Wednesday, May 27, 2009

சதியினால் விதியை அறியாத பிரபா

30 வரு காலப் போராட்டம் சில நிமிடங்களில் அழிக்கப்பட்டனவா அழிக்கப்படவில்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.எமக்காக போராடிய தலைவர் எமக்காக வாழ்ந்த தலைவர் எப்பொழுதும் எம்மோடு வாழும் ஒரே தலைவன் இறந்து விட்டாரா இல்லை உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் குழம்பிப்போயிருக்கின்றார்கள்.
ஒரு சிலர் தலைவர் இறந்துவிட்டார் என்று அஞ்சலிகளையும் இன்னும் ஒரு சிலரோ அவர் இறக்கவில்லை என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
முதலில் அந்த வாதங்களை விடுங்கள்.... அடுத்தது நாம் என்ன செய்யவேண்டும். பிரபாகரன் இறந்தது உண்மைய õக இருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரத்தை நாம் கட்டாயம் வழங்க வேண்டும். அதை நாம் காலம் தாழ்த்தி கொடுத்து எந்த பிரயோசனமும் இல்லை எங்களுக்காக தனது மகனைக் கூட இழந்து தன்னுயிரையும் சொந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்ற வீரமகன்.
அந்த மகனுக்கு உலகம் என்ன கைமாறு செய்யப்போகின்றதோ தெரியவில்லை.சதி வலைகள் விதியை நிர்ணயித்திருக்கி ன்றதை அறியாத தலைவர்.நம்பிக் கழுத்தறுத்த நம்பியார்கள் மற்றும் நாராயண சாமிகள். சோனியாவின் இதயம் ஆனந்த்தில் துள்ளுகின்றதாம். ராகுல் காந்தியின் மனசில் பட்டாம் பூச்சி பறக்கின்றதாம்.
ராஜீவை கொன்ற புலிகளை ராகுல் அழித்திருப்பதாக சொன்னாலும் இனி அவர்கள் இனி மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.தமிழர்களின் தேசியத் தலைவரை தாம் வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்புவேறை.
ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத் தையும் அழிக்கும் செயலில் சோனியாவின் அரசாங்கம் இறங்கியிருந்து வெற்றி கண்டுவிட்டது என்று உளறிக்கொண்டிருக்கின்றது. அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும் விடுதலைப் புலிகள் ஒரு புற்றுநோய் போன்றவர்கள் .
கருணாநிதிக்கும் இந்தச் சதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிகின்றது. பிரபாகரனின் மரணத்தை அடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் நாராயணன்.
ராஜிவ் காந்தி காலத்துக்கு முன்னையா காலங்களில் இருந்தே விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி செயற்பட்டவர் இந்த நாராயணன்.தனது பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்றவுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து வெளியில் இருந்து ஆதரவு செய்யப்போவதாக அறிவித்திருந்த கருணாநிதி.
ஈழப்பிரச்சினை விடயத்தில் மட்டும் கபடநாடகங்களை மேடை ஏற்றினார். கருணாநிதியினால் அன்று அரசாங்கம் கலைக்கப்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் 1 இலட்சம் தமிழ் மக்கள் இறந்திருக்கமாட்டார்கள்.உலகத் தமிழீனத்தின் தலைவன் என்கின்ற நிலைக்கு வரஇருந்த கருணாநிதி இன்று உலகத் தமிழினத்தின் துரோகியாகவே மாறிவிட்டார்.
புலிகள் இப்பொழுது ஆயுத்த ரீதியாக தோல்வி கண்டு உள்ளனர் என்பது நிதர்சனம். அதற்காக அவர்களது கட்டமைப்புகள் பிரபாகரனால் உருவாக்கப்பட்டவை அவை அவ்வாறே இயங்கும் என்று மட்டக்களப்பு அரசயில் துறைப்பொறுப்பாளர் ஜெயமோகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.புலிகள் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டி சிலர் பேசிவருகின்றார்கள் இப்படியானவர்களைப் பார்க்கும் பொழுது ஏன் தமிழனாகப் பிறந்தோம் என எண்ணத் தோன்றுகின்றது.பிரபாகரனின் மரணத்தினால் சுகம் காணப்போவது சிங்கள தேசம் அதை அறியதா தமிழன் வாய்ஜாலங்கள் செய்யாமல் இருந்தால் சரி..... இனி தமிழனுக்கு விடிவுகாலம் என்பது அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாததொன்று.....

1 comment:

Anonymous said...

ராகுல் காந்தியின் மரணம் மட்டும் இந்த வலியை நீக்கி வுடுமா? ஒட்டுமொத்த நேருவின் குடும்பமும் தேவை.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...