Friday, May 8, 2009

கைவிட்ட இந்தியா கை கொடுக்கும் அமெரிக்கா?

4 அரைக்கிலோ மீற்றர் 1 இலட்சம் மக்கள் என்ன செய்யப்போகுது உலகம்?இந்தக் கேள்வி இன்று ஈழமக்களிடம் மட்டும் மல்ல உலகத்தில் உள்ள அனைவரது கேள்வியாகவும் மாறியுள்ளது.

இந்தியா என்று சொல்வதை விட மத்திய அரசு தான் இவ்வளவு மக்கள் பலியாகக் காரணமாக இருக்கின்றது.

இலங்கை அரசு இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது இந்தியா ஆயுதங்களையும் இராணுவத்தையும் கொடுக்க முடியாது என்றால் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் எங்களுக்கு தரும் என்று மன்மோகன் அரசாங்கத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இந்தியாவின் உதவியையும் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் உதவியையும் பெற்று ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றது மஹிந்த அரசாங்கம்.

உலக வல்லரசுக்களுக்கே தண்ணீ காட்டிக்கொண்டிருக் கின்றது இலங்கை அரசு என்றால் அது அவ்வாறு செய்வதற்கு எத்தனை நாடுகள் பின்னணியில் இருக்கின்றன.

தமிழ் நாட்டின் அரசியலில் இல்லை இந்திய அரசியலையே தீர்மானிக்கின்ற சக்தியாக இன்று ஈழத்தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒபாமா அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடல்களை நடத்திப்பார்த்தது.

ஆனால் இந்திய அரசு தமிழ் மக்களை அழிக்கின்ற இலங்கை அரசுக்கே சாதகமான கருத்துக்களைத் தெரிவித்தது. கிளாரிக்கிளிண்டன் பிரணாப்முகர்ஜி உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியும் பலன் கிடைக்கவிலø. ஜெயலலிதாவின் தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்று சொன்னது இன்று ஜெயலலிதாவுக்கான ஆதரவுக்குரல்கள் கூடியே காணப்படுகின்றது.

இதனால் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.கட்சி தோல்வி என்பதை அறிந்த கருணாநிதி வைத்தியசாலையில் சென்று படுப்பதும் தமிழீழம் தான் தீர்வு என்றும் சொல்வதும் தோல்வியின் பயம்தான்.

ஈழமக்களின் இன்றைய அவலக்குரல் அரசியல் வாதிகளுக்கு கேட்குதோ இல்லையோ மக்களிடம் நன்றாக சென்றடைந்துவிட்டது.ஈழமக்களின் பிரச்சனைபற்றி ராகுல் காந்தி ஒரு கருத்தையும் காங்கிரஸ் காரர் ஒரு கருத்தையும் வெளியிட்டுக்கொண்டிருக் ன்றனர்.
அ.தி.மு.காவுடன் கூட்டுக்கும் தயாராக இருக்கின்றது காங்கிரஸ். ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து போட்டியிடும் ஜெயலலிதா காங்கிரஸுடன் எப்படிக் கூட்டணி அமைக்க முடியும்? அப்படி அமைத்தால் ஈழத்தமிழனை வைத்து பிச்சை எடுக்கிறத்துக்கு சமம்.

பிரிட்டன் இன்று தமிழ் மக்களுக்காகவே பேசுகின்றது அப்படி எந்த நாடு பேசுகின்றதோ அந்த நாடு தீவிரவாதத்திற்கு துணைபுரியும் நாடு என்று பச்சை குத்துகின்றது இலங்கை அரசு.

நோர்வேயைத் தொடர்ந்து இப்பொழுது பிரிட்டனும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இனி அமெரிக்காவையும் அந்தப் பட்டியலில் இணைத்துவிடும் இலங்கை அரசு.இந்திய ஐ.ரி. தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியது அமெரிக்கா . அதைவிட ஐ.ரி. நிறுவனங்களை அமெரிக்காவில் அமைத்து அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்று ஒபாமா அறிவித்திருக்கின்றார்.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மாற்றத்தையும் கொண்டு வரலாம். இலங்கை அரசுக்கு உதவும் இந்தியாவின் நிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கின்றது.

ஒபமா எதனையும் மாற்று கோணத்தில் சிந்திக்கக்கூடியவர் அதனால்ததான் இலங்கை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கலந்துரையாடல்கலை மேற்கொண்டார். ஆனால் இது தெரியாத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தங்களது நிலையில் மாற்றம் இலங்கை ஆசிய பிராந்தியத்தில் ஒரு தீவிரவாத இயக்கம் வளர்ச்சியடைகின்றது அதை முற்றாக அழிப்பதற்கே தாம் பயங்கரவாத யுத்தத்திற்கு உதவுவதாக அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தார்.

ஒபாமா என்ன இந்திய அரசியல் வாதிகள் மாதிரி அனைத்திற்கும் தலையாட்டிவிடுவாரா என்ன?இலங்கையில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார் .

அதனால் தான் தனது இராஜதந்திர நகர்வுகளை மிகவும் கவனமாக கையாண்டுகொண்டிருக்கின்றார். அதன் முதல் கட்டமாகவே பெண்டகன் அண்மையில் செய்மதி மூலம் முல்லைத்தீவில் தமிழ் மக்களை இலங்கை அரசு விமானங்கள் மூலம் கொல்லப்படும் படங்களை ஐ.நாவுக்கு கொடுத்திருக்கின்றது.இதுதான் முதல் கட்டம் என்றும் இனி வரும் நாட்களில் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கபோகின்றது.

இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படப்போகின்றது என்றும் அமெரிக்கத் தவல்கள் தெரிவிக்கின்றன.தமிழனை அழிக்க செய்மதியை கொடுத்து உதவுது இந்தியா .6 கோடி தமிழ் மக்கள் உள்ள நாட்டில் தமிழனுக்காக இருப்பிடம் இல்லைப்போலும். ஒரு அமெரிக்கனுக்குப் புரிந்த விடயம் கூட இந்த அரசியல் வாதிகளுக்கு புரியவில்லை என்றால் இந்திய அரசியல் வாதிகள் பணத்திற்காகவும் பதவிக்காவும் தான் வாழ்கின்றனர் என்பது நிதர்சனம்.

1 comment:

Jeyapalan said...

Well said. India (central) never thought out side of the box. It had an execellent chance to maintain its authority in the Indian Ocean region, but missed it with short sighted hate mongers.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...