விரும்பவில்லை. நிறையபேர் ஏன் இந்த பெண்ணு பண்ணுது என்று கேட்டிருக்காங்க. அதற்கு பிறகு மக்களுக்கு என்னை ரொம்ப பிடித்துபபோய்விட்டது. பார்த்தவுடன் ஈஸியான தொழில் என்று நினைப்பார்கள். அங்கு வந்துபார்த்தாத்தான் தெரியும் அந்த குழு எவ்வளவு கஷ்டப்பட்டு செய்யுறாங்கள் என்று.

இலங்கை வந்திருக்கீங்க. இங்குள்ள ரசிகர்கள் பற்றி..

ஆஹா.. ஆஹா.. என்றுதான் சொல்ல முடியும்.. நான் முதலில் வந்தது திருகோணமலைக்குத்தான். அங்கு பெரிய மைதானத்தில்தான் எங்களது நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நான் உடனே கேடடேன் ஏன் இவ்வளவு பெரிய மைதானத்தில் என்று பிறகுதான் தெரிந்தது அந்த மைதானம் முழுவதும் மக்கள் திரண்டிருந்து நல்ல வரவேற்பைத் தந்திருந்தார்கள். எப்ப கூப்பிட்டாலும் நான் வந்து நிகழ்ச்சி செய்ய ரெடியா இருக்கினறேன்...

Saturday, January 1, 2011

2011 புதுவருடம் பிறக்கும்போது

அடஅடடடடடட 2011 ஆம் பிறந்து விட்டதே... எதோ.. நேற்றுத்தான் 2010 பிறந்தது போல் இருக்கிறதே..... அதற்குள் விடைபெற்றுவிட்டதா? 2010.... சரி...... இப்ப என்ன போனதை கொண்டுவரமுடியுமா என்ன? என்று நீங்கள் திட்டுவது புரியுது சரி சரி அதை விடுங்க....... 2011 புதுவருடம் பிறக்கும்போது.... எத்தனை உள்ளங்கள் தங்கள் அன்பு முத்தங்களைப் பரிமாறிக்கொண்டிருந்தன... அதில் ஒரு சில மட்டுமே.... இங்கே...



























காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...