
Saturday, March 28, 2009
Tuesday, March 24, 2009
சம்பிரதாயங்களும் சடங்குகளும்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மக்களை வழி நடத்துகின்றதா இல்லை மக்களை சீரழிக்கின்றதா என்று பட்டி மன்றம் வைக்க நான் வரவில்லை அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவத்தைத் தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.அண்மையில் தான் அவளுக்கு அவர்களின் ஊர் வழக்கப்படித்தான் திருமணம் நடந்தது. ஆனால் நடந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அந்த ஊர்வழக்கமும் அவர்களது கலாசாரமும் அவளை என்ன கொடுமைப்படுத்துகின்றது.
திருமணம் ஆகி இரண்டு நாட்கள்தான் தாலி கட்டும்போது மாப்பிள்ளை தாலியை மாற்றிக் கட்டிவிட்டாராம் பெண்ணுக்குக் கட்டாமல் தங்கைக்கு கட்டினதாக நீங்கள் நினைக்க வேண்டாம் தாலி தலைகீழாக கட்டிவிட்டாராம்.
அதற்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பெண் வீட்டார் நீ வந்த நேரம் தான் இப்படி நடக்கின்றது என்று அவளது முகத்திற்கு முன்னாலே சொல்கின்றனராம்.
நான் கேட்கின்றேன் மாப்பிள்ளை ஒழங்காக தாலியைக் கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.
அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் பெண் அழகில்லாதவள் என்று மாப்பிள்ளையை விட பெண் அழகாக இருப்பது தான் அந்த ஊர் மக்களிடமும் அவனது உறவினர்களிடமும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
வயது போன பட்டி கூட என்ன கோயில்ல இருக்கின்ற சிலையை கொண்டு வந்து விட்டானா. பொம்மை மாதிரியே இருக்கு.
என்ன இந்தப் பெண் இப்படி மெல்லிசாக இருக்குதே என்று சொல்கின்றார்.
அந்தக் காலத்தில பெண்கள் உரல் குத்திமாதிரியோ தெரியவில்லை.தாலியை
தலைகீழாகக் கட்டியதற்காக முதல் இரவைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள் என்ன கொடுமை பாருங்களேன்.
பூனை குறுக்கே போனால் பயணத்தை ரத்துச் செய்கின்றார்கள்.காகம் பசியினால் கத்தினால் கூட அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து விருந்தினர் வரப்போகின்றார்கள் என்று சொல்வது.
விதவைப் பெண்களை நற்காரியங்கள் செய்வதற்கு முன்னிலையில் விடுவதில்லை.இப்படியன செயல்களால் பலரது மனங்கள் வேதனைப்படுகின்றது.
ஏன் ஒரு கூட்டத்தில் சமூகத்தில் தள்ளி வைக்கப்படுகின்றார்கள். சம்பிர்தாயங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று என்ன என்ன கொடுமைகளை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கின்றது.
Monday, March 23, 2009
Friday, March 20, 2009
விஜயின் கோபமும் ஊடகங்களும்
வில்லு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது அதில் விஜய் ரசிகர்க ளைப் பார்த்து சத்தம்போட வேண்டாம் என்று கோபமாக கத்திய வீடியோ அண்மையில் இணையத்தளங்களில் உலா வந்தது.
அதை உடனே அனைத்து இணையத்தளங்களும் பதிவாளர்களும் தங்களுக்கு ஏதேதோ எழுதி பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.விஜய் அப்படி நடந்திருக்கக்கூடாது. விஜய் அப்படி நடக்கின்றதால் தான் அவரது வீட்டில் ஒவ்வொரு கண்ணாடியும் உடையுது. அவர் சாதுவாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.
அதிலும் விஜயின் இந்த செய்தி போட்டால்தான் தங்களது பதிவை கூடுதலாக பார்க்கின்றார்கள் என்ற போட்டி சில பாதிவாளர்களுக்கு இடையில் இதை அவர்களே தங்களது பதிவில் வேறபோட்டிருக்கின்றார்கள்.
விஜய் ஒரு நடிகர்தான் அதற்காக அவருக்கு கோபம் வரக்கூடாது என்பது அடி முட்டாள்த்தனம் என்று தான் சொல்லலாம்.ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? நீங்கள் ஒரு இடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஒரு லிமிட்டைத்தாண்டி சத்தம் வந்தால் நீங்கள் என்ன பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா?என்னடா விஜய்க்கு வக்காளத்து வாக்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் .
இப்படி ஒரு வீடியோ வந்தவுடன்தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்து 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜய் சென்றபோது நடந்து சம்பவம் மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகையில் செய்தி வெளிந்தது. அதன் விவரம் இங்குள்ளது.
விஜய் கொழும்பு வந்தபொழுது டென்சன் என்ற தலைப்பில் வெளிவந்தது.அப்பொழுது விஜய் கோபமாக இருந்ததாவும் இருந்தது.
அது தொடர்பாக அந்த பத்திரிகை நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு தங்களது தலைவரைப் பற்றி தப்பாக போட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் நடந்ததாக நான் அறிந்துகொண்டேன்.
(சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் முழுவிபரங்களும் வரும்)
ஒரு நடிகர் தான் கோடிக்கணக்கில் காசை வேண்டிக்கொண்டு எவ்வளவுதான் சமூகத்தில் தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்க முடியும். இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிடுகின்றார்கள்.ஒரு நடிகன் நடிக்கும் படத்தைப் பற்றியும் அவனது படைப்பைப்பற்றியும் மட்டும் எழுதுங்கள் அவன் அது செய்தான் இது செய்தான் என்று எழுதுவதால்தான் அவர்களும் முதல்வர் கனவை காண முயல்கின்றார்கள் .
அதை உடனே அனைத்து இணையத்தளங்களும் பதிவாளர்களும் தங்களுக்கு ஏதேதோ எழுதி பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.விஜய் அப்படி நடந்திருக்கக்கூடாது. விஜய் அப்படி நடக்கின்றதால் தான் அவரது வீட்டில் ஒவ்வொரு கண்ணாடியும் உடையுது. அவர் சாதுவாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.
அதிலும் விஜயின் இந்த செய்தி போட்டால்தான் தங்களது பதிவை கூடுதலாக பார்க்கின்றார்கள் என்ற போட்டி சில பாதிவாளர்களுக்கு இடையில் இதை அவர்களே தங்களது பதிவில் வேறபோட்டிருக்கின்றார்கள்.

விஜய் ஒரு நடிகர்தான் அதற்காக அவருக்கு கோபம் வரக்கூடாது என்பது அடி முட்டாள்த்தனம் என்று தான் சொல்லலாம்.ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? நீங்கள் ஒரு இடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஒரு லிமிட்டைத்தாண்டி சத்தம் வந்தால் நீங்கள் என்ன பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா?என்னடா விஜய்க்கு வக்காளத்து வாக்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் .
இப்படி ஒரு வீடியோ வந்தவுடன்தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்து 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜய் சென்றபோது நடந்து சம்பவம் மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகையில் செய்தி வெளிந்தது. அதன் விவரம் இங்குள்ளது.
விஜய் கொழும்பு வந்தபொழுது டென்சன் என்ற தலைப்பில் வெளிவந்தது.அப்பொழுது விஜய் கோபமாக இருந்ததாவும் இருந்தது.
அது தொடர்பாக அந்த பத்திரிகை நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு தங்களது தலைவரைப் பற்றி தப்பாக போட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் நடந்ததாக நான் அறிந்துகொண்டேன்.
(சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் முழுவிபரங்களும் வரும்)
ஒரு நடிகர் தான் கோடிக்கணக்கில் காசை வேண்டிக்கொண்டு எவ்வளவுதான் சமூகத்தில் தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்க முடியும். இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிடுகின்றார்கள்.ஒரு நடிகன் நடிக்கும் படத்தைப் பற்றியும் அவனது படைப்பைப்பற்றியும் மட்டும் எழுதுங்கள் அவன் அது செய்தான் இது செய்தான் என்று எழுதுவதால்தான் அவர்களும் முதல்வர் கனவை காண முயல்கின்றார்கள் .
Thursday, March 19, 2009
காதலின் பரிமாணங்கள்

காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.
ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது.
சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.
அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.
ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம்.
ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது.
இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.
காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது.
இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.
தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை.
காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம். அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள்.
தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன்.....
உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும்.
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன்.....
உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும்.
ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.
மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவனையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.
நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.
2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....உடல்கள் இணையும் காதல்.....அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்றுசிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.
அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர்கள் காதலியுங்கள்உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.பொது இடங்களில் உங்களது காமலீலைகளை அரங்கேற்றதீர்கள்.
நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.
Tuesday, March 17, 2009
கடலை போடுவதால் ஆபத்து
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.
Subscribe to:
Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...
-
லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...
-
இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியு...





